search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 19 ஏரி, 10 தடுப்பணைகள் நிரம்பியது
    X

    முழு கொள்ளளவை எட்டியுள்ள பாகூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் காட்சி.

    புதுவையில் 19 ஏரி, 10 தடுப்பணைகள் நிரம்பியது

    • 24 மணிநேரமும் இயங்கும் பேரிடர் கால அறை திறப்பு
    • சாலைகளில் தேங்கிய மழைநீர், மரங்கள் பொதுப்பணித்துறை ஊழி–யர்கள் மூலம் உடனுக்குடன் அகற்றப்படு–கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை மறுநாள் செவ்வாய்க் கிழமை இரவு 8 மணி வரை இடைவிடாமல் 26 மணி நேரம் மழை கொட்டியது.

    இந்த தொடர் மழையால் புதுவை பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வருகிறது. இதுகுறித்து புதுவை பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிர–மடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படாமல் இருக்க முதல்-அமைச்சர் ஆணைப்படி அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. 2 நாட்கள் பெய்த மழையின் போது கள ஆய்வு மேற்கொள் ளப்பட்டு முன்னெச்ச–ரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறை மூலம் அனைத்து கொம்யூ னில் உள்ள நீர்ப்பாசன வாய்க்கால்கள், பெரிய வாய்க்கால்கள், வரத்து கால்வாய்கள் என மொத்தம் 142 கி.மீ. தூரத்துக்கு தூர் வாரப் பட்டது. நகர பகுதியில் உப்பார், கருவடிக்குப்பம் வாய்க்கால் 3 கி.மீ. தூரத் திற்கு தூர்வாரப்பட்டது.

    பாகூர் கொம்மந்தான் மேடு, வடக்கு கரையில் அணைக்கட்டு அருகே மழை யினால் ஏற்படும் வெள்ள பெருக்கை தடுக்க மணல் மூட்டை அடுக்கப்பட்டது. பாகூர் சித்தேரி முதன்மை வாய்க்காலில் தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப் பட்டு, நிலங்களில் இருந்து தண்ணீர் வெளி–யேற்றப்பட்டு வருகிறது.

    ஷட்டர்கள் மூலம் கட்டுப் படுத்தி தண்ணீர் ஆற்றுக்கு திருப்பி விடப் படுகிறது. புதுவையில் மொத்தம் உள்ள 84 ஏரி களில் 19 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி–யுள்ளது. 10 தடுப்பணைகள் முழு கொள்ளளவை எட்டி யுள்ளது.

    பாவாணர் நகர் பகுதியில் வெள்ளி நீர் பாதிப்பு வராமல் இருக்க தடுப்பு பலகை அமைக் கப்பட்டு மழைநீர் வடிய–விடப்பட்டுள்ளது.

    சாலைகள் நகராட்சி மூலம் மேம்படுத்தப்பட உள்ளது. ரெயின்போ நகர் சுற்றியுள்ள பகுதியில் வெள்ள நீர் பாதிப்பு வராமல் தடுக்க மின் மோட்டார் அமைக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப் பட்டது. சாலைகளில் தேங்கிய மழைநீர், மரங்கள் பொதுப்பணித்துறை ஊழி–யர்கள் மூலம் உடனுக்குடன் அகற்றப்படுகிறது.

    இந்த பணிக்காக 25 ஜே.சி.பி. எந்திரங்கள் மரம் அறுக்கும் கருவிகள் தயார்நிலையில் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர்கால நடவடிக்கை மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.

    புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க சுழற்சி முறையில் பணிபுரிய அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். சம்பந்தப் பட்ட துறை அலுவலர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×