என் மலர்
நீங்கள் தேடியது "IVF treatment"
- மற்ற குழந்தைகளைப் போல டெஸ்ட் டியூப் பேபியும் நார்மலாக இருக்குமா?
- ஐவிஎஃப், இக்ஸி முறைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?
கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், குழந்தை நம்மைப்போல இருக்குமா? அல்லது தானம் வழங்கியவர்களைப் போல இருக்குமா என்றுதான். இப்படி செயற்கை கருத்தரித்தலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்துள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.
"டெஸ்ட் டியூப் பேபி" முறை ஆரோக்கியமானதா?
ஐவிஎஃப், இக்ஸி முறையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என சொல்கிறோம். 10 பேர் குழந்தை இல்லை என வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் ஐவிஎஃப் பண்ணமாட்டோம். முதலில் அடிப்படை சிகிச்சைகளை அளிப்போம். அந்த சிகிச்சைகளில் சிலர் கருவுறுவார்கள். சிலருக்கு அடிப்படை சிகிச்சை முறைகள் உதவாது. அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற சூழலில்தான், டெஸ்ட் டியூப் பேபி முறையை அறிவுறுத்துவோம். டெஸ்ட் டியூப் பேபி என்றாலே குழந்தை எப்படி இருக்கும்? குழந்தை நார்மலாக இருக்குமா? என்று எல்லோரும் கேட்பார்கள். சாதாரணமாக 100 பேர் கருவுறுகிறார்கள் என்றால், அதில் 97 பேருக்கு குழந்தை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். அதில் 3 சதவீத குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும். இது இயற்கை கருவுறுதலின் சதவீதம்.
அதேபோல அந்த 3-5 சதவீதம் என்பது ஐவிஎஃப் முறையிலும் இருக்கும். இயற்கையாக கருவுறும்போது குழந்தைக்கு பிரச்சனைகள் இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஐவிஎஃப் முறையில் குழந்தைக்கு பிரச்சனை என்றால், அதை பெரிதுப்படுத்தி, ஐவிஎஃப் என்பதால்தான் இப்படி ஆனது என நினைத்துக்கொள்வோம். இயற்கை கருவுறுதலில் என்னென்ன சவால்கள் உள்ளதோ, அதே சவால்கள் ஐவிஎஃப் முறையிலும் உள்ளது. ஐவிஎஃப் முறை நூறு சதவீதம் பாதுகாப்பானது என என்னால் கூறமுடியாது. ஆனால் 97 சதவீதம் அது பாதுகாப்பானதுதான். ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள் அப்நார்மலாக, வித்தியாசமாக இருப்பார்கள் எனக்கூறுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. வெளிநாடுகளில் ஐம்பது வயதில்கூட ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
சிலருக்கு கருப்பைக்கு வெளியில் உள்ள குழாயில் குழந்தை வளருவது ஏன்?
மாதம் மாதம் பெண்களுக்கு சினைப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியே வரும். அந்தநேரத்தில் உடலுறவு கொண்டால், விந்தணுக்கள் நீந்தி சென்று, அதனுடன் இணைந்து கரு உருவாகும். ஒருசிலருக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள குழாயிலேயே கரு தங்கி வளரத்தொடங்கிவிடும். இதனை எக்டோபிக் கர்ப்பம் எனக் கூறுவோம். இந்தக் கருவால் ஆரோக்கியமாக வளர முடியாது. ஏனெனில் குழந்தையை தாங்குவதற்கான அமைப்பு கருக்குழாய்க்கு இருக்காது.
ஆண், பெண் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணங்கள் என்ன?
பொதுவாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பிசிஓடி. முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல்பருமன் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும், குழந்தை இருக்காது. இதனை விவரிக்கப்படாத கருவுறாமை எனக்கூறுவோம். அதுபோல கருக்குழாய் அடைப்பு, ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்டவற்றாலும் பெண்களுக்கு கருவுறுதல் தள்ளிப்போகும். அரிதாக சிலருக்கு முட்டையின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும். அதாவது இளம்வயதிலேயே அவர்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கும்.
ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது, வேகமாக விந்து வெளியேறுதல், விந்துக்கள் வெளியே வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றன.
கருமுட்டை, விந்தணு தானம் என்றால் என்ன?
முன்னர் சொன்னவாறு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கருமுட்டை தீர்ந்துவிடும். அவர்களுக்கு கருமுட்டை இருக்காது. இந்த பிரச்சனை உடைய பெண்கள் கருவுற வேண்டும் என ஆசைப்பட்டால், அவர்களுக்கு வேறு பெண்களிடம் இருந்து முட்டையை தானமாக வாங்கி, அவர்களின் கணவரின் விந்தணுவுடன் இக்ஸி செய்து, கரு உருவாக்கி, அந்த கருவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவோம். இது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் செய்வோம். இது தம்பதியரின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். இதேபோன்றுதான் விந்து தானமும்.
விந்தணு தானம் பெற்று உருவாகும் குழந்தை யார் ஜாடையில் இருக்கும்?
இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் மற்றும் பயம்தான். தானம் பெறுபவர்களுக்கு ஏற்றவாறு உடல்தோற்றத்தை கொண்டவர்களைத்தான் தானம் வழங்குபவராக முதலில் தேர்ந்தெடுப்போம். இப்போது ஒரு பெண்ணுக்கு கருமுட்டை தானம் பெறுகிறோம் என்றால், தானம் தருபவரின் ரத்த வகை, உயரம், எடை, நிறம் போன்றவற்றை பார்த்துதான் தேர்வு செய்வோம். தானம் பெறுபவர், வழங்குபவர் என இரண்டுபேரின் வெளிப்புறத் தோற்றத்தை ஒற்றுமைப்படுத்திதான் தேர்வு செய்வோம். அதுபோலத்தான் விந்தணு தானம் செய்பவர்களையும் தேர்வு செய்வோம். புறத்தோற்றத்தை வைத்துதான் தேர்வு செய்கிறோம் என்பதால், அவர்களின் முட்டை அல்லது விந்து தானம் மூலம் உருவாகும் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்காது.
கருவுற்றவர்கள் இயல்பான வேலைகளை செய்யலாமா?
முதல் மூன்று மாதம் எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் குழந்தை கலைந்துவிடுமோ என்ற பயம். ஆனால் அது அப்படி கிடையாது. முதல் மூன்று மாதத்தில் கரு என்பது உருவாகும். அது ஆரோக்கியமாக உருவானால் அப்படியே தொடரும். எனவே பயம் தேவையில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. சிலருக்கு குறை மாதத்திலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே சில கட்டுப்பாடுகளைக் கூறுவோம். மற்றபடி முழு நேரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.
- ஃபோலிகுலர் என்பது அண்டவிடுப்பினை கண்டறிய உதவும் எளிமையான ஸ்கேன்.
- கருப்பையின் நுண்ணறை வளர்ச்சியை மருத்துவர் ஆராய்வார்.
குழந்தைபேறு வேண்டும் தம்பதியர் கருத்தரிக்க முயற்சித்தும் இயலாத நிலையில் பெண்ணின் அண்டவிடுப்பினை கண்காணித்து அந்த நேரத்தில் திட்டமிடுவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அண்டவிடுப்பின் சுழற்சியை கண்காணிக்க ஒவ்வொரு மாதமும் ஃபோலிகுலர் ஆய்வு செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஃபோலிகுலர் ஆய்வு என்பது அண்டவிடுப்பினை கண்டறிய உதவும் எளிமையான ஸ்கேன் பரிசோதனை. இது மாதவிடாய் கால சுழற்சியில் 9 ஆம் நாளுக்கு பிறகு அண்டவிடுப்பு உண்டாகும் வரை தொடரும். இந்த முட்டை எப்போது வெளிவரும் என்பதை கணக்கிடுவதற்காக கருப்பையின் நுண்ணறை வளர்ச்சியை மருத்துவர் ஆராய்வார். ஏனெனில் இந்த நேரத்தில் தம்பதியர் திட்டமிட்டால் அது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.
ஆய்வுகளின் படி அல்ட்ராசவுண்ட் வழியாக மாதவிடாய் சுழற்சியை கண்காணித்தாலும் கருத்தரிக்க சில மாதங்கள் வரை ஆக கூடும்.
ஒரு பெண் மாதவிடாய் சுழற்சியின் போது அதாவது 9 முதல் 20 நாட்களில் பல முறை ஃபோலிகுலர் ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். இது வலியற்ற செயல்முறை. இதனால் கருப்பையில் இருக்கும் நுண்ணறை வளர்ச்சியை பார்க்க இவை உதவுகிறது.
இது பெண் உறுப்பின் வழியாக செய்யப்படும் பரிசோதனை ஆகும். சோனாகிராஃபர்கள் நுண்ணறைக்குள் முட்டையின் வளர்ச்சியை கண்காணிக்க உதவுகிறது. முட்டையை வெளியிடும் காலத்தை மட்டும் அல்லாமல் இதன் மூலம் மேலும் பல விஷயங்களை காணலாம்.
வளர்ச்சி குறைபாடான நுண்ணறைகள், முன்கூட்டியே சிதைந்த நுண்ணறைகள், கர்ப்பப்பை புறணிக்குள் முட்டையை பொருத்துதல் என எல்லாவற்றையும் இந்த பரிசோதனையின் மூலம் செய்ய முடியும்.
மேலும் இந்த பரிசோதனையின் மூலம் கருச்சிதைவு வரலாறு, ஐவிஎஃப் சிகிச்சை, அண்டவிடுப்பு குறைபாடு போன்றவற்றையும் அறிய முடியும்.
35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கருவுற முயற்சித்து ஒரு வருடம் வரை காத்திருந்தும் கருவுறுதலை சந்திக்காமல் இருந்தால் அவர்களுக்கு இந்த ஃபோலிகுலர் ஆய்வு அவசியம் தேவை. ஏனெனில் இந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை குறைபாடு, பி.சி.ஓ.எஸ் போன்றவற்றை கொண்டிருந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும். அதனால் அண்டவிடுப்பு சுழற்சி நடைபெறாமல் இருக்கும்.
அதே நேரம் கருவுற்தல் மருந்துகள் பயன்படுத்தி ஆறுமாதங்கள் கடந்தும் நீங்கள் கருத்தரிக்கவில்லை என்றால் அது கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஃபோலிகுலர் கண்காணிப்பின் போது பிரச்சனைகள் கண்டறியப்படும் என்றாலும் அது பெண்களின் வயதை பொறுத்தது.
- IVF சிகிச்சை முறை.
- IUI சிகிச்சை முறை.
குழந்தையின்மைக்கு என்ன காரணம்?
ஆணுக்கும், பெண்ணுக்கும் 30 வயதை கடந்தவுடன் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை குறைந்துவிடுகிறது. இதற்கு காரணம் கருமுட்டை குறைந்துவருவதாலோ அல்லது உயிரணுக்கள் செயல்பாடு குறைவாக இருப்பதனால் இருக்கலாம்.

குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெண்கள் செய்ய வேண்டியவை?
மேலும் ஒரு பெண்ணுக்கு அவருடைய இனப்பெருக்க உறுப்புகளான கருப்பை நன்றாக இருக்கிறதா அல்லது கட்டிகள், சதை வளர்ச்சி ஏதும் இருக்கிறதா, பெலோப்பியன் குழாய்களில் அடைப்புகள் ஏதும் இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்ய வேண்டும்.
அடுத்து மிக முக்கியமான விஷயம் கருமுட்டையில் ஒவ்வொரு மாதமும் உருவாகும் கருமுட்டை அல்ட்ரா சவுண்ட் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் பரிசோதனை செய்யப்படும்.
IUI சிகிச்சை
ஆண்களுக்கு விந்தணுக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது, அவர்களுடைய விந்தணுக்களை எடுத்து அதில் தரமான உயிரணுக்களை பிரித்து எடுத்து அதனை ஒரு பெண்ணின் கருப்பையில் சேர்ப்பது தான் IUI சிகிச்சை முறை.
இதை யார் யாருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றால் 30-ல் இருந்து 35 வயதுக்குள் இருக்கும் தம்பதியினருக்கு இந்த சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும். இதற்கு ஒரு பெண்ணின் கருமுட்டையின் தரம் நன்றாக இருக்க வேண்டும், ஆணின் உயிரணுக்களின் தரமும் நன்றாக இருக்க வேண்டும்.
மேலும் முக்கியமாக பெண்ணுக்கு கருப்பை டியூப்களில் அடைப்பு எதுவும் இருக்கக்கூடாது. அதன்பிறகு கருப்பையில் உள்ள எண்டோமெண்ட்ரியம் அது தான் கரு பதியும் இடம் எனவே அது உறுதியாக இருக்க வேண்டும்.
இந்த சிகிச்சை முறையை 30-ல் இருந்து 35 வயதிற்குள் உள்ளவர்களுக்கு மட்டும் குறைந்தது 4 முறை மட்டுமே அளிக்கப்படுகிறது.
40 வயதை தாண்டியவர்களுக்கு இந்த சிகிச்சை பலன் அளிக்குமா என்றால், சற்று சிரமம் தான். 40-ல் இருந்து 45 வயதிற்குள்ளாக ஒரு பெண்ணின் கருமுட்டையின் வளர்ச்சி குறையத் தொடங்குவதால் இந்த சிகிச்சை பலன் அளிக்காது.

IVF சிகிச்சை என்றால் என்ன?
இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத தம்பதிகள் அல்லது கர்ப்பம் நிற்காத பெண்களுக்கு, IVF சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். இந்த செயல்முறை பாதுகாப்பானதாகவும் வெற்றிகரமாகவும் கருதப்படுகிறது. இதனாலேயே இந்த சிகிச்சை இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது.
இதற்கு முதலில், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட கரு எந்த தரத்தில் உள்ளது என்று பார்க்கப்படுகிறது. இரண்டாவது மிக முக்கியமான விஷயம் பெண்ணின் வயது. இந்த இரண்டு விஷயங்களும் சரியானதாக இருந்தால், IVF -ன் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த IVF சிகிச்சைக்கு முன், பெண்ணின் கருப்பையின் திறன் மற்றும் ஆணின் விந்தணுவின் தரம் ஆகியவை ஆராயப்படுகின்றன. அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகு IVF சிகிச்சை அளிக்கப்படுகிறது.
IVF சிகிச்சையில் தம்பதியினர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமன விஷயம் என்னவென்றால் இதில் 2 பகுதி உள்ளது. முதல் பகுதியில் பெண்ணிடம் இருந்து கருமுட்டை எடுப்பது, தரமான கருமுட்டைகளை எடுத்து ஆணின் உயிரணுக்களுடன் சேர்த்து கருவை வளர வைப்பது எல்லாமே லேப்பில் நடக்கும், இரண்டாம் பகுதி எம்ரியோ டிரான்பர் அதாவது உருவான கருவிலேயே நல்ல தரமான கருவை எடுத்து கருப்பையில் சேர்ப்பது. இது தான் IVF சிகிச்சை முறை ஆகும்.






