search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Massachusetts"

    • லாட்டரி பரிசு வெல்பவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
    • வென்றவர்களின் தகவல்களை தரும் கடைக்காரர்களுக்கும் கமிஷன் வழங்கினார்

    வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம் மசாசுசெட்ஸ் (Massachusetts). இதன் தலைநகரம் பாஸ்டன் (Boston).

    1990களின் ஆரம்பத்தில் லெபனான் நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வாடர்டவுன் பகுதியில் வசித்து வந்தவர் 63 வயதான அலி ஜாஃபர் (Ali Jaafar). இவருக்கு யூசெஃப் (Yousef) மற்றும் மொஹமெட் (Mohamed) என இரு மகன்கள் உள்ளனர்.

    அலி செல்போன் பயனர்களுக்காக ஒரு ப்ரீபெய்டு சிம் கார்டு கடை நடத்தி வந்தார். இதன் மூலம் அலிக்கு பலர் அறிமுகமானார்கள்.

    கடந்த 2011ல் பணத்தேவைக்காக அலி ஜாஃபர் ஒரு புதிய திட்டம் தீட்டினார்.

    மசாசுசெட்ஸ் மாநில வருமான துறை சட்டங்களின்படி அம்மாநிலத்தில் லாட்டரி பரிசுச்சீட்டில் பெரும் தொகையை வெல்பவர்கள், சுமார் 30 சதவீதத்திற்கும் மேல் வருமான வரி செலுத்த வேண்டும். இதை தவிர்க்க பரிசை வென்றவர்கள் வழிமுறைகளை தேடி வந்தனர்.

    இதையறிந்த அலி, பரிசுச்சீட்டு வென்றவர்களை தேடிச்சென்று, அந்த பரிசு சீட்டை, வென்ற தொகையை விட குறைவாக கொடுத்து பெற்று கொள்வார். வென்றவர்கள், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரித்தொகை சேமிக்கப்படுவதால், இதற்கு சம்மதித்தனர்.

    அந்த பரிசுச்சீட்டை தான் வாங்கியதாக கூறி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காண்பித்து வங்கியின் மூலமாக பரிசுத்தொகையை அலி பெற்று கொள்வார். அத்துடன் தான் பல பரிசுச்சீட்டுகள் வாங்கியதாகவும் அவற்றில் அனைத்திற்கும் பரிசு கிடைக்காமல் நஷ்டம் அடைந்ததாக வருவாய்த்துறைக்கு கணக்கு காட்டி தானும் வரி கட்டாமல் தப்பித்தார்.

    "10 பர்சென்டிங்" (10 Percenting) என அந்நாட்டில் அழைக்கப்படும் இந்த நூதன மோசடியில் உண்மையாக வென்றவர்களுக்கும், பரிசுச்சீட்டு நிறுவனத்திற்கும் ஒரு மறைமுக தரகராக அலி செயல்பட்டார்.

    2011ல் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்த அலி, 136 லாட்டரி சீட்டுகளை அந்த வருடம் வென்றதாக காட்டி பணம் பெற்றார். 2012ல், 214 பரிசுச்சீட்டுகளில் வென்றதாக பணம் பெற்றார். 2013ல் தனது இரு மகன்களையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி 867 லாட்டரி டிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அலி குடும்பத்தினர் பெற்று கொண்டனர்.

    பரிசுத்தொகை எந்த சீட்டிற்கு விழுந்திருக்கிறது என்பதை கடைக்காரர்கள் அலிக்கு தெரிவிப்பார்கள். இதில் அவர்களுக்கும் ஒரு தொகையை அலி, கமிஷனாக வழங்கினார்.

    அடிக்கடி லாட்டரி பரிசு வெல்லும் அலி குறித்து 2019ல் அம்மாநில லாட்டரி ஆணைய செயல் இயக்குனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் அலி சிக்கி கொண்டார். இவ்வழக்கில் அவருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை அலி குடும்பத்தினர் ரூ.166 கோடி ($20 மில்லியன்) அளவிற்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 

    • இந்நிறுவனம் "பக்வி ஒன் சிப் சேலஞ்ச்" எனும் பெயரில் ஒரு போட்டியை நடத்தி வருகிறது
    • பள்ளிக்கு சென்ற சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது

    பிரபல அமெரிக்க பன்னாட்டு சாக்லெட் தயாரிப்பு நிறுவனமான ஹெர்ஷே நிறுவனத்தால் நடத்தப்படுவது ஆம்ப்ளிஃபை ஸ்னாக் பிராண்ட்ஸ்.

    ஆம்ப்ளிஃபை, டார்டில்லா எனப்படும் சோளமாவு மற்றும் கோதுமை மாவினால் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் பாப்கார்ன் வகை உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் "பக்வி ஒன் சிப் சேலஞ்ச்" (Paqui One Chip Challenge) எனும் பெயரில் ஒரு போட்டியை நடத்தி வருகிறது.

    பெரியவர்களுக்கும், நல்ல உடல்நிலையும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கு பெற அந்நிறுவனம் வலியுறுத்துகிறது. இந்த போட்டியில், அந்நிறுவனம் தயாரிக்கும் கரோலினா ரீபர் மற்றும் நாகா வைபர் எனும் காரமான மிளகுப்பொடி தூவப்பட்ட ஒரே ஒரு சிப்ஸ், ஒன்றை மட்டுமே ஒருவர் உண்டு எவ்வளவு நேரம் ஏதும் குடிக்காமலும், உண்ணாமலும் இருக்க முடியும் என்பது கணக்கெடுக்கப்படும். அதன்படி வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவர்.

    இந்த ஒரே ஒரு சிப்ஸ், மண்டை ஓட்டு அடையாளமிடப்பட்ட சவப்பெட்டி போன்ற தோற்றமுடைய ஒரு சிறு அட்டைபெட்டியில் விற்பனை செய்யப்படுகிறது.

    அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தை சேர்ந்த 10-வது படிக்கும் ஹாரிஸ் வோலோபா எனும் 14-வயது சிறுவன் இப்போட்டியில் தானாக பங்கு பெற விரும்பி இதனை இணையதளம் வழியாக ஆர்டர் செய்தான். ஆர்வத்துடன் அதை உண்ட அச்சிறுவனுக்கு பள்ளிக்கு சென்றதும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள செவிலியர் ஒருவரை அவன் தொடர்பு கொண்டதும், அவர் அவனை பரிசோதித்து முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

    வீட்டிற்கு வந்த அவன் சிறிது நேரத்தில் நினைவிழந்தான். அவசர உதவி அழைக்கப்பட்டு, காவல்துறையினரும் வந்த போது அவன் சுவாசமின்றி கிடந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மருத்துவர்கள் முயன்றும் நினைவு திரும்பாமல் ஹாரிஸ் உயிரிழந்தான்.

    செய்தி பரவியுடன் அந்த சிப்ஸ் பாக்கெட்டுகள், விற்பனை கூடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×