என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GST collections"

    • ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
    • செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வந்த சீர்திருத்த நடவடிக்கையால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது.

    புதுடெல்லி:

    ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017-ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அறிமுகமானது. அதன்பின் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முந்தைய மாதத்தில் வசூலான வரித்தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

    ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த சீர்த்திருத்த நடவடிக்கையால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது என தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. #GST #January2019
    புதுடெல்லி :

    நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது.



    இந்த ஆண்டின் ஜனவரி மாத ஜி.எஸ்.டி வரி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரி வசூல், ஜூலை மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடியாகவும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.91 ஆயிரம் கோடியாகவும், செப்டம்பர் மாதம் ரூ.92,150 கோடியாகவும், அக்டோபர் மாதம் ரூ.83 ஆயிரம் கோடியாகவும், நவம்பர் மாதம் ரூ.80,808 கோடியாகவும், டிசம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரம் கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #GST #January2019
    ×