புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது

610 பாக்கெட்டுகள் பறிமுதல் போலீசார் விசாரணை
புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் போதைப்பொருள் குறித்து வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடை மற்றும் பெட்டி கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் முதியவர் ஒருவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் பான் மசாலா பாக்கெட்டு உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கடையில் இருந்து 610 புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com