ஜெயமங்கலத்தில் பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேவதானப்பட்டி:

பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பள்ளித்தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஸ்ரீதர் (வயது 18). இவர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com