search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்கணாபுரம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
    X

    கொங்கணாபுரம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

    • கொங்கணாபுரம் போலீசார் இன்று காலை அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • அப்போது அங்குள்ள பேக்கரி கடை அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதை கண்ட போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    எடப்பாடி:

    கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, சமுத்திரம் ஊராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாரின் பேரில், கொங்கணாபுரம் போலீசார் இன்று காலை அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பேக்கரி கடை அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதை கண்ட போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை (49) என்பதும், அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கிராமப் பகுதி மக்களிடம் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.1100 மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு மாநில லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×