search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lottery ticket"

    • முத்துமங்களம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.
    • அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கான எண்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

    முத்தூர்:

    முத்தூர் அருகே முத்துமங்களம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முத்துமங்களம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர். இதில் முத்தூர் ந.கரையூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன்(வயது 55) என்பவர் லாட்டரி சீட்டுகளின் நம்பர்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளுக்கான எண்கள் கொண்ட 3 துண்டு சீட்டு டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி பரிசு வெல்பவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்
    • வென்றவர்களின் தகவல்களை தரும் கடைக்காரர்களுக்கும் கமிஷன் வழங்கினார்

    வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம் மசாசுசெட்ஸ் (Massachusetts). இதன் தலைநகரம் பாஸ்டன் (Boston).

    1990களின் ஆரம்பத்தில் லெபனான் நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வாடர்டவுன் பகுதியில் வசித்து வந்தவர் 63 வயதான அலி ஜாஃபர் (Ali Jaafar). இவருக்கு யூசெஃப் (Yousef) மற்றும் மொஹமெட் (Mohamed) என இரு மகன்கள் உள்ளனர்.

    அலி செல்போன் பயனர்களுக்காக ஒரு ப்ரீபெய்டு சிம் கார்டு கடை நடத்தி வந்தார். இதன் மூலம் அலிக்கு பலர் அறிமுகமானார்கள்.

    கடந்த 2011ல் பணத்தேவைக்காக அலி ஜாஃபர் ஒரு புதிய திட்டம் தீட்டினார்.

    மசாசுசெட்ஸ் மாநில வருமான துறை சட்டங்களின்படி அம்மாநிலத்தில் லாட்டரி பரிசுச்சீட்டில் பெரும் தொகையை வெல்பவர்கள், சுமார் 30 சதவீதத்திற்கும் மேல் வருமான வரி செலுத்த வேண்டும். இதை தவிர்க்க பரிசை வென்றவர்கள் வழிமுறைகளை தேடி வந்தனர்.

    இதையறிந்த அலி, பரிசுச்சீட்டு வென்றவர்களை தேடிச்சென்று, அந்த பரிசு சீட்டை, வென்ற தொகையை விட குறைவாக கொடுத்து பெற்று கொள்வார். வென்றவர்கள், அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரித்தொகை சேமிக்கப்படுவதால், இதற்கு சம்மதித்தனர்.

    அந்த பரிசுச்சீட்டை தான் வாங்கியதாக கூறி, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காண்பித்து வங்கியின் மூலமாக பரிசுத்தொகையை அலி பெற்று கொள்வார். அத்துடன் தான் பல பரிசுச்சீட்டுகள் வாங்கியதாகவும் அவற்றில் அனைத்திற்கும் பரிசு கிடைக்காமல் நஷ்டம் அடைந்ததாக வருவாய்த்துறைக்கு கணக்கு காட்டி தானும் வரி கட்டாமல் தப்பித்தார்.

    "10 பர்சென்டிங்" (10 Percenting) என அந்நாட்டில் அழைக்கப்படும் இந்த நூதன மோசடியில் உண்மையாக வென்றவர்களுக்கும், பரிசுச்சீட்டு நிறுவனத்திற்கும் ஒரு மறைமுக தரகராக அலி செயல்பட்டார்.

    2011ல் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்த அலி, 136 லாட்டரி சீட்டுகளை அந்த வருடம் வென்றதாக காட்டி பணம் பெற்றார். 2012ல், 214 பரிசுச்சீட்டுகளில் வென்றதாக பணம் பெற்றார். 2013ல் தனது இரு மகன்களையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி 867 லாட்டரி டிக்கெட்டுக்கான பரிசுத்தொகையை அலி குடும்பத்தினர் பெற்று கொண்டனர்.

    பரிசுத்தொகை எந்த சீட்டிற்கு விழுந்திருக்கிறது என்பதை கடைக்காரர்கள் அலிக்கு தெரிவிப்பார்கள். இதில் அவர்களுக்கும் ஒரு தொகையை அலி, கமிஷனாக வழங்கினார்.

    அடிக்கடி லாட்டரி பரிசு வெல்லும் அலி குறித்து 2019ல் அம்மாநில லாட்டரி ஆணைய செயல் இயக்குனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் அலி சிக்கி கொண்டார். இவ்வழக்கில் அவருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை அலி குடும்பத்தினர் ரூ.166 கோடி ($20 மில்லியன்) அளவிற்கு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 

    • இதையடுத்து திருவெண்ணைநல்லூர் கடை வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • குச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவெண்ணைநல்லூர் கடை வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களை திருவெ ண்ணை நல்லூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடமிருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தையும், 300 லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திருவெண்ணை நல்லூர் காந்திக்குப்பம் வள்ளுவர் தெருவை சேர்ந்த வையாபுரி (வயது 65), உளுந்தூர்பேட்டை வட்டம் கொரட்டூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமரன் (42) என்பது தெரியவந்தது. 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது.
    • தமிழகத்தை சேர்ந்தவர் எடுத்துச் சென்ற லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்த விவரம் மட்டும் தெரிந்திருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. இவை தவிர பண்டிகை நாட்களையொட்டி சிறப்பு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலுக்காக 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதில் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தது. இது கடந்த ஆண்டு ஓணம் பம்பர் விற்பனையை விட 9 லட்சம் அதிகமாகும்.

    ஓணம் பம்பர் முதல் பரிசு ரூ.25 கோடியாகும். 2-ம் பரிசு ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.50 லட்சம் வீதம் 20 பேருக்கும், இவை தவிர மொத்தம் 5 லட்சத்து 35 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மொத்த பரிசு தொகை ரூ.125 கோடியே 54 லட்சம் ஆகும். இதில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் லாட்டரி பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஓணம் பம்பர் குலுக்கல் முடிவுகள் நேற்று முன்தினம் பிற்பகல் வெளியிடப்பட்டது.

    இதில் முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது. அந்த லாட்டரி எண் TE 230662 ஆகும். ஆனால் முதல் பரிசு ரூ.25 கோடி பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது.

    தமிழகத்தை சேர்ந்தவர் எடுத்துச் சென்ற லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்த விவரம் மட்டும் தெரிந்திருந்தது. இந்தநிலையில் நேற்று திருப்பூரை சேர்ந்த நடராஜன் உள்பட 4 பேர் ஒன்றாக சேர்ந்து எடுத்த டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்த தகவல் தெரிய வந்தது.

    அதாவது அந்த டிக்கெட்டுடன் 4 பேரும் நேற்று திருவனந்தபுரம் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு நேரில் வந்து பரிசு வினியோக பிரிவில் ஒப்படைத்தனர். பாலக்காட்டில் சிகிச்சை பெற்று வந்த நபரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு திருப்பூர் திரும்பும் வழியில் வாளையாரில் எடுத்த 3 டிக்கெட்டில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்ததாக அவர்கள் லாட்டரி அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது.
    • நண்பர்கள் இருவரும் தகராறு நடக்கும்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி நடத்தப்பட்டு வருகிறது. ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம். அதில் பரிசுகள் கோடிகள் மற்றும் லட்சங்களில் கொடுக்கப்படும் என்பதால் லட்சக்கணக்கானோர் லாட்டரி சீட்டுகளை வாங்குவார்கள்.

    தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டது. விற்பனைக்காக மொத்தம் 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. அவற்றில் 74.51 லட்சம் லாட்டரி சீட்டுகள் விற்பனையாகின. அவற்றுக்கான குலுக்கல் நேற்று நடந்தது.

    தங்களுக்கு பரிசு விழுமா? என்ற ஆவலில் லாட்டரி சீட்டு வாங்கிய அனைவரும் நேற்று காலை முதலே எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தேவலக்கரை பகுதியை சேர்ந்த தேவதாஸ்(வயது37) என்பவர் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார்.

    அதனை தனது நண்பரான அஜித் (39)என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார். நேற்று குலுக்கல் தினம் என்பதால், தனது லாட்டரி சீட்டை தேவதாஸ கேட்டிருக்கிறார். ஆனால் அஜித் தர மறுத்திருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அஜித், தன்னிடம் இருந்த கத்தியால் தேவதாசை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த தேவதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அஜித்தை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தேவதாஸ் மற்றும் அவரை கொன்ற அஜித் ஆகிய இருவரும் விறகு வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளனர்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் தகராறு நடக்கும்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் ஆத்திரத்தில் தேவதாசை கத்தியால் குத்தி அஜித் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

     கடலூர்:

    பண்ருட்டி பங்களா தெரு பிள்ளையார் கோவில் அருகில் பண்ருட்டி டி.எஸ்.பி சபியுல்லா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து புதுப்பேட்டை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த சம்பத் என்பவரது மகன் முருகன் (வயது 20) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து தங்கம், நல்ல நேரம், குமரன், விஷ்ணு உள்ளிட்ட 91 லாட்டரி சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

    • தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார்.
    • லாட்டரி சீட்டுகளுடன் இருந்த பார்த்த சாரதியை சுற்றி வளைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் டி.புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 40). இவர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு லாட்டரி சீட்டுகளை விநியோக மும் செய்து வந்தார். லாட்டரி சீட்டு விற்றது தொடர்பாக பார்த்தசாரதியை கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம் மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் பார்த்தசாரதி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தாக போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்று இரவு கிடைத்தது. உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளுடன் இருந்த பார்த்த சாரதியை சுற்றி வளைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து அவரிட மிருந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எங்கி ருந்து கிடைக்கிறது? யார் யாருக்கெல்லாம் விநியோ கம் செய்தார் என்பன போன்ற கோணங்களில் உளுந்தூர் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்டிகை காலங்களில் நடத்தப்படும் சிறப்பு குலுக்கலில் ஒரு லாட்டரி டிக்கெட்டே அதிக விலைக்கு விற்கப்படும்.
    • திடீரென அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டரை தூக்கியெறிந்து உடைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் அரசு மூலமாகவே விற்கப்படுகின்றன. புத்தாண்டு, ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நடத்தப்படும் பம்பர் குலுக்கல் மிகவும் பிரபலமாகும்.

    அதில் வாடிக்கையாளர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. இதனால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான தமிழகம் மற்றும் கேரளாவுக்கு சுற்றுலா வரக்கூடிய வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கிச் செல்வார்கள்.

    பரிசுத்தொகை கோடி, லட்சம், ஆயிரம் என வழங்கப்படுவதால் அனைத்து தரப்பினரும் லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள். இவ்வாறு லாட்டரி சீட்டுகளை வாங்கிய தன் மூலம் அதிக பரிசுத் தொகையை பெற்று பலரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது.

    பண்டிகை காலங்களில் நடத்தப்படும் சிறப்பு குலுக்கலில் ஒரு லாட்டரி டிக்கெட்டே அதிக விலைக்கு விற்கப்படும். அப்படிப்பட்ட நேரத்தில் கஷ்டப்பட்டவர்கள் குழு வாக ஒன்றிணைந்து லாட்டரி சீட்டை வாங்குகிறார்கள். அப்படி வாங்கி லட்சக்கணக்கில் பரிசுத்தொகையை வென்றவர்களும் இருக்கிறார்கள்.

    சமீபத்தில் துப்புரவு தொழில் செய்யும் 11 பெண்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு குலுக்கலில் அதிகத்தொகை கிடைத்தது. குலுக்கலில் ஏராளமானோருக்கு பரிசு வழங்கப்படுவதால் எப்படியும் பரிசு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பலர் சிறப்பு குலுக்கலின்போது லாட்டரி சீட்டுகள் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

    அப்படி லாட்டரி சீட்டுகளை வாங்கியபடி இருந்த ஒருவர், குலுக்கலில் தனக்கு பரிசு விழாத ஆத்திரத்ததில் லாட்டரி அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கிறார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    பத்தினம்திட்டா மாவட்டம் நாரங்கனம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது45). லாட்டரி ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் இவர், லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்காக மாவட்ட லாட்டரி அலுவலகத்திற்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ வந்து சென்றிருக்கிறார்.

    இந்நிலையில் அவர் சட்டை அணியாமல் காவி வேட்டி மட்டும் அணிந்தபடி அரை நிர்வாண கோலத்தில் மாவட்ட லாட்டரி அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், திடீரென அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பிரிண் டரை தூக்கியெறிந்து உடைத்தார்.

    மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார். அது மட்டுமின்றி அலுவலகத்துக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டர் விடுத்தார். கிருஷ்ண குமாரின் இந்த செயலால் லாட்டரி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெண் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.

    இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட கிருஷ்ணகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதிர்ஷ்ட குலுக்கலில் தனக்கு பரிசு விழாத ஆத்திரத்தில் லாட்டரி அலுவலத்தை கிருஷ்ணகுமார் அடித்து உடைத்து சூறையாடியது தெரியவந்தது.

    இதையடுத்து கிருஷ்ண குமார் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    • முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும்.
    • கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில லாட்டரி துறையின் சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு முக்கிய பண்டிகை காலங்களில் அதிக பரிசுதொகையுடன் கூடிய லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.

    அதன்படி கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனை கடந்த 27-ந் தேதி மாநிலத்தில் தொடங்கியது. முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி குலுக்கல் நடக்கிறது.

    நாட்டிலேயே இதுதான் அதிகபட்ச பரிசுத் தொகை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. விற்பனை தொடங்கிய நாளில் இருந்து கடந்த 15-ந் தேதி வரை 20 லட்சத்து 50 ஆயிரம் சீட்டுகள் விற்பனையாகி உள்ளது. டிக்கெட் விற்பனையில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்திலும் திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

    கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி லாட்டரி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 30 லட்சம் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட அனுமதி உள்ளது. முதல் பரிசு பெறுபவர் 30 சதவீத வருமானவரிக்கு பிறகு சுமார் ரூ.17.5 கோடியை பெறுவார் என்றார்.

    • சந்தே கத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • லாட்டரி சீட்டு விற்பனை செய்த ராஜூவ்காந்தி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று இரவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராஜேந்திர சோழகன் பகுதியில் சந்தே கத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகனை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த ராஜூவ்காந்தி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று ஜோலாபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பொன்னேரி கூட்ரோடு அருகே உள்ள டீக்கடையில் ஒருவர் சந்தேகப்படும்படி இருந்தார். அவரை பிடித்து விசா ரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

    இதனையடுத்து அவரை சோதனை செய்ததில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 84 வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்பொன்னேரி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (வயது 42) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து.அவரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருவெண்ணை நல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 2 பேரும் எடப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூரை அடுத்த மண்டகமேடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49), இளந்துறையை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர்கள் 2 பேரும் எடப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.

    ×