search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறை: கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    தொடர் விடுமுறை: கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு 250 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் எஸ்.எஸ். ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ் புத்தாண்டு முன்னிட்டு இன்று முதல் வருகிற 16-ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் நாளை வரை சென்னை, திருப்பூர், கோவை, மதுரை, ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, மன்னார்குடி, புதுக்்கோட்டை, கரூர், ராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு 250 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம், புதுக்கோ ட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, கரூர் ஆகிய ஊர்களுக்கு இரு மார்க்கங்களிலும் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் தொடர் விடுமுறை முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல வசதியாக 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×