என் மலர்
நீங்கள் தேடியது "lakes"
- புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன.
திருவள்ளூர்:
வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என இரு ஆறுகளாக பிரிகிறது.
கேசாவரம் அணைக் கட்டில் நீர் நிரம்பினால் நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி நீர் வெளியேறி வருவதால் கொசஸ்தலை, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல் இந்த அணைக்கட்டின் இன்னொருபுறம் அமைக்கப்பட்ட 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் நீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக 75 கிலோ மீட்டர் சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கும்.
இந்நிலையில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புதுச்சத்திரம் கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் தரைப்பாலம் முழ்கி நீர் செல்வதால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன.
வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன. இதில் 311 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதமும், 185 ஏரிகள் 50 சதவீதமும், 67 ஏரிகள் 25 சதவீதம் 18 ஏரிகள் நிரம்பியுள்ளன.
- கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.
- உக்கோட்டை, சான்டாரா சிட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
வங்கடலில் உருவான ஃபெஞ்ஜல் புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது.
இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 377 ஏரிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 112 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 210 ஏரிகள் என மொத்தம் 699 ஏரிகள் முழுவது நிரம்பி உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் என மொத்தம் 909ஏரிகள் உள்ளன. இதில் 489 ஏரிகள் முழு கொள்ளள எட்டி உள்ளது.
அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளை பட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபதூர் ஏரி , விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கள், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 581 ஏரிகள் உள்ளன. இதில் 210 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதம் 175 ஏரிகளும், 50 சதவீதம் 119 ஏரிகளும், 25 சதவீதம் 73 ஏரிகளும், 20 சதவீதம் 7 ஏரிகளும் நிரம்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கேசாவரம் அணைக்கட்டு திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கேசாவரம் அணைக்கட்டு நிரம்பியதால் 5 ஷட்டர்கள் மூலம் கூவம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பேரம்பாககம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னைக்கு செல்கிறது. இதேபோல் 100 கனஅடி தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் உள்ள கால்வாய் வழியே செல்கிறது.
இதனால்ஏரி கரையோரம் உள்ள நேமம், படூர், குத்தம்பாக்கம், இருளப்பாளையம், உக்கோட்டை, சான்டாரா சிட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பி இருந்தது.
- சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த வாரத்தில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு 74.32 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8.738 டி.எம்.சி. ஆக உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் நீர் மட்டம் 33 அடி தாண்டி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி.யில் 2.573 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1,530 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 3.300 டி.எம்.சி.யில் 2.755 டி.எம்.சி.யும், சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவு ஆன 1.081 டி.எம்.சி.யில் 228 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 2.860 டி.எம்.சி. தண்ணீரும், கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியில் 500 மில்லியன் கனஅடியில் 322 மில்லியன் கனஅடியும் தண்ணீர் நிரம்பியுள்ளது.
கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே தண்ணீர் நிரம்பி இருந்தது. ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதற்கிடையே வங்க கடலில் தற்போது மேலும் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 12-ந்தேதி தமிழகம் நோக்கி வர உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை குடிநீர் ஏரிகள் அடுத்த வாரத்தில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- சென்னையில் உள்ள முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை அடுத்து, நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, சென்னையில் உள்ள முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, பூண்டி ஏரியில் நீர்வரத்து 680 கன அடியாக உள்ளது. அதனால், பூண்டி ஏரியில் தற்போதைய நீர்மட்டம் 22.84 அடியாக உள்ளது.
புழல் ஏரியில் 2928 மில்லியன் கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 17.10 அடியாக உள்ளது.
சோழவரம் ஏரியில், 140 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 2.75 அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில், நீர் இருப்பு 2368 மில்லியன் கன அடி உள்ள நிலையில், நீர் வரத்து 4764 கன அடியாக உள்ளது. இதனால் தற்போதைய நீர் மட்டம் 19.02 அடியாக உயர்ந்துள்ளது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் நீர்வரத்து 30 கன அடி உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 30.34 அடியாக உயர்ந்துள்ளது.
- நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
- 33 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக 174 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும் 215 ஏரிகள் 75சதவீதத்துக்கு மேலும், 241 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 246 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 33 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. இந்த தகவலை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கடந்த 3 நாட்களாக நீடிக்கும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 8895 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளவில் 75 சதவீதம் ஆகும்.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டிவருகிறது. இன்று காலையும் கனமழை கொட்டியது. கடந்த 3 நாட்களாக நீடிக்கும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. இதில் 2755 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080 மி.கனஅடி. இதில் 692மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 197 கனஅடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 3138 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு இன்று காலை நீர்வரத்து 451 கனஅடியாக அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நீர்மட்டம் மீண்டும் எட்டி உள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஏரியில் இருந்து 162 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1874 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 210 கனஅடி தண்ணீர் வருகிறது. 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 436மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 20 கனஅடி தண்ணீர் வருகிறது.10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- 24 மணிநேரமும் இயங்கும் பேரிடர் கால அறை திறப்பு
- சாலைகளில் தேங்கிய மழைநீர், மரங்கள் பொதுப்பணித்துறை ஊழி–யர்கள் மூலம் உடனுக்குடன் அகற்றப்படு–கிறது.
புதுச்சேரி:
புதுவையில் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை மறுநாள் செவ்வாய்க் கிழமை இரவு 8 மணி வரை இடைவிடாமல் 26 மணி நேரம் மழை கொட்டியது.
இந்த தொடர் மழையால் புதுவை பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வருகிறது. இதுகுறித்து புதுவை பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிர–மடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படாமல் இருக்க முதல்-அமைச்சர் ஆணைப்படி அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. 2 நாட்கள் பெய்த மழையின் போது கள ஆய்வு மேற்கொள் ளப்பட்டு முன்னெச்ச–ரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை மூலம் அனைத்து கொம்யூ னில் உள்ள நீர்ப்பாசன வாய்க்கால்கள், பெரிய வாய்க்கால்கள், வரத்து கால்வாய்கள் என மொத்தம் 142 கி.மீ. தூரத்துக்கு தூர் வாரப் பட்டது. நகர பகுதியில் உப்பார், கருவடிக்குப்பம் வாய்க்கால் 3 கி.மீ. தூரத் திற்கு தூர்வாரப்பட்டது.
பாகூர் கொம்மந்தான் மேடு, வடக்கு கரையில் அணைக்கட்டு அருகே மழை யினால் ஏற்படும் வெள்ள பெருக்கை தடுக்க மணல் மூட்டை அடுக்கப்பட்டது. பாகூர் சித்தேரி முதன்மை வாய்க்காலில் தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப் பட்டு, நிலங்களில் இருந்து தண்ணீர் வெளி–யேற்றப்பட்டு வருகிறது.
ஷட்டர்கள் மூலம் கட்டுப் படுத்தி தண்ணீர் ஆற்றுக்கு திருப்பி விடப் படுகிறது. புதுவையில் மொத்தம் உள்ள 84 ஏரி களில் 19 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி–யுள்ளது. 10 தடுப்பணைகள் முழு கொள்ளளவை எட்டி யுள்ளது.
பாவாணர் நகர் பகுதியில் வெள்ளி நீர் பாதிப்பு வராமல் இருக்க தடுப்பு பலகை அமைக் கப்பட்டு மழைநீர் வடிய–விடப்பட்டுள்ளது.
சாலைகள் நகராட்சி மூலம் மேம்படுத்தப்பட உள்ளது. ரெயின்போ நகர் சுற்றியுள்ள பகுதியில் வெள்ள நீர் பாதிப்பு வராமல் தடுக்க மின் மோட்டார் அமைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப் பட்டது. சாலைகளில் தேங்கிய மழைநீர், மரங்கள் பொதுப்பணித்துறை ஊழி–யர்கள் மூலம் உடனுக்குடன் அகற்றப்படுகிறது.
இந்த பணிக்காக 25 ஜே.சி.பி. எந்திரங்கள் மரம் அறுக்கும் கருவிகள் தயார்நிலையில் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர்கால நடவடிக்கை மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.
புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க சுழற்சி முறையில் பணிபுரிய அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். சம்பந்தப் பட்ட துறை அலுவலர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
காஞ்சிபுரம் மாதா கோவில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோவில் தெரு போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி செல்கிறது.
அதேபோல காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு முருகன் காலனி பல்லவர் மேடு போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழையின் காரணமாக உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம்ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல்சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
காஞ்சிபுரம் பகுதியில் மொத்தம் 381- ஏரிகள் உள்ளன. இதில் ஏரிகள் முழுவதும் நிரம்பியது. 28- ஏரிகள் 75-சதவீதம். 63-ஏரிகள் 50 சதவீதம், 175- ஏரிகள் 25 சதவீதம் எட்டி உள்ளது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு இந்த பயன்பாட்டுக்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, உத்திரமேரூர், மணிமங்கலம், போன்ற ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
- 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் என மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், வெளி மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக இந்த ஏரிகள் நிரம்பி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1022 ஏரிகளில் தற்போது வரை 38 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. மேலும் 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பக்கம் ஏரிக்கும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 23 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.5 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் பராமரிப்பு பணி நடைபெற்றது. மதகுகள் தண்ணீர் திறப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏரி முழு கொள்ளளவை எட்டியவுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது.
- பாசன நீர் வழங்கும் ஏரிகளை போர்க்கால அடிப்படையில் புனரமைக்க வேண்டும்.
- விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் முடிகொண்டான் ராஜா, மாநில செயலாளர் உலகநாதன், நிர்வாகிகள் அரவிந்தசாமி, வில்லு ஜெகதீஷ், பவுன்ராஜ், ஜெயபால், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், காவிரி, கல்லணை, வெண்ணாறு ஆகியவைகளின் பாசன வாய்க்கால், இதனுடைய பாசன நீர் வழங்க கூடிய ஏரிகள் போர்க்கால அடிப்படையில் புனரமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் முந்திரி, பலா, சின்ன வெங்காயம், துவரை போன்ற பயிர்கள் மற்றும் கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்களை பயிர் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-23 -ம் ஆண்டில் நெல், உளுந்துக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.
அரியலூர் மாவட்டம் தூத்தூர், தஞ்சை மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவுடன் கூடிய அணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டரம்பாக்கம், கோடுவெளி, கோட்டையூர், கடப்பேரி ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆணையர் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கங்கள் மற்றும் 336 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டரம்பாக்கம், கோடுவெளி, கோட்டையூர், கடப்பேரி ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆணையர் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு ஏரிகளில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது.
- பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுப்ப ணித்துறை, உள்ளாட்சி த்துறை கட்டுப்பாட்டில் ஏரிகள் உள்ளன. பல்வேறு ஏரிகளில், உரிய அனுமதியுடன் அதிக அளவில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது.ஆனால் திண்டிவனம் அய்யன் தோப்பு அருகே உள்ள தாங்கல் ஏரியில் வண்டல் மணல் அள்ளுவது தொடர்கதையாக உள்ளது. பொக்லைன் மூலம், இரவில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு உத்தரவை மீறி, நாளுக்கு நாள் மண் திருட்டு, அதிகரித்து வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணனிடம் கூறுகையில் தாங்கல் ஏரியில் மணல் அல்லுவது பற்றி புகார் வந்துள்ளது. உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .மேலும் அனுமதி இன்றி மணல் அள்ளுவதைப் பற்றி புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.