search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை
    X

    கோப்பு படம்.

    பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை

    • மாதர் சங்கம் வலியுறுத்தல்
    • ள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும்.

    புதுச்சேரி:

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜதா கூட்டணி அரசு மாதம் 3 வெள்ளிக்கிழமைகள் பூஜை செய்வதற்காக காலதாமத நேர அனுமதி வழங்கி உள்ளது வேதனை யளிக்கிறது. பெண்களை மீண்டும் வீட்டுக்குள் அடைக்கும் விதமாகவும், பூஜை செய்வதை திணிக்கும் விதமாகவும் ஆணாதிக்க சிந்தனையுடன், மத அடை யாளத்துடன், பாகுபாட்டை உருவாக்கக்கூடிய பிற்போக்குத்தனமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பெண்களின் மாதவிடாய் காலம் எவ்வளவு வலியும் வேதனையும் மிக்கது என்று அனைவரும் அறிவர். புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசுக்கு உண்மையில் பெண்கள் மீது அக்கறை இருந்தால், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கேரள அரசை போல் மாதந்தோறும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×