search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tobacco sales"

    • தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் புகையிலை விற்பனையை தடுக்க வேண்டும்.
    • சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றிட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மறுவாழ்வு சங்க தலைவர் செல்லதுரை கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதியில் 1964 புயலுக்கு முன் ஆயிரக்க ணக்கான மீன வர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த னர்.

    புயலுக்கு பின்னர் முகுந்தராயர் சந்திரம் பகுதியில் மீன்பிடி தொழி லில் ஈடுபட்டு வந்ததாகவும், அதே பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை தொடர்ந்து கடைகள் ஏற்படுத்தி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி களுக்கு தேவையான பொருட்கள், உணவுகளை விற்பனை செய்து வந்தனர்.

    தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் மீனவர்கள் மட்டுமே அந்த பகுதியில் கடை நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது சில நபர்கள் அத்துமீறி கடை அமைத்து சட்டவிரோமாக புகையிலை, மதுபாட்டில் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருவதால் பாரம்பரியமான மீனவர்களால் அமைக்கப் பட்டுள்ள கடைகளை அகற்றும் நிலை ஏற்பட்டுள் ளது.

    இதனால் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மனு கொடுத்தபோது நிர்வாகிகள் நம்புக்குமார், உமையேசுவரன், சக்திவேல், உமாரவி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர்.
    • காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே பூ.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர். இந்நிலையில் இவரிட மிருந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில்பணிபுரிந்து வந்த முதல்நிலை போலீசார் பிரபாகரன் ரூ.3,000 கையூட்டாக பெற்றதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கைது செய்யப்பட்ட நபரிடம், கையூட்டு பெற்ற போலீசார் பிரபாகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல்போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளி களிடம் தொடர்பில் இருந்துகாவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 610 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் போதைப்பொருள் குறித்து வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடை மற்றும் பெட்டி கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் முதியவர் ஒருவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் பான் மசாலா பாக்கெட்டு உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கடையில் இருந்து 610 புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடலூரில் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் வடலூர் பால்காரன் காலனியில் வசிக்கும் முருகையன் (55), என்பவர் பேப்பர் ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது. அதன்அடிபடையில் கடையை சோதனை செய்தபோது, ஹான்ஸ் புகையிலை பாக்கெட் பண்டல் வைத்திருந்த 2 பேரையும் கைது செய்தனர். 

    • போலீஸ் நிலையங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
    • புகார் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தென்மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஸ்குமார் மீனா ஆகியோரின் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி வாகனதணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட குட்கா, கஞ்சா, போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு இதுதொடர்பாக பலரை கைது செய்தனர். மேலும் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் கடைகளுக்கு வினியோகம் செய்வது கட்டுப்படுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    அதில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புகார் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×