search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College student killed"

    • சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பள்ளித்தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஸ்ரீதர் (வயது 18). இவர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூரை சேர்ந்தவர்
    • பஞ்சுமிட்டாய் தயாரிக்க சுவிட்சை ஆன் செய்தபோது விபரீதம்

    ஆரணி:

    வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அருள்மாறன் (வயது 19), ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் படித்து வந்தார்.

    கல்லூரி மாணவர்

    இவர் படித்துக் கொண்டு விடுமுறை நாட்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து கொடுப்பது மற்றும் கேட்ரிங் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்நிலையில், திருவண் ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பஞ்சுமிட்டாய், பாப்கான் தயாரித்து கொடுப்பதற்காக அருள்மாறன் சென்றார். அப்போது திடீரென மின்நிறுத்தம் ஏற்பட்டது.

    பின்னர், சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்தது. மீண்டும் பாப்கான், பஞ்சுமிட்டாய் தயாரிக்க சுவிட்சை ஆன் செய்தார். அதிலிருந்த மின்சாரம் இவர் மீது பாய்ந்தது.

    இதில் அருள்மாறன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து, அருள் மாறனின் தந்தை குமார் நேற்று களம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அருள்மாறன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
    • இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள ஊஞ்சபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராஜேஷ் (18). கல்லூரி மாணவர். மொடக்குறிச்சி அடுத்த பட்டறை வேலம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் பூபதி (17). இருவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் ராஜேஷ், பூபதி மற்றும் பூபதியின் தம்பி கலைச்செல்வன் (15) ஆகிய 3 பேரும் பட்டறை வேலம்பாளையத்தில் இருந்து மூலனூர்-ஈரோடு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது வளைவில் திரும்பி உள்ளனர்.

    அப்போது மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பூபதிக்கு லேசான காயமும், கலைச்செல்வனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மொடக்குறிச்சி போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய், மகன் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் அடுத்த எட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 65). இவரது மனைவி கிளியம்மாள் (45). இவர்களுக்கு வெங்கடேசன் (25), விக்னேஷ் (21) என 2 மகன்கள் உள்ளனர். விக்னேஷ் கலசபாக்கம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    வெங்கடேசன் வேலூர் இடையஞ் சாத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கிளியம்மாள் சித்தாள் வேலை செய்து வருகிறார்.

    நேற்று வேலை சம்பந்தமாக கிளியம்மாள், வெங்கடேசன், விக்னேஷ் ஆகியோர் பைக்கில் வேலூருக்கு வந்தனர். பின்னர் இரவு வேலூரில் இருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலார்த்து வென்றான் கிராமத்தில் அருகே வரும்போது எதிரே வந்த தனியார் பஸ் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் விக்னேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கிளியம்மாள், வெங்கடேசன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து தட்சிணாமூர்த்தி சந்தவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெமிலி அருகே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் விக்னேஷ் (19).இவர் ராமச்சந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கல்லூரி மாணவர்

    இவர் நெமிலி அடுத்த அசநெல்லிப்குப்பம் பகுதியில் இரவு நடந்த திருவிழாவை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியில் இருந்த வயல்வெளியில் சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியுள்ளார்.வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் அரக்கோணம் ஏ.எஸ்.பி. கிரிஸ்யாதவ் விசாரணை மேற்கொண்டார்.

    இது தொடர்பாக விளை நிலத்தின் உரிமையாளர் அலிநெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த வரதன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிங்கம்புணரி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
    • இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர் மதுரையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மாலை மாணவர் ஆகாஷ், திருப்பத்தூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி பகுதியில் சென்று கொண்டி ருந்தபோது அவரது மோட்டார் சைக்கிள், எதிரே காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய மாணவர் ஆகாஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.பி.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கம்பெனி பஸ் மோதியது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள வெள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவகன். இவரது மகன் ராகுல் (வயது 21). அதே ஊரைச் சார்ந்த முனியன் மகன் அசோக்குமார் (22).

    2 ேபரும் செய்யாறில் தனியார் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று மாலை 5.45 மணி அளவில் ராகுலும் அசோக்குமாரும் பைக்கில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வடபூண்டிபட்டு கூட்ரோட்டில் எதிரே வந்த சிப்காட் கம்பெனி பஸ் பைக் மீது மோதியது.

    இதில் இருவரும் காயமடைந்து செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். அசோக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    ஒத்தக்கடை அருகே பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கார் மோதிய விபத்தில் அவர் பலியானார். 2 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலூர்:

    மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகள் தாரணி. இவர் ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடித்து விட்டு பஸ் ஏறுவதற்காக கல்லூரி முன்புள்ள 4 வழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் தாரணி நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பாண்டிச்சேரியில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி தாரணி மற்றும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவி செல்லூர் சுயராஜ்யபுரத்தைச் சேர்ந்த லாவண்யா, கப்பலூரைச் சேர்ந்த மாணவர் நிதிஷ் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தாரணி இன்று காலை பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த பாண்டிச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கைது செய்துள்ளார்.

    செல்பி மோகத்தில் கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணிபுதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. விவசாயி. இவரது மகன் விக்னேஷ் (வயது 18). நாமக்கல் தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வருகிறார்.

    இவர் தனது உறவினர்கள் பரமசிவம் (45), ஆறுமுகம் (37) ஆகியோருடன் சேர்ந்து நேற்று மாலை கதவணிபுதூர் அருகே உள்ள பாம்பாறு தடுப்பணைக்கு சென்றார்.

    அங்கு ஆறுமுகமும், பரமசிவமும் மீன்பிடித்து கொண்டிருந்த போது, விக்னேஷ் ஆற்றில் இறங்கி செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார்.

    அப்போது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்த அவரை தண்ணீர் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகமும், பரமசிவமும் விக்னேசை மீட்க முயன்றனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் விக்னேசை காப்பாற்ற முடியவில்லை. ஆற்றி வெள்ளத்தில் விக்னேஷ் அடித்து செல்லப்பட்டார்.

    இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் இரவு நேரமானதால் விக்னேசை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்றும் 2-வது நாளாக தேடும் பணி நடந்தது.

    பீளமேடு அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரெயில் மோதி பலியானார்.
    கோவை:

    கோவை பீளமேடு கருப்பண்ணா கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரியா (வயது 18). இவர் சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டார். பீளமேடு- இருகூர் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் செல்போன் பேசியபடியே நடந்து சென்றார். அப்போது அந்த வழியே வந்த ரெயிலை அவர் கவனிக்கவில்லை.

    கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த ரெயில் பிரியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல் துண்டாகி கிடந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரியா பலியான சம்பவம் அவரது குடும்பம் மற்றும் கல்லூரி மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். திடீரென அவர் கல்லூரி முதல் மாடியில் இருந்து குதித்தார்.

    அதிர்ச்சியடைந்த சகமாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். படிக்க விருப்பம் இல்லாததால் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
    கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்த நண்பரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை போத்தனூர் கணேசபுரம் விட்டல் நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் விஷ்ணு (வயது 20). இவர் வாளையாரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று இரவு அதே பகுதியில் ஒரு சந்தில் நண்பர்களுடன் மது குடித்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர் ஒருவர் பீர் பாட்டிலை உடைத்து விஷ்ணுவின் கழுத்தில் குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த விஷ்ணுவின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அதிர்ச்சியடைந்த மற்ற நண்பர்கள் விஷ்ணுவை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரியில் விபத்து என்று கூறி இரவு 1 மணிக்கு சேர்த்து விட்டு மாயமானார்கள். ஆஸ்பத்திரியில் விஷ்ணுவின் கழுத்தில் ஏற்பட்ட காயத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை விஷ்ணு பரிதாபமாக இறந்தார்.

    விஷ்ணுவின் கழுத்தில் ஏற்பட்ட காயம் குறித்து டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து அவர்கள் போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விஷ்ணுவின் நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாய்த்தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் பீர் பாட்டிலால் விஷ்ணுவின் கழுத்தில் குத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி அருகே கல்லூரி மாணவர் கொலையில் 2 வாலிபர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். 4 பேரையும் தூக்கில் போடவேண்டும் என காதலி ஆவேசமாக கூறியுள்ளார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள திண்ணக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தமிழ்வாணன் (வயது 23). இவரும் அருகில் உள்ள கோதண்டகுறிச்சியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி 15-ந்தேதி மாலை இருவரும் கொணலை அருகே உள்ள திருப்பட்டீஷ்வரர் கோவில் மற்றும் மணல் மாதா கோவிலுக்கு சென்றனர். பிறகு வரும் வழியில் சிறுகனூரில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் தச்சங்குறிச்சி காட்டுப்பகுதியை பார்த்ததும் ரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்குள் சென்று தனிமையில் இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் காட்டுப்பகுதிக்குள் மோட்டார் சைக்கிள் தனியாக நிற்பதை பார்த்த அந்த வழியாக வந்த 4 பேர் கும்பல் தமிழ்வாணன் அவரது காதலியுடன் தனிமையில் அறிந்து அந்த மாணவியை அனுபவிக்க துடித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் முதலில் அவர்களை கெஞ்சி கேட்டு விட்டு விடும்படி கேட்டுள்ளார். அந்த மாணவியும் ஒன்றும் செய்யாதீர்கள், நாங்கள் இங்கிருந்து போய்விடுகிறோம் என கெஞ்சினார். ஆனாலும் அந்த 4 காம கொடுரன்களும் மாணவியை பலாத்காரம் செய்தனர்.

    தமிழ்வாணன் அவர்களை தடுத்தார். அப்போது அவர்கள் தமிழ்வாணனை தாக்கினர். தமிழ்வாணன் விடாமல் அவர்களுடன் போராடவே அவர் எழுந்து வராதபடி காலில் கத்தியால் குத்தினர். இதனால் தமிழ்வாணன் அலறினார். அதன்பிறகு அந்த கும்பல் மாணவியை பலாத்காரம் செய்துள்ளது.

    மாணவி காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டுள்ளார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் உதவிக்கு யாரும் வராததாலும், அந்த மாணவி மற்றும், தமிழ்வாணன் காலில் கத்தி குத்து ஏற்பட்டதாலும் இருவராலும் உடனே அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. இதற்கிடையே காலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறிதால் தமிழ்வாணன் மயக்கம் அடைந்தார். அதன்பிறகு மாணவி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். சுமார் 5 மணி நேரம் காட்டுக்குள் உதவி கிடைக்காமல் தவித்துள்ளனர்.

    ஆம்புலன்சில் தமிழ்வாணனை லால்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதிக அளவிலான ரத்தம் வெளியேறிவிட்டதால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். திருச்சி அருகே காட்டுக்குள் கல்லூரி மாணவரை குத்தி கொன்று விட்டு அவரது காதலியை 4 பேர் சூறையாடிய சம்பவம் பொங்கல் நாளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்தை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    சம்பவம் நடந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாகும். மது அருந்தும் கும்பல், அழகிகளை அழைத்து வந்து ஜாலியாக இருக்கும் கும்பல் இந்த காட்டுப் பகுதியை பயன் படுத்தி வந்தனர். கோவிலுக்கு போய்விட்டு வந்த தமிழ் வாணனும் அவரது காதலியும், காட்டுப்பகுதியை பார்த்ததும் சிறிது நேரம் ஜாலியாக இருந்து விட்டு செல்ல நினைத்து காமுகர்களிடம் மாட்டிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டுள்ளார்.

    தனிப்டை போலீசார் அந்த சுற்றுவட்டார பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மாணவரை கொன்று அவரது காதலியை சீரழித்த கும்பல் அவர்களை கோவிலில் இருந்தே பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதை அறியாத காதல் ஜோடி காட்டுப்பகுதிக்குள் ஒதுங்கியுள்ளனர்.

    அந்த கும்பல் மாணவியை அடையமுயன்றுள்ளது. இதற்கு இடையூறாக தமிழ்வாணன் இருந்ததால் அவர் அருகில் வராமல் இருக்க காலில் குத்தியுள்ளனர். எனவே 4 பேரும் தினமும் அதே பகுதியில் சுற்றித்திரியும் நபர்களாக இருக்கலாம். அல்லது தமிழ்வாணனுக்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக நடத்திய விசாரணையில் சிலர் மீது சந்தேகம் வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் நேற்று போலீசில் சிக்கினர். அவர்களிம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர்கள் பிடி படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் குறித்து கூறும்போது கண்ணீர்விட்டு கதறினார். 4 பேரையும் பிடித்து தூக்கில் போடும்படி கண்ணீர் விட்டார். நடந்த சம்பவத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. ஆவேசத்துடனும், அழுகையிடனும் காணப்படும் அவரை பெண் போலீசார் தேற்றி வருகிறார்கள்.

    ஸ்ரீரங்கம் கொள்ளிடம் காவிரி ஆற்றங்கரையில் தோழியுடன் சென்ற மாணவி 4 பேரால் சீரழிக்கப்பட்டார். அதே பகுதியில் சில வருடத்துக்கு முன்பு அழகியை அழைத்துச் சென்ற கண்டக்டர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தது.

    ஆனாலும் காதல் ஜோடிகளும் விழிப்புணர்வின்றி செயல்படுவதால் இதுபோன்ற ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று போலீசார் வருத்தப்பட்டனர்.

    ×