search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigate"

    • சாமிநாதபுரம், மடத்துக்குளம் ஆகிய இடத்தில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
    • விவசாயிகளிடம் இருந்து புகார்கள் ஏதாவது உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.

    மடத்துக்குளம்:

    கோவை சரக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாலாஜி உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் முத்தூர்,வெள்ளகோவில், சாமிநாதபுரம், மடத்துக்குளம் ஆகிய இடத்தில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.மேலும் அங்கு ஏதாவது முறைகேடுகள் நடக்கிறதா, விவசாயிகளிடம் இருந்து புகார்கள் ஏதாவது உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.

    • லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது.
    • இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் வேல்முருகன்(வயது 20) மாட்டு வண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.  இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மணல் குவாரிக்கு மணல் ஏற்ற விருத்தாச்சலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெ.பொன்னேரி ெரயில்வே மேம்பாலத்தின் மேல் வரும்போது அதிகாலை சுமார் 4 மணி அளவில் நாமக்கல் பகுதியில் இருந்து பாய்லர் கோழி ஏற்றி விருத்தாசலம் நோக்கி வந்த லாரி மாட்டு வண்டி மீது பக்கவாட்டில் வேகமாக மோதியது

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வண்டியில் இருந்த 2 மாடுகளில் ஒரு மாடு இறந்தது. மற்றொரு மாட்டின் கொம்பு உடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு கிடந்தது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த வேல்முருகன் மற்றும் அவரது தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.    இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய கோழி ஏற்றி வந்த லாரியை போலீஸ் நிலையம் கொண்டு வந்து லாரி டிரைவர் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் நறுமணம் பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    • நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ராஜவல்லிபுரத்தில் சோதனை நடத்தினர்
    • நடராஜன் என்பவரது வீட்டில் பழங்கால சிலைகள் 5 இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது

    நெல்லை:

    நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ராஜவல்லிபுரத்தில் சோதனை நடத்தினர்.

    பழங்கால சிலைகள்

    அப்போது நடராஜன் என்பவரது வீட்டில் பழங்கால சிலைகள் 5 இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் நடராஜன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 32). ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சிலைகள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது.

    இதனை விற்பனை செய்த நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக 2 பேரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணை

    அந்த சிலைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை. எனவே அவை வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்தையாபுரம் ஆனந்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளர்
    • அதே பகுதியைச் சேர்ந்த இருவர் மது போதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் ஆனந்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது40). மெக்கானிக்.

    தீ வைப்பு

    இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளர். இன்று அதிகாலை மழை பெய்ததால் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    போலீசார் விசாரணை

    நேற்று தாமோதரநகர் தேவசிங் (46) வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கையநாதபாண்டியன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த பொன் செல்வம் (21), மைக்கேல் ராஜ்(26) ஆகியோர் மது போதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்தார்.

    இதேபோல் தூத்துக்குடியில் உள்ள தென்பாகம், வடபாகம் உட்பட பகுதிகளில் தொடர்ந்து தீவைப்பு சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள், போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு தெருவில் பாபுலால் ஜுவல்லர்ஸ் நகைக் கடை உள்ளது. இந்த நகை கடையை அதே பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் லோகேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் நகை கடையை மூடி விட்டு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் நகைக்கடையில் மூன்றாவது மாடியில் ஏறி சி.சி.டி.வி.கேமரா மற்றும் கடைக்கு வரும் மின்சார இணைப்பை ண்டித்து விட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த மூன்று சிலிண்டர்கள் மூலம் நகைக் கடை இரும்பு கதவை வெல்டிங் முறையில் துளையிட்டு கடையின் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர். நேற்று காலை கடை பணியாளர்கள் கடையை திறந்த போது கடையில் கொள்ளை போய் இருந்தது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி இன்ஸ்பெக்டர் பாபு, சப் -இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ,ராஜசேகர் ,மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதில் இரண்டு தனி படைகள் நேற்று சென்னையில் உள்ள விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் புதிதாக வாங்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர். இவைகள் கொள்ளையர்கள் அங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட ஸ்க்ரு டிரைவர் கட்டிங் பிளேடு என அனைத்துமே புத்தம் புதியதாக வாங்கப்பட்டவையாக உள்ளது .இவர்கள் கொள்ளையடிக்க நோட்டமிட்டு திட்டம் தீட்டி இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திருப்பதை வைத்து பார்க்கும்போது அவர்கள் வட மாநில கொள்ளையர்கள் ஆக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகத்தின் பேரில் கூறுகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    தக்கலை அருகே கடன் தொல்லையால் மகளை கொலை செய்து விட்டு வங்கி ஊழியர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புலியூர் குறிச்சி ஒற்றைத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 51),

    இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரோகிணி (45), மகள் அர்ச்சனா (13). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்கள் ஒற்றைத்தெரு பகுதியில் சமீபத்தில் புதிய வீடு கட்டியுள்ளனர். இதனால் ரமேசுக்கு அதிக கடன் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர்.

    இதனால் ரமேஷ் அவரது மனைவி ரோகிணி ஆகிேயார் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். வாங்கிய கடனை எப்படி திரும்ப செலுத்துவது என தெரியாமல் தவித்து வந்தனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

    கணவன், மனைவி தற்கொலை செய்துவிட்டால் மகள் அனாதையாகி விடுவாளே என கருதிய அவர்கள் அவளையும் தங்களுடன் அழைத்து செல்ல திட்டமிட்டனர். இதனை தொடர்ந்துநேற்று இரவு அர்ச்சனாவின் கை, கால்களை கட்டிவிட்டு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் ரமேசும் ரோகிணியும் வீட்டின் மற்றொரு அைறயில் தூக்கு போட்டு தற்கொலை செய்தனர். இன்று காலை வெகு நேரம் ஆகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக ரமேஷ் மற்றும் ரோகிணி செல்போன்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

    ஆனால் அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. அதே நேரம் வீட்டிற்குள் செல்போன் ஒலி கேட்டு கொண்டே இருந்தது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு காரர்கள் ரமேஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் மின் விசிறியில் ஒரே சேலையில் ரமேஷ், ரோகிணி பிணமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    சிறுமி அர்ச்சனாவை தேடிய போது மற்றொரு அறையில் அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்ட் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மகளை கொன்று விட்டு கணவன், மனைவி தற்கொலை செய்திருக்கிலாம் என போலீசார் சந்தேகித்தனர். 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லையால் ரமேஷ் இந்த விபரீத முடிவை எடுத்தாரா, அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செல்பி மோகத்தில் கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணிபுதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. விவசாயி. இவரது மகன் விக்னேஷ் (வயது 18). நாமக்கல் தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வருகிறார்.

    இவர் தனது உறவினர்கள் பரமசிவம் (45), ஆறுமுகம் (37) ஆகியோருடன் சேர்ந்து நேற்று மாலை கதவணிபுதூர் அருகே உள்ள பாம்பாறு தடுப்பணைக்கு சென்றார்.

    அங்கு ஆறுமுகமும், பரமசிவமும் மீன்பிடித்து கொண்டிருந்த போது, விக்னேஷ் ஆற்றில் இறங்கி செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார்.

    அப்போது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்த அவரை தண்ணீர் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகமும், பரமசிவமும் விக்னேசை மீட்க முயன்றனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் விக்னேசை காப்பாற்ற முடியவில்லை. ஆற்றி வெள்ளத்தில் விக்னேஷ் அடித்து செல்லப்பட்டார்.

    இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் இரவு நேரமானதால் விக்னேசை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்றும் 2-வது நாளாக தேடும் பணி நடந்தது.

    பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை அடுத்த பூதவராயன்பேட்டை பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு இன்று காலை பக்தர்கள் சென்றனர். அப்போது கோவிலின் பின்புறம் உள்ள சின்ன வாய்க்காலில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத நிலையில் பிணமாக மிதந்தது.

    இதை பார்த்து பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வாய்க்காலில் பிணமாக மிதந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்தும், மேலும் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தற்போது பிறந்த குழந்தைகளின் தகவல்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கடிதம் சிக்கியுள்ளதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி இவரது 17 வயது மகள், வெண்ணமலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாணவி மன விரக்தியில் அமைதியாக இருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அவரது தாய், ஏன் அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டு, சமாதானப்படுத்தியுள்ளார்

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தாய் ஜெயந்தி, வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று? போலீசார் இறந்த மாணவியின் அறையில் சோதனை செய்துள்ளனர். அப்போது இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் சாகும்  கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்....என்னை யார் இந்த முடிவை எடுக்க வச்சார்ன்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழன்னு ஆசைப்பட்டேன். ஆனா இப்போ பாதிலேயே போகுறேன்...இன்னோரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனுன் நு ஆச ஆன முடியாதில்ல.. ஐ லவ் யூ அம்மா...சித்தப்பா...மணிமாமா, அம்மு,, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நான் உங்க கிட்டலாம் சொல்லாம போறேன்..மன்னிச்சிருங்க இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி...என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    இதையும் படியுங்கள்...ரெயில்களில் பயணிகளுக்கு மீண்டும் உணவு விற்பனை தொடக்கம்

    கரூர் அருகே தந்தை திட்டியதால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள சின்ன ஆண்டான்கோவில் பசுபதி லேவுட் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் சபரி (வயது 17). இவன் கரூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில் சரியாக படிக்காமல் சபரி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனால் சபரியை அவனது தந்தை திட்டியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட சபரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கினான். இதைக்கண்ட உறவினர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சபரியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து சபரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்து விட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை உக்கடம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். சமையல் தொழிலாளி. இவரது மகள் பொன்தாரணி (வயது 17).

    இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த பொன்தாரணி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உக்கடம் போலீசார் மாணவியின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவி கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் சில மாணவிகளின் உறவினர்களின் பெயர்களையும், ஒரு ஆசிரியரையும் குறிப்பிட்டு அவர்களை சும்மா விடக்கூடாது என மாணவி எழுதி இருந்தார்.

    மாணவி பொன்தாரணிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மனம் உடைந்தே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் நிறைமதி புகார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    எனது மகள் பொன்தாரணி முதலில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தாள். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தது. அப்போது இயற்பியல் பாடம் நடத்தும் ஆசிரியர், பொன்தாரணியிடம் வீடியோவில் தவறாக பேசி உள்ளார். அந்த விவரத்தை பொன்தாரணி எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    நேரடி வகுப்பு தொடங்கிய பிறகு ஒருநாள் மாலை வீடு திரும்புவதற்காக பள்ளிக்கு வெளியே பொன்தாரணி காத்திருந் திருக்கிறாள். அப்போதும் அந்த ஆசிரியர் வந்து உன்னை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறேன் என்று அழைத்து வந்திருக்கிறார்.

    மற்றொரு நாள் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி அவர் அழைத்து இருக்கிறார். அதனை நம்பி பள்ளிக்கு சென்ற எனது மகளை அந்த ஆசிரியர் தனியாக அழைத்து கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது மகள் அவரிடம் இருந்து தப்பி வந்து விட்டாள்.

    அதன்பிறகு ஆண்களை பார்த்தாலே ஒருவித அச்ச உணர்வுடன் இருந்தாள். ஆசிரியர் செய்த இழிசெயலை நினைத்து மன வேதனையுடன் காணப்பட்டாள். இந்த விவரங்களை எனது மகள், தன்னுடன் படித்த எங்கள் பகுதியைச் சேர்ந்த சக மாணவரிடம் தெரிவித்து அழுது இருக்கிறாள். அந்த மாணவர் மூலமே எங்களுக்கு இந்த விவரங்கள் தெரியவந்தது.

    பின்னர் நாங்கள் பொன் தாரணியை, அந்த பள்ளியில் இருந்து மாற்றி மாநகராட்சி பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். ஆனால் ஆசிரியர் செய்த அத்துமீறலை மறக்க முடியாமல் அவள் வேதனையுடன் காணப்பட்டாள். நேற்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டாள். எனவே மாணவியை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி உள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக ஆசிரியரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் தன்னுடன் படித்த மாணவிகளின் உறவினர்கள் பெயரையும் கடிதத்தில் மாணவி குறிப்பிட்டு இருந்தார். அவர்களாலும் மாணவி பாதிக்கப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    ராமநாதபுரம் அருகே வேலைக்கு போகக் கூடாது என்று என்று கணவர் சித்ரவதை செய்ததில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர் சுகந்தா வயது (31).

    இவருக்கும் ராமநாதபுரம் அருகே உள்ள சடையன் வலசை கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் மகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டில் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் மகேஸ்வரன் மேல் மருத்துவ படிப்புக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்ததாகவும், பின்பு ஊர் வந்து சுகந்தாவை ஒரு மாதம் விடுப்பு எடுக்க சொல்லி டெல்லிக்கு அழைத்துச் சென்றார். கடந்த மாதம் அக்டோபரில் ராமநாதபுரம் வந்து பெரியார் நகரில் வாடகைக்கு வீடு பிடித்து டாக்டர்கள் இருவரும் தங்கி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் அடிக்கடி சுகந்தா அவரது தாயார் சரஸ்வதிக்கு போன் செய்து தன்னை கணவர் வேலைக்கு போகக் கூடாது என்றும் மேல் படிப்புக்கு செல்லக்கூடாது என்றும், அடிக்கடி அடித்து மிரட்டி துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சுகந்தா தனது கணவர் கொடுமை தாங்காமல் எலி மருந்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கிய அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகந்தா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    டாக்டர் மகேஸ்வரனை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு சுகந்தாவின் தாய் சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் பஜார் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார்.

    ×