search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelery Shop Robbery"

    • கொள்ளையர்கள் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
    • கொள்ளை சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் வடக்கு வீதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் குமார் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கடந்த மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் கேஸ் வெல்டிங் மூலம் 3-வது மாடியில் உள்ள கடையின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். லாக்கரை உடைக்கும் அளவுக்கு கேஸ் தீர்ந்து விட்ட காரணத்தினால் லாக்கரில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பின. இந்த சம்பவம் திருக்கோவிலூரில் உள்ள மற்ற நகைக்கடைக்காரர்களையும் வட்டிக்கடை க்கார ர்களையும் பெரும் பீதிக்கு உள்ளாக்கியது.

    அதேபோல் பொது மக்களும் கொள்ளை நடந்த விதம் கொள்ளையர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் அவற்றைக் கண்டு அச்சத்திற்கு உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸ்சாருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி கொள்ளையர்களை தேடி மகாராஷ்டிரா மாநிலம் சென்றனர்.

    திருக்கோவிலூரில் கொள்ளை அடித்த கொள்ளையர்களின் ஊருக்கே சென்று கொள்ளையர்களை பிடிக்க முயன்ற நிலையில் திருக்கோவிலூர் போலீசார் இங்கு வந்து விட்டனர் என்பதை அறிந்த கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் வெறும் கையுடன் திரும்பினர். இந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிய போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய துப்பு சந்தேகத்திற்குரிய ஒரு செல்போன் நம்பர் ஆகும். அந்த செல்போன் மூலம் அடுத்தடுத்து போலீசார் எடுத்த நடவடிக்கையின் காரணமாக பீகார் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு போலீசார் விரைந்தனர்.

    இறுதியாக முக்கிய குற்றவாளி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது உறுதி செய்யப்படவே திருக்கோவிலூர் போலீசார் தீரன் சினிமா படபாணியில் மாறுவேடத்தில் சென்று குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராத வகையில் மாறுவேடத்தில் வந்திருந்த திருக்கோவிலூர் போலீசாரை அடையாளம் கண்டுவிட்ட கொள்ளையர்கள் தப்பி விட்டனர். இருந்த போதும் கொள்ளையர்களை சரியாக அடையாளம் கண்டு மகாராஷ்டிரா மாநிலம் சென்ற போலீசாரின் வருகை கொள்ளையர்களின் சொந்த ஊர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    ஜார்க்கண்ட் பீகார் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த நபர்களும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை வளையத்தை தீவிரபடுத்தி உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசாரை அழைத்து குற்றவாளிகளை வியூகம் அமைத்து பிடிப்பது எப்படி என்பது குறித்து அறிவுரை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேலும் சில போலீசார் குற்றவாளிகளை தேடி நவீன ரக துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு மேற்கண்ட மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து கொள்ளை போன பொருட்களையும் மீட்டு விடுவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு தெருவில் பாபுலால் ஜுவல்லர்ஸ் நகைக் கடை உள்ளது. இந்த நகை கடையை அதே பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் லோகேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையில் வேலை முடித்துவிட்டு பணியாளர்கள் நகை கடையை மூடி விட்டு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் நகைக்கடையில் மூன்றாவது மாடியில் ஏறி சி.சி.டி.வி.கேமரா மற்றும் கடைக்கு வரும் மின்சார இணைப்பை ண்டித்து விட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த மூன்று சிலிண்டர்கள் மூலம் நகைக் கடை இரும்பு கதவை வெல்டிங் முறையில் துளையிட்டு கடையின் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை கும்பல் திருடி சென்றனர். நேற்று காலை கடை பணியாளர்கள் கடையை திறந்த போது கடையில் கொள்ளை போய் இருந்தது. இது குறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி இன்ஸ்பெக்டர் பாபு, சப் -இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை போன நகைக்கடையை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ,ராஜசேகர் ,மாணிக்கம் தலைமையான போலீசார் மூலம் 4தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதில் இரண்டு தனி படைகள் நேற்று சென்னையில் உள்ள விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் புதிதாக வாங்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஐந்து கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் மூலம் நகை கடையின் இரும்பு கதவை துளையிட்டுள்ளனர். இவைகள் கொள்ளையர்கள் அங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட ஸ்க்ரு டிரைவர் கட்டிங் பிளேடு என அனைத்துமே புத்தம் புதியதாக வாங்கப்பட்டவையாக உள்ளது .இவர்கள் கொள்ளையடிக்க நோட்டமிட்டு திட்டம் தீட்டி இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திருப்பதை வைத்து பார்க்கும்போது அவர்கள் வட மாநில கொள்ளையர்கள் ஆக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகத்தின் பேரில் கூறுகின்றனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ×