என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கருச்சிதைவு"
- உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும்.
- கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், உடல் மற்றும் மன மாற்றங்கள் அதிகம் ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ஹார்மோன் மாற்றம் அல்லது உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களால் அவதிப்படுவார்கள். அப்படியான நேரத்தில் ஏற்படும் கருச்சிதைவு அவர்களின் மனதை பெரிதும் பாதிக்கும்.
கருச்சிதைவு என்பது குழந்தை பிறப்பதற்கு முன்னரே கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை கருவிலே உயிரிழப்பது ஆகும். ஒரு தாய் தனது கருவை இழக்கும்போது ஏற்படும் திடீர் சில உடல்நல சிக்கல்களால் உடல் வலிமையை இழப்பது மட்டுமல்லாமல், கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நாளில் இருந்து அவள் திட்டமிட்டிருந்த முழு கனவுகளையும் இழக்கிறாள். கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் மிகுந்த மன உளைச்சலுடன் உயிரற்றவராக உணர்க்கிறார்.
கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே கூட கருச்சிதைவு ஏற்படலாம். எனவே நீங்கள் புள்ளி அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்வது தான் நல்லது.
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்த பிறகு உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதிர்ச்சி மற்றும் அதனால் வரும் மன அழுத்தம் என்பது இயல்பானது. ஆனால் முதலில், கருச்சிதைவின் போது மனச்சோர்வின் அறிகுறிகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.
அறிகுறிகள்
* எரிச்சல் அல்லது விரக்தி உணர்வு
* சோகம், வெறுமை அல்லது நம்பிக்கையற்ற உணர்வு
* பெரும்பாலான அல்லது அனைத்து வழக்கமான நடவடிக்கைகளிலும் ஆர்வம் அல்லது மகிழ்ச்சியை இழப்பது
* வழக்கத்திற்கு மாறாக சோர்வாகவும் கவலையாகவும் இருப்பது
* தூங்குவது மற்றும் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவது
* பயனற்ற அல்லது குற்ற உணர்வு
* விஷயங்களை நினைவில் வைத்து கவனம் செலுத்துவதில் சிரமம்
* மரணம் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகள்
* சீரற்ற வலிகள்
மேற்கூறிய அறிகுறிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தால், ஒரு பெண் குணமடைய மருத்துவரின் ஆலோசனை தேவைப்படலாம்.
கருச்சிதைவுக்குப் பிறகு, கோபம், மனச்சோர்வு போன்றவற்றை அனுபவிப்பது பொதுவானது. ஆனால் கருச்சிதைவுகளால் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்களுக்கு எதிர்காலத்தில் ஆரோக்கியமான கர்ப்பம் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது மற்றும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வது விரும்பத்தகாத அனுபவத்தையும் குற்ற உணர்வையும் போக்க உதவும். இருப்பினும், மனச்சோர்வு கடுமையாக இருந்தால், மருத்துவர்களிடம் செல்லலாம்
சிகிச்சைமுறை
* ஆரோக்கியமான உணவை உண்ணுதல் மற்றும் சரியான நேரத்தில் தூங்குதல், சிறிது ஓய்வுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்தல் உடலைக் குணப்படுத்தும்
* மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைக்க ஆண்டிடிரசண்ட்ஸ்
* துக்கத்தை ஆரோக்கியமான முறையில் சமாளிக்க உதவும் உளவியல் சிகிச்சை
* எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT), அதாவது உங்கள் மூளைக்கு லேசான மின்சாரத்தை பயன்படுத்துதல், ஆனால் இது மன அழுத்தத்தின் கடுமையான நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
- காற்று மாசுபாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
- காற்று மாசுவால் பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
மாசுபட்ட காற்றை சுவாசிப்பது நுரையீரலுக்கு கேடு விளைவிப்பதோடு ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணி பெண்கள் மாசடைந்த காற்றை சில நிமிடங்கள் சுவாசிக்க நேர்ந்தால் கூட கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு 16 சதவீதம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் உத்தா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
காற்று மாசுவை ஏற்படுத்தும் வாயுக்களில் நைட்ரஜன் டை ஆக்சைடு முக்கியமானது. அந்த வாயுவை சுவாசிக்க நேரிடுபவர்களுக்கு உடல்நலக்கோளாறுகள் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வை மேற்கொண்ட மேத்யூ புல்லர் கூறுகையில், "காற்று மாசுபாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. நாளுக்கு நாள் காற்று மாசுவின் வீரியம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உலகளவில் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்கிறார்.
இந்த ஆய்வுக்கு 1,300 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் 28 வயதுக்குட்பட்டவர்கள். கர்ப்பிணிகளும் இதில் இடம் பெற்றனர். காற்று மாசுவால் பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். அதனால் கொரோனா அச்சுறுத்தலுக்கு மட்டுமின்றி எப்போது வெளியே சென்றாலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
