search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sidhu"

    அமைதிக்காக பாடுபடும் நவ்ஜோத் சிங் சித்துவை இந்தியாவில் சிலர் விமர்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தேர்தலில் நின்றாலும் சித்து வெற்றி பெறுவார் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். #Sidhu #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் கர்த்தார்பூர் தனிப்பாதைக்கு பாகிஸ்தானில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்தியாவில் இருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான் அமைதிக்காக பாடுபடும் நவ்ஜோத் சிங் சித்துவை இந்தியாவில் சிலர் விமர்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தேர்தலில் நின்றாலும் சித்து வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-

    இந்த விழாவின்போது நான் கண்ட மகிழ்ச்சியானது மதினா நகரை பார்க்க முடியாமல் எல்லைப்பகுதியில் 4 கிலோமீட்டர் தூரத்தில் காத்திருந்து, பின்னர் மதினாவை காணும் வாய்ப்பு கிடைத்த முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாகும். இந்த மகிழ்ச்சியை இந்தியாவில் உள்ள சீக்கிய மக்கள் இன்று அடைந்துள்ளனர்.


    நமக்குள் இருக்கும் ஒரே பிரச்சனை காஷ்மீர் பிரச்சனைதான். இதை தீர்ப்பதற்கு இருநாட்டிலும் சரியான தகுதி படைத்த தலைவர்கள் இருந்தால் போதும். அப்படி பிரச்சனை தீர்ந்து நமது உறவுகள் பலப்படும்போது நமது சக்தியும், வீரியமும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

    எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காக இந்தியாவில் சித்துவை ஏன் விமர்சிக்கிறார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை. அவர் அமைதியைப் பற்றிதான் பேசினார். அவர் இங்கு வந்து தேர்தலில் போட்டியிடலாம், அவர் வெற்றி பெறுவார். நமது இருநாடுகளுக்கு இடையில் நீடித்த நட்புறவு உருவாகும் வகையில் சித்து இந்தியாவின் பிரதமர் ஆகும் நாளுக்காக நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Sidhu #ImranKhan
    பஞ்சாப் மந்திரி சித்துவை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை:

    தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் உணவு முறைகள் பற்றியும் இழிவாக பேசியதாக பஞ்சாப் மந்திரி சித்துவை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ‘‘தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் உணவு முறை பற்றியும் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்து இழிவாக பேசியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் யாரும் இதை கண்டித்து அறிக்கைவிடவில்லை.

    சித்து கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழ் உணர்வு மிக்க, தமிழர்கள் மீது மதிப்பு வைத்துள்ள பா.ஜனதா போராட்டம் நடத்துகிறது.

    தமிழர்களை இழிவாக பேசிய சித்து மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கையில் தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் துணை போனது. இதனால் 1½ லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். எனவே தமிழர்கள் பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு அருகதை கிடையாது.

    அதே நேரத்தில் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு பா.ஜனதா கட்சி பாடுபட்டு வருகிறது. தமிழ் இனத்தை காக்க தொடர்ந்து பாடுபடு வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் தனஞ்செயன், மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார், நிர்வாகி காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சபரிமலை விவகாரம் குறித்து தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலான அய்யப் பக்தர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்கவில்லை. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மக்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்க வேண்டியதுதான் அரசாங் கத்தின் கடமை.

    நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டவர்கள். சட்டத்தை மீறமாட்டோம் என்று கூறும் கேரள முதல் மந்திரியும், அவர் சார்ந்த கட்சியினரும் சட்டத்துக்கு எதிராக போராடியது இல்லையா? ஜல்லிக்கட்டு போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது தானே. அதை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க தானே செய்தார்கள். எத்தனை தொழிற்சாலைகளில் கோர்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் கள்.

    இப்போது சபரிமலை விவகாரத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய மாட்டோம் என்று பிடி வாதமாக இருப்பது அவர் களது இந்து விரோத உணர்வை வெளிப்படுத்தி உள்ளது. பக்தர்களின் உணர்வுக்கு செவிசாய்க்கா விட்டால் அதற்குரிய பலனை ஆட்சியாளர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பாகிஸ்தான் மீது மிகவும் பற்றுள்ளவராக சித்து இருப்பதால் பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மந்திரி சபையில் சேர்ந்து கொள்ளலாம் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. #BJP #PakistanCabinet

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் நவ்ஜோத்சிங் சித்து.

    ஓய்வுக்கு பிறகு டெலிவி‌ஷன் வர்ணனையாளராக இருந்த அவர் அரசியலுக்கு சென்றார். தற்போது காங்கிரசில் இருக்கும் சித்து பஞ்சாப் மாநில அரசில் கலாச்சார துறை மந்திரியாக இருக்கிறார்.

    இந்த நிலையில் தமிழக கலாச்சாரத்தையும், பாகிஸ்தான் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு சித்து பேசினார். இமாச்சல பிரதேச மாநிலம் கசோலியில் நடந்த இலக்கிய திருவிழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் கலாச்சாரம் மொழி, உணவுகள் எனக்கு ஒத்து வராது. என்னால் தினமும் இட்லி சாப்பிட இயலாது. ஆனால் பஞ்சாப் கலாச்சாரமும், பாகிஸ்தான் கலாச்சாரமும் மொழியும், உணவு பழக்க வழக்கமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதனால் தென் இந்தியாவை விட பாகிஸ்தான் மக்களுடன் வாழ்வது எனக்கு எளிதானது.

    இவ்வாறு சித்து பேசினார்.

    சித்துவின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

     


    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பத் பத்ரா இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மீது மிகவும் பற்றுள்ளவராக சித்து இருப்பதால் பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மந்திரி சபையில் சேர்ந்து கொள்ளலாம். அதுதான் அவருக்கு எங்களுடைய கனிவான அறிவுரையாகும்.

    சித்து தனது பேச்சில் தென் இந்தியாவை விட பாகிஸ்தான் உயர்ந்தது எனது தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. நாட்டை தென் இந்தியா, வட இந்தியா என்று பிரிப்பதே காங்கிரசின் சதி திட்டமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான ஜி.வி.எல். நரசிம்மராவ் இது தொடர்பாக கூறியதாவது:-

    சித்துவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு தென் இந்தியர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். மேலும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்று அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டியணைத்து சித்து ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருந்தார். தற்போது அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். #BJP #PakistanCabinet

    தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்து, இரு நாட்டு அமைதிக்கான தூதர் என பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் புகழாரம் சூட்டியுள்ளார். #ImranKhan #NavjotSinghSidhu #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் சமீபத்தில் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில மந்திரி நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். நிகழ்ச்சி அரங்கில் அந்நாட்டு ராணுவ தளபதிவை சித்து கட்டியணைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபருக்கு அருகே சித்து அமர்ந்திருந்தார். இந்த சர்ச்சைகளுக்கு பதில் கூறிய சித்து, “நான் உட்காரும் இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. விழா தொடங்க 5 நிமிடம் இருக்கும் போது முன் வரிசையில் அமருமாரு கூறினார்கள். அவர்கள் எங்கு அமர சொன்னார்களோ அங்கே அமர்ந்தேன்” என்று விளக்கம் அளித்தார்.

    மேலும், “விழாவில் நான் கலந்து கொண்டது அரசியலுக்காக அல்ல. பழைய நண்பர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று தான் சென்றேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், லாஹூருக்கு பேருந்தில் சென்றிருக்கிறார். பிரதமர் மோடி, திடீரென பாக்., பிரதமர் இல்லத்துக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது நவாஸ் ஷரீப்பை மோடி கட்டி அணைத்தார். ஆனால் யாரும் மோடியிடம் கேள்வி எழுப்பவில்லையே ஏன்?” என்று சுட்டிக் காட்டி பேசியுள்ளார் சித்து.

    பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவெத் பாஜ்வாவை கட்டி அணைத்த விவகாரத்துக்கு பதில் அளித்த அவர், “ அது ஒரு உணர்வு பூர்வமான செய்கையே” என்றார். 

    “ பாகிஸ்தான் ராணுவ தளபதி, இந்தியாவின் தேரா பாபா நானக் வளாகத்திலிருந்து குருத்வார் கர்தார்பூர் சாஹிப்க்கான வழியை திறக்க முயற்சி செய்வதாக கூறினார். அதனை அடுத்து நடந்தது, உணர்வு பூர்வமானது” என்று கட்டி அணைத்ததற்கு விளக்கம் அளித்திருந்தார்.

    இந்நிலையில், சித்துவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான தூதர் என பாராட்டியுள்ளார். “பாகிஸ்தான் வந்து எனது பதவியேற்பு விழாவுக்கு வந்ததற்காக நான் சித்துவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர் அமைதிக்கான தூதர். அவரை குறிவைத்து தாக்கும் சிலர் துணைக்கண்டத்தில் அமைதி நிலவ விரும்பவில்லை. அமைதி இல்லாமல் மக்கள் முன்னேற முடியாது” என இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார்.

    இருநாடுகளும் முன்னோக்கி செல்ல, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
    இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் தலைமை தளபதியை பஞ்சாப் மந்திரி சித்து கட்டியணைத்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #Pakistan #ImranKhan #Congress #BJP #Punjab #NavjotSinghSidhu
    அகமதாபாத்:

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார். இவரது பதவியேற்பு விழாவுக்கு அவரது நண்பரும், பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டார். அப்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதி மன்சூன் கானுக்கு அருகே சித்துவுக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, அந்த பதவியேற்பு விழாவில் அந்நாட்டின் தலைமை தளபதியுடன் சித்து கட்டியணத்து கலந்துரையாடினார்.

    இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மந்திரியின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பஞ்சாப் மாநில பாஜக தலைவர் ஷ்வைத் மாலிக், சித்துவின் இந்த செயல் வெட்கக்கேடான செயல் என கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜனாதிபதி அருகே அளிக்கப்பட்ட இருக்கையை சித்து ஏன் மறுக்கவில்லை? எனவும் வினவியுள்ளார்.



    தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர்கள் கொல்லப்படும் இந்த நேரத்தில் அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதியை சித்து கட்டியணைத்ததன் மூலம், இந்திய வீரர்களை கொன்றதற்கு நன்றி தெரிவித்தாரா? என ஷ்வைத் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த செயலுக்கு சித்து நிச்சயம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதேபோல், ஷிரோமணி அகாலி தளம் கட்சியும் சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவால் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், சித்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதன் மூலம் நல்லொழுக்கத்தை தகர்த்து விட்டார் என சாடியுள்ளது.

    காங்கிரஸ் மந்திரி நவ்ஜோத் சிங் சித்துவின் இந்த செயலுக்கு  பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. #Pakistan #ImranKhan #Congress #BJP #Punjab #NavjotSinghSidhu
    பாகிஸ்தானில் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில மந்திரி சித்துவுக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதிக்கு அருகில் இருக்கை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ImranKhan #PakistanNewPM #NavjotSinghSidhu
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவரான இம்ரான் கான் இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவுக்கு நெருங்கிய நண்பர்கள் உட்பட சிலரையே இம்ரான் கான் அழைத்திருந்தார். அவ்வாறு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    தனது நண்பரின் இந்த அழைப்பை ஏற்று சித்து இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அப்போது மரியாதை நிமித்தமாக பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவத் பஜ்வாவை கட்டியணைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கான விருந்தினர்களுக்கான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதி மசூன் கானுக்கு அருகே இந்திய மந்திரி சித்துவுக்கு இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை விமர்சித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்தியாவில் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது தொடர்பான விவகாரம் ஐ.நா சபையில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #PakistanNewPM #NavjotSinghSidhu
    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் சித்து, கபில்தேவ் கலந்து கொள்கிறார்கள். #ImranKhan #pakistanpm

    சண்டிகார்:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார்.

    இந்த பதவி ஏற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஒப்புதலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

    இது தொடர்பாக பஞ்சாப் கேபினட் மந்திரியான நவ்ஜோத் சிங் சித்து கூறிதாவது:-


    இம்ரான்கானின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவரது கட்சியின் அலுவலகத்தில் இருந்து இந்த அழைப்பிதழ் வந்துள்ளது. இது தவிர இம்ரான்கான் தனிப்பட்ட முறையில் எனக்கு போன் செய்து அழைப்பு விடுத்தார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், பஞ்சாப் முதல்- மந்திரி அம்ரீந்தர்சிங் அலுவலகத்திடம் தகவல் தெரிவித்து விட்டேன்.

    கபில்தேவிடமும் பேசினேன். அவருக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அவரும் விழாவில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு சித்து கூறியுள்ளார்.

    ஆனால் மற்றொரு முன்னாள் வீரரான கவாஸ்கர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடியாததை இம்ரானிடம் போனில் தெரிவித்து விட்டேன். இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்ய ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதனால் இம்ரானின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன்.

    இம்ரான்கான் எனக்கு பல ஆண்டு நண்பர் ஆவார். அவர் ஒரு நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளது மிகப் பெருமையான வி‌ஷயம். பல முறை இந்தியா வந்துள்ள அவர் எளிமையாக அனைவருடனும் பழகக் கூடியவர். இதனால் இந்தியா உடனான அவரது உறவு நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார். #ImranKhan #pakistanpm

    பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என என பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். #Sidhu #AdvanceLSPolls
    பாக்வாரா:

    பஞ்சாப் மாநில உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, பக்வாரா நகரின் பங்கா சாலையில் அமைக்கப்பட்டுள்ள பன்னடுக்கு கார் பார்க்கிங் மற்றும் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லத்தில் கட்டப்பட்டுள்ள ஆடிட்டோரியத்தை இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு உள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான். பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கும். 

    மாநிலம் முழுவதும் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடங்கும். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுஷில் ரிங்குவை சமாதானப்படுத்த உள்ளேன். 

    மாநிலத்தில் உள்ள 30 சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கு ரூ.590 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர், பிரிட்டனில் இருந்து சர்வதேச சுற்றுலா செயற்பாட்டாளர்களை அழைக்க உள்ளேன். 

    இவ்வாறு அவர் பேசினார். #Sidhu #AdvanceLSPolls 
    ×