search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
    X

    பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

    • தனியார் கம்பெனி பஸ் மோதியது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள வெள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவகன். இவரது மகன் ராகுல் (வயது 21). அதே ஊரைச் சார்ந்த முனியன் மகன் அசோக்குமார் (22).

    2 ேபரும் செய்யாறில் தனியார் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று மாலை 5.45 மணி அளவில் ராகுலும் அசோக்குமாரும் பைக்கில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வடபூண்டிபட்டு கூட்ரோட்டில் எதிரே வந்த சிப்காட் கம்பெனி பஸ் பைக் மீது மோதியது.

    இதில் இருவரும் காயமடைந்து செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். அசோக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×