search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AAP leader"

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்பி ஹரிந்தர் சிங் கல்சா, இன்று பாஜகவில் இணைந்தார். #LokSabhaElections2019 #SAD #HarinderSinghKhalsa
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிந்தர் சிங் கல்சா. ஷிரோமணி அகாலி தளம் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கல்சா, அந்த கட்சி சார்பில் பதிண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996 முதல் 1998 வரை எம்பியாக இருந்தார். பின்னர் 2014ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அவர், பதேகர் சாகிப் தொகுதியில் (தனி) இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015ல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று டெல்லியில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு பாஜக, ஷிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஷிரோமணி அகாலி தளம் 10 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இதில், பதேகர் சாகிப் தொகுதியில் ஷிரோமணி அகாலி தளம் சார்பில், முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தர்பரா சிங் குரு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அகாலி தளம் இன்னும் தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. #LokSabhaElections2019 #SAD #HarinderSinghKhalsa
    ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். #RafaleRow #NirmalaSitharaman #AAP
    புதுடெல்லி:

    ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.



    அதில், “இந்த ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் சர்ச்சைகளால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். டசால்ட் ஏவியேசன், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போர் விமானங்களை தயாரிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த ஒப்பந்தம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை 3 நாட்களில் நிறைவேற்றாவிட்டால், கோர்ட்டை அணுகுவோம்‘” என்று அவர் கூறியுள்ளார்.  #RafaleRow #NirmalaSitharaman #AAP
    ×