என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police investigate"
- சாமிநாதபுரம், மடத்துக்குளம் ஆகிய இடத்தில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
- விவசாயிகளிடம் இருந்து புகார்கள் ஏதாவது உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.
மடத்துக்குளம்:
கோவை சரக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாலாஜி உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் முத்தூர்,வெள்ளகோவில், சாமிநாதபுரம், மடத்துக்குளம் ஆகிய இடத்தில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.மேலும் அங்கு ஏதாவது முறைகேடுகள் நடக்கிறதா, விவசாயிகளிடம் இருந்து புகார்கள் ஏதாவது உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.
- லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது.
- இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் வேல்முருகன்(வயது 20) மாட்டு வண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மணல் குவாரிக்கு மணல் ஏற்ற விருத்தாச்சலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெ.பொன்னேரி ெரயில்வே மேம்பாலத்தின் மேல் வரும்போது அதிகாலை சுமார் 4 மணி அளவில் நாமக்கல் பகுதியில் இருந்து பாய்லர் கோழி ஏற்றி விருத்தாசலம் நோக்கி வந்த லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாட்டின் கொம்பு உடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு கிடந்தது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த வேல்முருகன் மற்றும் அவரது தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய கோழி ஏற்றி வந்த லாரியை போலீஸ் நிலையம் கொண்டு வந்து லாரி டிரைவர் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் நறுமணம் பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
- நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ராஜவல்லிபுரத்தில் சோதனை நடத்தினர்
- நடராஜன் என்பவரது வீட்டில் பழங்கால சிலைகள் 5 இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது
நெல்லை:
நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ராஜவல்லிபுரத்தில் சோதனை நடத்தினர்.
பழங்கால சிலைகள்
அப்போது நடராஜன் என்பவரது வீட்டில் பழங்கால சிலைகள் 5 இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நடராஜன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 32). ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சிலைகள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது.
இதனை விற்பனை செய்த நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக 2 பேரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
அந்த சிலைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை. எனவே அவை வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்தையாபுரம் ஆனந்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளர்
- அதே பகுதியைச் சேர்ந்த இருவர் மது போதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் ஆனந்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது40). மெக்கானிக்.
தீ வைப்பு
இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளர். இன்று அதிகாலை மழை பெய்ததால் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
நேற்று தாமோதரநகர் தேவசிங் (46) வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கையநாதபாண்டியன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த பொன் செல்வம் (21), மைக்கேல் ராஜ்(26) ஆகியோர் மது போதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்தார்.
இதேபோல் தூத்துக்குடியில் உள்ள தென்பாகம், வடபாகம் உட்பட பகுதிகளில் தொடர்ந்து தீவைப்பு சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள், போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு தெருவில் பாபுலால் ஜுவல்லர்ஸ் நகைக் கடை உள்ளது. இந்த நகை கடையை அதே பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் லோகேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் நகை கடையை மூடி விட்டு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் நகைக்கடையில் மூன்றாவது மாடியில் ஏறி சி.சி.டி.வி.கேமரா மற்றும் கடைக்கு வரும் மின்சார இணைப்பை ண்டித்து விட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த மூன்று சிலிண்டர்கள் மூலம் நகைக் கடை இரும்பு கதவை வெல்டிங் முறையில் துளையிட்டு கடையின் உள்ளே புகுந்தனர்.
பின்னர் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர். நேற்று காலை கடை பணியாளர்கள் கடையை திறந்த போது கடையில் கொள்ளை போய் இருந்தது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி இன்ஸ்பெக்டர் பாபு, சப் -இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ,ராஜசேகர் ,மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதில் இரண்டு தனி படைகள் நேற்று சென்னையில் உள்ள விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் புதிதாக வாங்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர். இவைகள் கொள்ளையர்கள் அங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட ஸ்க்ரு டிரைவர் கட்டிங் பிளேடு என அனைத்துமே புத்தம் புதியதாக வாங்கப்பட்டவையாக உள்ளது .இவர்கள் கொள்ளையடிக்க நோட்டமிட்டு திட்டம் தீட்டி இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திருப்பதை வைத்து பார்க்கும்போது அவர்கள் வட மாநில கொள்ளையர்கள் ஆக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகத்தின் பேரில் கூறுகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணிபுதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. விவசாயி. இவரது மகன் விக்னேஷ் (வயது 18). நாமக்கல் தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வருகிறார்.
இவர் தனது உறவினர்கள் பரமசிவம் (45), ஆறுமுகம் (37) ஆகியோருடன் சேர்ந்து நேற்று மாலை கதவணிபுதூர் அருகே உள்ள பாம்பாறு தடுப்பணைக்கு சென்றார்.
அங்கு ஆறுமுகமும், பரமசிவமும் மீன்பிடித்து கொண்டிருந்த போது, விக்னேஷ் ஆற்றில் இறங்கி செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார்.
அப்போது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்த அவரை தண்ணீர் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகமும், பரமசிவமும் விக்னேசை மீட்க முயன்றனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் விக்னேசை காப்பாற்ற முடியவில்லை. ஆற்றி வெள்ளத்தில் விக்னேஷ் அடித்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் இரவு நேரமானதால் விக்னேசை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்றும் 2-வது நாளாக தேடும் பணி நடந்தது.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை அடுத்த பூதவராயன்பேட்டை பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு இன்று காலை பக்தர்கள் சென்றனர். அப்போது கோவிலின் பின்புறம் உள்ள சின்ன வாய்க்காலில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத நிலையில் பிணமாக மிதந்தது.
இதை பார்த்து பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வாய்க்காலில் பிணமாக மிதந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்தும், மேலும் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தற்போது பிறந்த குழந்தைகளின் தகவல்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி இவரது 17 வயது மகள், வெண்ணமலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாணவி மன விரக்தியில் அமைதியாக இருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அவரது தாய், ஏன் அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டு, சமாதானப்படுத்தியுள்ளார்
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தாய் ஜெயந்தி, வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று? போலீசார் இறந்த மாணவியின் அறையில் சோதனை செய்துள்ளனர். அப்போது இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்....என்னை யார் இந்த முடிவை எடுக்க வச்சார்ன்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழன்னு ஆசைப்பட்டேன். ஆனா இப்போ பாதிலேயே போகுறேன்...இன்னோரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனுன் நு ஆச ஆன முடியாதில்ல.. ஐ லவ் யூ அம்மா...சித்தப்பா...மணிமாமா, அம்மு,, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நான் உங்க கிட்டலாம் சொல்லாம போறேன்..மன்னிச்சிருங்க இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி...என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...ரெயில்களில் பயணிகளுக்கு மீண்டும் உணவு விற்பனை தொடக்கம்