என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை ஓட்டல்களில் பிரியாணி, ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி- ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    சென்னை ஓட்டல்களில் பிரியாணி, ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி- ஆஸ்பத்திரியில் அனுமதி

    • இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒரே ஓட்டலின் இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த ஓட்டல்களில் கடந்த 30-ந்தேதி பிரியாணி வாங்கி சாப்பிட்ட 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சஸ்மா, சமீரா ஆகிய இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விக்னேஷ், ரபேக்கா உள்பட 6 பேருக்கு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் 8 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×