search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
    X

    மின் வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

    • நெமிலி அருகே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் விக்னேஷ் (19).இவர் ராமச்சந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கல்லூரி மாணவர்

    இவர் நெமிலி அடுத்த அசநெல்லிப்குப்பம் பகுதியில் இரவு நடந்த திருவிழாவை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியில் இருந்த வயல்வெளியில் சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியுள்ளார்.வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் அரக்கோணம் ஏ.எஸ்.பி. கிரிஸ்யாதவ் விசாரணை மேற்கொண்டார்.

    இது தொடர்பாக விளை நிலத்தின் உரிமையாளர் அலிநெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த வரதன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×