search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் கோட்டம் சார்பில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    கும்பகோணம் கோட்டம் சார்பில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகத்தின் கும்ப கோணம் மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து வருகிற 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பி டங்களுக்குத் திரும்பும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சாா்பில் 300 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்பட்டன.

    இதேப்போல் நாளையும் (ஞாயிற்றுக்கி ழமையும்) சிறப்பு பஸ்கள் இயங்கும்.

    இதில், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னை யிலிருந்து திருச்சி, கும்பகோ ணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறை ப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேப்போல் திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 100 பஸ்களும் இயக்கப்படு கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×