search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "January"

    • 13-ந்தேதி பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும்.
    • 250 படுக்கை வசதிகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே இயங்கி வரும் மீனாட்சி மருத்துவமனை, கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் 10-வது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் இந்த ஆண்டு 10 நாட்கள் கொண்டாட்டத்தை அறிவித்திருக்கிறது.  அதன்படி நேற்று முதல் விழா தொடங்கியது. வருகிற 17-ந்தேதி காணும் பொங்கல் திருநாளன்று மாலையில் மாபெரும் கண்கவர் நிகழ்வோடு நிறைவடையும். 

    இது குறித்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் கூறியதாவது:-

    "ஒரு ஆண்டுவிழா என்பதையும் கடந்த ஒரு திருவிழா இது. இத்தகைய ஒரு வெற்றிகரமான பயணத்தை சாத்தியமாக்கியிருப்பது எமது மருத்துவமனையை சேர்ந்த அனைத்து பணியாளர்களின் 10 ஆண்டுகால மிகச்சிறப்பான பணி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வே ஆகும்.  நாங்கள் இவர்கள் அனைவரையும் வரையும் கொண்டாடி,  கவுரவித்து மகிழ்கிறோம்.  

    இந்த கொண்டாட்டங்களின் இறுதி நாளான ஜனவரி 17 அன்று பகல் நேரத்தில் ஒரு "திருவிழா" நிகழ்வும் மற்றும் இரவு நேரத்தில் ஒரு "ஸ்டார் நைட்" நிகழ்வும் சிறப்பாக நடைபெற உள்ளன.  பகல் பொழுது முழுவதும் நீடிக்கின்ற திருவிழா கொண்டாட்டத்தில் சில தசாப்தங்களுக்கு முன்பு வரை விளையாடப்பட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் காட்சிப்படுத்தப்படும். பார்வையாளர்களை கடந்த காலத்தை நோக்கி இது அழைத்துச் செல்லும். 

    பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட ஒரு பொழுதுபோக்கு பூங்காவும் இதற்காக நிறுவப்படும்.  சின்னத்திரை பிரபலங்கள் பலர் பங்கேற்கும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் "ஸ்டார் நைட்" கொண்டாட்டத்தில் இடம்பெறுகின்றன. 

    இக்கொண்டாட்ட நிகழ்விற்கு அனுமதி இலவசம். 

    இக்கொண்டாட்ட நிகழ்வின்போது 10 அறக்கொடை திட்டங்களையும் அறிவித்து உள்ளோம்.

    ஜனவரி 10 முதல் 20 வரை 10 நாட்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை பேக்கேஜ் ரூ. 10,000 ஆகும். அதே 10 நாட்களில் பத்து பரிசோதனைகளின் தொகுப்பு ரூ.1000 என்ற சிறப்பு கட்டணத்தில் கிடைக்கும். 20 முதல் 30 வரை வெளிநோயாளி பிரிவு சார்ந்த அனைத்து பரிசோதனைகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி.

    14 அன்று ஒரு நாளுக்கு மட்டும் ரூ.10 என்ற கட்டணத்தில் அனைத்து வெளி நோயாளி பிரிவு மருத்துவ ஆலோசனை (அவசர சிகிச்சை  உட்பட) கிடைக்கும். 13-ந் தேதி ஒரு நாளுக்கு மட்டும் ரூ.10 என்ற விலையில் மருத்துவமனையின் உணவகத்தில் மதிய உணவு வழங்கப்படும்.

    10 முதல் 20 வரை மருத்துவமனையிலிருந்து 10 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் பிக்அப் மற்றும் டிராப் வசதி வழங்கப்படும். 13-ந்தேதி பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். 10 முதல் 20 வரை குழந்தைகளுக்கு ஓ.பி.டி. பிரிவில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். 10-ம் தேதி – ஒரு நாள் மட்டும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும்  உள்நோ யாளிக ளுக்கான கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

    அடுத்த 10 மாதங்களில் பொதுமக்களில் 10000 நபர்களுக்கு அடிப்படை உயிர்காப்பு சிகிச்சை பயிற்சி அளிக்கப்படும். 

    தஞ்சாவூரில் பெருநகரங்களுக்கு நிகரான முதன்மையான மருத்துவ சிகிச்சை வசதி  கிடைக்கு மாறு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறோம்.  மிக நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சாதனங்களோடு 250 படுக்கை வசதிகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆண்டு ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. #GST #January2019
    புதுடெல்லி :

    நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது.



    இந்த ஆண்டின் ஜனவரி மாத ஜி.எஸ்.டி வரி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரி வசூல், ஜூலை மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடியாகவும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.91 ஆயிரம் கோடியாகவும், செப்டம்பர் மாதம் ரூ.92,150 கோடியாகவும், அக்டோபர் மாதம் ரூ.83 ஆயிரம் கோடியாகவும், நவம்பர் மாதம் ரூ.80,808 கோடியாகவும், டிசம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரம் கோடியாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #GST #January2019
    பிரதமர் மோடியின் பிரசார வியூகங்களை பின்பற்றத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். #RahulGandhi #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும் சென்று ஆதரவு திரட்டினார்.

    அவரது வெளிநாட்டுப் பயணங்கள் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தின மோடி அலை உருவாகவும், சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்பு ஏற்படுத்தவும் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மிகவும் உதவின.

    மோடியின் பிரசார வியூகங்களை அப்படியே பின்பற்றத் தொடங்கி உள்ள ராகுல், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் ஆதரவு திரட்ட தொடங்கியுள்ளார். இதற்காக சாம் பிட்ரோடா தலைமையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காங்கிரஸ் கிளை அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த அமைப்பு ஏற்பாடு செய்த திட்டத்தின்படி கடந்த ஆகஸ்டு மாதம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ராகுல் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள இந்தியர்களை சந்தித்துப் பேசினார்.

    5 மாநில தேர்தல் வந்ததால் தனது வெளிநாட்டு கட்சிப் பயணங்களை ஒத்திவைத்து இருந்த ராகுல் மீண்டும் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் அதைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக துபாய், அபுதாபிக்கு ராகுல் செல்ல இருக்கிறார்.

    ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். மறுநாள் ஜனவரி 12-ந்தேதி அபுதாபிக்கு சென்று பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சாம் பிட்ரோடா செய்து வருகிறார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். குறிப்பாக தென் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அவர்களிடம் கலந்துரையாடல் நடத்துவதன் மூலம் தென் இந்தியாவில் அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று ராகுல் கருதுகிறார். எனவே துபாய், அபுதாபி கூட்டங்களுக்கு ராகுல் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

    துபாய் அல்லது அபுதாபியில் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியத்தில் அதிக இந்தியர்களை சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆன்லைன் முன்பதிவை கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ராகுல் இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பக்ரைன், சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அடுத்த மாதம் அவர் செல்வது 5-வதுகட்ட வெளிநாட்டு பயணமாகும். துபாய், அபுதாபி பயணத்தை முடித்த பிறகு கனடா நாட்டுக்கு செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார். #RahulGandhi #Congress

    திருச்சியில் டிசம்பர் 10-ந்தேதி நடைபெறவிருந்த ‘தேசம் காப்போம்’ மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #DesamKappom #VCK
    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகளின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். அப்போது அவரிடம் தமிழகம் முழுவதிலிருந்து நிர்வாகிகள் கட்சி நிதி அளித்தனர்.

    அதன்பிறகு திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருச்சியில் டிசம்பர் 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.



    அன்று டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. எனவே டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் நடைபெறவிருந்த தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும். இதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி அளித்ததை கண்டித்து திருச்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்ற போராட்டம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கும், அந்த அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தமிழகத்தை காக்கவும் தி.மு.க. தலைமையிலான அணியில் விடுதலை சிறுத்தை அங்கம் வகிக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகம் பாதிக்கப்படுவதுடன் மேலும் சில அணைகள் கட்டவும் வழி வகுக்கும்.

    எனவே அணை கட்ட அனுமதிக்க கூடாது. பா.ஜ.க. மக்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கர்நாடகாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மேகதாது அணை கட்டக்கூடாது என கூறியுள்ளார். அதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் திருச்சி போராட்டத்தில் தி.மு.க. கூட்டணியை பா.ஜனதா உடைக்க பார்க்கிறது என நான் தெரிவித்ததற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நான் அணையை பற்றி கவலைப்படாமல் அணியை பற்றி கவலைப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    அணையை தடுக்க வேண்டும் என்றால் அணி பலமாக இருக்க வேண்டும். தமிழகத்தை காக்கவும், தேசத்தை மதவாத பிடியில் இருந்து காக்கவும் இதுபோன்ற பலமான அணி தேவை.

    தி.மு.க. அணியில் எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. தொகுதி குறித்து நிர்பந்திக்க கூடாது என்று எதுவும் கூறவில்லை. எங்கள் அணி பலமாக உள்ளது. திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. அணியில் இருந்து தங்களை வெளியேற்ற சிலர் சதி செய்வதாக கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #DesamKappom #VCK
    இஸ்ரோ தலைவர் சிவன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், சந்திராயன்-2 அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார். #ISRO #Chandrayaan-2
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திராயன்-2 செயற்கை கோளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    சந்திராயன்-2 செயற்கை கோளின் எடை 3 ஆயிரத்து 850 கிலோவாக உயர்த்தப்பட்டதால், ஜி.எஸ்.எல்.வி.எம்.கே-2 ரக விண்கலத்தில் செலுத்த முடியாது எனவும், இதற்காக ஜி.எஸ்.எல்.வி.எம்.கே 3 மறுவடிவமைப்பு செய்யப்படுவதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.



    மேலும், காலநிலை ஒத்துழைக்காவிட்டால், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட சந்திராயன் 2 பிப்ரவரி 16-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தை அடைய இருக்கும் செயற்கை கோள்  சந்திராயன்-2 எனவும், இது 40 நாள்கள் பயணித்து தனது இலக்கான நிலவை அடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த செய்தியாளர் சந்திப்பில், மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் உடன் இருந்தார். #ISRO #Chandrayaan-2
    ×