என் மலர்
நீங்கள் தேடியது "lottery ticket"
- திருவெண்ணைநல்லூர் அருகே பஸ் நிறுத்தம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றனர்.
- நாகராஜன் தலைமையிலான போலீசார் பார்த்து அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே பெண்ணை வலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேப்பன் (வயது 49), முருகன் (39) . இவர்கள் நேற்று திருவெண்ணைநல்லூர் அருகே பஸ் நிறுத்தம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றனர். இதை அந்த வழியாக ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பார்த்து அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வேப்பன் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டபோது ஒரு நபர் லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளார்.
- கைது செய்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் நகர போலீசார் வண்டி கேட் அருகே ரோந்து பணியை மேற்கொண்டபோது ஒரு நபர் லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளார். தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திய போது பள்ளிப்படை பூதகேணி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அன்வர்தீன் (63) என்பவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- விழுப்புரம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத் தில் கடந்த ஒரு ஆண்டுகளாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1- ம் நம்பர் மற்றும் 2- ம் நம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்வது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மறை முகமாக சிறுசிறு டீக்கடை களில் ஓரமாக பைகளை வைத்துக்கொண்டு இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது ஆங்காங்கே நடை பெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீ நாதாவிற்கு வந்த தகவலின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டம் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் அமைக்கப்பட்டு இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையி–லான தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் மரகண்ட நல்லூர் கடைவீதி–யில் டீ கடை ஓரமாக சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த னர். அதில் அவர் அரகண்ட–நல்லூர் வள்ளலார் தெருவை சேர்ந்த கலை–யழகன் (வயது 58) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதும் தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து கலை அழகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமு–தல் செய்தனர். அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வோர் மீது கடுமை–யான நடவடிக்கை எடுக்க தீவிர கண்காணிப்பு பணிகள் போலீசார் ஈடுபட்டுள்ள–னர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் திருட்டுத்தனமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறது. லாட்டரி சீட்டுகள் விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரண்டாம் கேட் அருகே 2 வாலிபர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் தஞ்சை தென்பெரம்பூர் கிழக்கு தெரு வசந்த் (வயது 23), தெற்கு தெரு ராஜா (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ .61 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.80 ஆயிரமாகும்.
நாகர்கோவில்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக லாட்டரிசீட்டு விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
நேற்றும் போலீசார் வடசேரி கிருஷ்ணன் கோவில் சந்திப்பு பகுதியில் வரும்போது அங்கு 2 பேர் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அன்புகுமரன் (வயது 43), சுரேஷ் (40) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவர்கள் லாட்டரிசீட்டு விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் 12 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வடசேரி ஆம்னிபஸ் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மேல கலுங்கடியை சேர்ந்த கார்த்திக் (26) என்பதும், அவரை சோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
கேரள அரசு லாட்டரிச் சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்து வருகிறது. ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் பம்பர் பரிசு குலுக்கல்களையும் நடத்தி வருகிறது.
கேரள அரசின் காருண்யா பிளஸ் லாட்டரிச்சீட்டு சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது. திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியை சேர்ந்த அஜினு (வயது 35) என்ற தொழிலாளி இந்த லாட்டரிச்சீட்டை வாங்கினார். பரிசு குலுக்கல் அன்று அவர் தனது லாட்டரிச்சீட்டுக்கு பரிசு விழுந்து உள்ளதா? என்று சரிபார்த்தார்.
சிறிய பரிசில் இருந்து தனது அதிர்ஷ்டத்தை சரிபார்த்தபடி வந்த அவர் ரூ.10 ஆயிரம் பரிசு வரை பார்த்தும் தனது லாட்டரிச் சீட்டுக்கு பரிசு கிடைக்காததால் அந்த லாட்டரிச்சீட்டை கோபத்துடன் கசக்கி எறிந்து விட்டார்.
ஆனால் அந்த லாட்டரிச் சீட்டுக்கு 2-வது பரிசான ரூ.10 லட்சம் கிடைத்திருந்தது. இது அவரது நண்பர் அனீஸ் கிருஷ்ணனுக்கு தெரிய வந்தது. ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அஜினுவிடம் சென்று லாட்டரிச்சீட்டுக்கு பரிசு ஏதும் கிடைத்து உள்ளதா? என்று விசாரித்தார். அப்போதுதான் அவர் அந்த லாட்டரிச்சீட்டை பரிசு கிடைக்கவில்லை என்று நினைத்து கசக்கி எறிந்து விட்டது தெரிய வந்தது.
உடனே அவர் அந்த லாட்டரிச்சீட்டை தேடி கண்டுபிடித்தார். அதுபற்றி அஜினுவிடம் தெரிவிக்காமல் தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டார். இதற்கிடையில் அஜினு லாட்டரிச்சீட்டு வாங்கிய கடைக்காரர் அவர் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.10 லட்சம் பரிசு விழுந்த விவரத்தை தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் லாட்டரிச்சீட்டை வீசிய இடத்தில் தேடியபோது அது கிடைக்கவில்லை. அப்போது தான் தனது நண்பனே தன்னை ஏமாற்றி லாட்டரிச் சீட்டை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி அஜினு பாலோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி அஜினு கூறும் போது, எனது மகள் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது சிகிச்சைக்கு கடன் வாங்கி செலவு செய்து வருகிறேன். லாட்டரியில் பரிசு கிடைத்தால் அதன் மூலம் எனது மகளுக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்ற முடியும். எனவே எனக்கு போலீசார் உதவ வேண்டும் என்றார். #KeralaLottery
ஸ்ரீமுஷ்ணம்:
காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அளிஞ்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 34) என்பவர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்தார்.
இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.