என் மலர்tooltip icon

    உலகம்

    ஒரே லாட்டரி சீட்டில் ரூ.2,120 கோடிக்கு அதிபதியான அயர்லாந்து அதிர்ஷ்டசாலி!
    X

    ஒரே லாட்டரி சீட்டில் ரூ.2,120 கோடிக்கு அதிபதியான அயர்லாந்து அதிர்ஷ்டசாலி!

    • இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லாட்டரி வெற்றியாகும்.
    • பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.

    ஒரே ஒரு லாட்டரி டிக்கெட்டில் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசான ரூ.2,120 கோடி (208 மில்லியன் பவுண்டுகள்) தொகையை அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் வென்றுள்ளார். இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லாட்டரி வெற்றியாகும்.

    இந்த வெற்றி மூலம், கால்பந்து வீரர் ஹாரி கேன் (ரூ.1,150 கோடி) மற்றும் பாப் பாடகி துவா லிபா (ரூ.1,100 கோடி) போன்ற பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.

    அயர்லாந்து தேசிய லாட்டரி, வெற்றியாளர் தனது டிக்கெட்டைப் பத்திரப்படுத்தி, லாட்டரி தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த வெற்றியாளர் ஐரிஷ் நாட்டின் 18வது யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளர் ஆவார். வெற்றியாளரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×