என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்"

    • நாய் படை நடத்திய தேடுதலின் போது, ​​புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன
    • கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரகாண்டில் அல்மோரா மாவட்டத்தின் சுல்ட் பகுதியில் உள்ள தபாரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் இருந்து 161 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் மீட்டுள்ளனர்.

    பள்ளி முதல்வர் சுபாஷ் சிங் முதலில் புதர்களில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்களைக் கவனித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

    இரண்டு போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தன. வெடிகுண்டு அகற்றும் படை மற்றும் நாய் படையும் வரவழைக்கப்பட்டன.

    நாய் படை நடத்திய தேடுதலின் போது, புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன, மற்றவை 20 அடி தொலைவில் காணப்பட்டன. மொத்தம் 161 ஜெலட்டின் குச்சிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வெடிகுண்டு அகற்றும் படையினரால் சேமிக்கப்பட்டன.

    கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் ஏன் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சமீபத்தில் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் அரியானாவில் அதிக அளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் போலீசார் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    மோட்டார் கொட்டகையில் அனுமதிபெறாமல் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எம்.அகரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் புதிதாக கிணறு வெட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கந்தன் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள மோட்டார் கொட்டகையில் அனுமதி பெறாமல் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சனுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் மற்றும் மங்கலம் பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ராஜேந்திரனின் விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையை ஆய்வு செய்தபோது அங்கு அட்டை பெட்டிகளில் எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அட்டை பெட்டிகளில் இருந்த 164 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும், 155 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் தொழிலாளி கந்தன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக கந்தனின் மனைவி விஜயாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் கொட்டகையில் அனுமதிபெறாமல் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
    ×