search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவர் கொலையில் 2 வாலிபர்கள் போலீசில் சிக்கினர்
    X

    கல்லூரி மாணவர் கொலையில் 2 வாலிபர்கள் போலீசில் சிக்கினர்

    திருச்சி அருகே கல்லூரி மாணவர் கொலையில் 2 வாலிபர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். 4 பேரையும் தூக்கில் போடவேண்டும் என காதலி ஆவேசமாக கூறியுள்ளார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள திண்ணக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தமிழ்வாணன் (வயது 23). இவரும் அருகில் உள்ள கோதண்டகுறிச்சியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி 15-ந்தேதி மாலை இருவரும் கொணலை அருகே உள்ள திருப்பட்டீஷ்வரர் கோவில் மற்றும் மணல் மாதா கோவிலுக்கு சென்றனர். பிறகு வரும் வழியில் சிறுகனூரில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் தச்சங்குறிச்சி காட்டுப்பகுதியை பார்த்ததும் ரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்குள் சென்று தனிமையில் இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் காட்டுப்பகுதிக்குள் மோட்டார் சைக்கிள் தனியாக நிற்பதை பார்த்த அந்த வழியாக வந்த 4 பேர் கும்பல் தமிழ்வாணன் அவரது காதலியுடன் தனிமையில் அறிந்து அந்த மாணவியை அனுபவிக்க துடித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் முதலில் அவர்களை கெஞ்சி கேட்டு விட்டு விடும்படி கேட்டுள்ளார். அந்த மாணவியும் ஒன்றும் செய்யாதீர்கள், நாங்கள் இங்கிருந்து போய்விடுகிறோம் என கெஞ்சினார். ஆனாலும் அந்த 4 காம கொடுரன்களும் மாணவியை பலாத்காரம் செய்தனர்.

    தமிழ்வாணன் அவர்களை தடுத்தார். அப்போது அவர்கள் தமிழ்வாணனை தாக்கினர். தமிழ்வாணன் விடாமல் அவர்களுடன் போராடவே அவர் எழுந்து வராதபடி காலில் கத்தியால் குத்தினர். இதனால் தமிழ்வாணன் அலறினார். அதன்பிறகு அந்த கும்பல் மாணவியை பலாத்காரம் செய்துள்ளது.

    மாணவி காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டுள்ளார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் உதவிக்கு யாரும் வராததாலும், அந்த மாணவி மற்றும், தமிழ்வாணன் காலில் கத்தி குத்து ஏற்பட்டதாலும் இருவராலும் உடனே அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. இதற்கிடையே காலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறிதால் தமிழ்வாணன் மயக்கம் அடைந்தார். அதன்பிறகு மாணவி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். சுமார் 5 மணி நேரம் காட்டுக்குள் உதவி கிடைக்காமல் தவித்துள்ளனர்.

    ஆம்புலன்சில் தமிழ்வாணனை லால்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதிக அளவிலான ரத்தம் வெளியேறிவிட்டதால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். திருச்சி அருகே காட்டுக்குள் கல்லூரி மாணவரை குத்தி கொன்று விட்டு அவரது காதலியை 4 பேர் சூறையாடிய சம்பவம் பொங்கல் நாளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்தை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    சம்பவம் நடந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாகும். மது அருந்தும் கும்பல், அழகிகளை அழைத்து வந்து ஜாலியாக இருக்கும் கும்பல் இந்த காட்டுப் பகுதியை பயன் படுத்தி வந்தனர். கோவிலுக்கு போய்விட்டு வந்த தமிழ் வாணனும் அவரது காதலியும், காட்டுப்பகுதியை பார்த்ததும் சிறிது நேரம் ஜாலியாக இருந்து விட்டு செல்ல நினைத்து காமுகர்களிடம் மாட்டிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டுள்ளார்.

    தனிப்டை போலீசார் அந்த சுற்றுவட்டார பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மாணவரை கொன்று அவரது காதலியை சீரழித்த கும்பல் அவர்களை கோவிலில் இருந்தே பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதை அறியாத காதல் ஜோடி காட்டுப்பகுதிக்குள் ஒதுங்கியுள்ளனர்.

    அந்த கும்பல் மாணவியை அடையமுயன்றுள்ளது. இதற்கு இடையூறாக தமிழ்வாணன் இருந்ததால் அவர் அருகில் வராமல் இருக்க காலில் குத்தியுள்ளனர். எனவே 4 பேரும் தினமும் அதே பகுதியில் சுற்றித்திரியும் நபர்களாக இருக்கலாம். அல்லது தமிழ்வாணனுக்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக நடத்திய விசாரணையில் சிலர் மீது சந்தேகம் வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் நேற்று போலீசில் சிக்கினர். அவர்களிம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர்கள் பிடி படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் குறித்து கூறும்போது கண்ணீர்விட்டு கதறினார். 4 பேரையும் பிடித்து தூக்கில் போடும்படி கண்ணீர் விட்டார். நடந்த சம்பவத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. ஆவேசத்துடனும், அழுகையிடனும் காணப்படும் அவரை பெண் போலீசார் தேற்றி வருகிறார்கள்.

    ஸ்ரீரங்கம் கொள்ளிடம் காவிரி ஆற்றங்கரையில் தோழியுடன் சென்ற மாணவி 4 பேரால் சீரழிக்கப்பட்டார். அதே பகுதியில் சில வருடத்துக்கு முன்பு அழகியை அழைத்துச் சென்ற கண்டக்டர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தது.

    ஆனாலும் காதல் ஜோடிகளும் விழிப்புணர்வின்றி செயல்படுவதால் இதுபோன்ற ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று போலீசார் வருத்தப்பட்டனர்.

    Next Story
    ×