என் மலர்
நீங்கள் தேடியது "jewelery"
- பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைகளை ஒப்படைத்த ஒட்டுநர், நடத்துனரை பொதுமக்கள் பாராட்டினர்.
- நாகர்கோவில் வங்கி அதிகாரி
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் அந்தோணி ராஜ்(வயது 42), இவர் நாகர்கோவிலில் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7-ந் தேதியன்று அறந்தாங்கியிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்தில் காரைக்குடிக்கு பயணம் செய்துள்ளார். காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்ல வேண்டிய டேவிட்அந்தோணிராஜ், காரைக்குடி நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கி வேறொரு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது தாம் கொண்டு வந்த பை மற்றும் உடமைகளை அந்த பேருந்திலேயே தவறவிட்டுவிட்டோம் என உணர்ந்து அதிர்ச்சியடைத்துள்ளார்.
உடனடியாக சம்பவம் குறித்து காவல்த்துறையினருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், மதுரைக்கு சென்ற பேருந்து இரவு அறந்தாங்கி திரும்பியதும், பயணிகள் இருக்கைக்கு மேல் லக்கேஜ் வைக்கும் இடத்தில் பை ஒன்று உள்ளதை நடத்துனர் முத்துக்குமார், ஓட்டுனர் ரவி ஆகியோர் பார்த்துள்ளனர். அதனை எடுத்து பார்த்ததில் அதில் நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளதைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக போக்குவரத்து மண்டல மேலாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அறந்தாங்கி காவல் நிலையத்தில் நகை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்துள்ளனர். பொருட்களை வாங்கி விசாரணை மேற்கொண்ட காவல்த்துறையினர் சம்மந்தப்பட்ட வங்கி மேலாளர் டேவிட் அந்தோணிராஜை அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர் தவறவிட்ட சுமார் 15 சவரன் நகை லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அவரிடமே ஒப்படைத்தனர். ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை உரியவரிடம் சேர உதவிய அரசுப் பேருந்து நடத்துனர், ஓட்னருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் நகை-பணம் திருட்டு போனது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுலோன் காலனியை சேர்ந்தவர் ராசய்யா (வயது 73). குடும்பத்துடன் மதுரைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளி கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ராசய்யா உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பெண் அலுவலரிடம் நகை பறித்தவரை சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் பிடித்தனர்.
- இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் முத்துமாரி (32). இவர் தமுக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கணக்காள ராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 15-ந்தேதி மொபட்டில் முத்துமாரி தத்தனேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் முத்துமாரி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.
இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்தி விசா ரணையில், முத்துமாரியிடம் நகையை பறித்தது நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி (37) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்று கொள்ளையனை கைது செய்தனர்.
மூதாட்டியிடம் கைவரிசை
மதுரை தனக்கன் குளத்தை சேர்ந்தவர் ரங்க ராஜ் மனைவி ராதாபாய் (62). இவர் சம்பவத்தன்று அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் பெரியார் பஸ் நிலையம் வந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராதாபாய் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டார்.
இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ரெயிலில் மறந்து வைத்துச் சென்ற ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை ரெயில்வே போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
- போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் அலங்கானூர் ஊராட்சி பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு என்ற ராமச்சந்திரன் (வயது 70).இவர் பெரம்பலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் மனைவி முத்துலட்சுமியுடன் (60) நேற்று இரவு சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயிலில் பயணம் செய்தார். இன்று காலை 6 மணிக்கு ரெயில் பரமக்குடி வந்ததும் மனைவியுடன் இறங்கி விட்டார். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கைப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பரமக்குடி ரெயில் நிலைய அதிகாரி யிடம் தகவல் தெரிவித்தார். அவர் ராமநாதபுரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ராமநாதபுரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ், போலீஸ்காரர் ஜலாலுதீன் ஆகியோர் குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் ஏறி பார்த்தபோது கைப்பை அங்கு இருந்தது. அதை திறந்து பார்த்த போது ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் நகை, பணம், செல்போன் ஆகியவையும் பத்திரமாக இருந்தன.
இது குறித்து ராமநாதபுரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பரமக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமு மனைவியுடன் ராமநாத புரம் வந்தார். ெரயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன் ராஜ், போலீஸ்காரர் ஜலாலு தீன் ஆகியோரிடம் நன்றி தெரிவித்து கைப்பையை பெற்று சென்றனர்.
போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டது.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
தமிழக டி.ஜி.பி. சைலேந் திரபாபு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கள் தங்கதுரை (ராமநாதபுரம்), செல்வராஜ் (சிவகங்கை) உள்ளிட்ட போலீஸ் அதிகா ரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள 146 பவுன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.
முன்னதாக ராமநாத புரம் வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டுகள் ெ தங்கதுரை, செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்ட சைலேந்திரபாபு சிறப்பாக பணியாற்றிய 30 போலீசாருக்கு சான்றிதழ் களை வழங்கினார்.
தொடர்ந்து டி.ஜி.பி. நிருபர்களிடம் கூறியதா வது:-
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே போல் கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிற மாநிலத்தவர் தாக்கப்படுவது போல் பொய்யான தகவலை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இவ்வாறு 2 வீடியோக்களை முகம்மது ரஸ்பி என்பவர் பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்ட வீடியோவில் ஒன்று பிற மாநிலத்தவர் அவர்களுக்குள் மோதிக்கொண்ட சம்பவம், மற்றொன்று கோவையில் உள்ளூர்காரர்கள் மோதிக்கொண்டது. இதுபோன்ற தவறான வீடியோ வெளியிட்ட முகம்மது ரஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று தவறான செய்திகள் வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் போலீஸ் அதிகாரிகளை தாக்கினால் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும் கைது செய்ய தயங்கமாட்டார்கள். ராமநாதபுரத்தில் 1200 போலீசார் பணியாற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் விரைவில் வரவுள்ளது.
காவல்நிலைய துன்பு றுத்தல்கள் இந்தாண்டு ஏதும் நடைபெறவில்லை. சென்ற ஆண்டு 4 நிகழ்வுகள் நடைபெற்றன. தற்போது பொதுமக்களிடம் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளிடம் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொள்ளப்படுவதால் துன்புறுத்தல்களுக்கு வேலை இல்லை. 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.
- போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த சேவூா் அருகே சாலையோரம் நின்றிருந்த மூதாட்டியிடம் கவரிங் சங்கலி பறித்த இருவரை போலீசார் கைது செய்தனா். சேவூா் அருகே உள்ள தாசராபாளையம் நடுத்தோட்டத்தைச் சோ்ந்தவா் சிகாமணி (64). இவா் தாசராபாளையம் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா். பார்த்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.
தகவல் கிடைத்தது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேவூர் போலீசார் இரண்டு வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள்
கோவை சித்தாபுதூா் சரோஜினி நகரைச் சோ்ந்த சின்னமருது (24), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (27) என்பது தெரியவந்தது. மேலும் மூதாட்டியிடம் பறித்தது கவரிங் நகை என்பதும் தெரிய வந்தது. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- அந்தோணிராஜா மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
- விசாரணையில்,பாலசுந்தர் தங்க செயினை திருடியது தெரியவந்தது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி மகன் அந்தோணிராஜா (வயது21). இவர் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி சுரேசுக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வள்ளகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17-ந்தேதி அந்தோணிராஜா மற்றும் உறவினர்கள் புதிய ஆடைகள் வாங்க சென்று விட்டு திரும்பி வந்து வீட்டில் தங்கினர். பெண்ணின் சகோதரர் பாலசுந்தரும் (21) அவர்களுடன் தங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் எடையுள்ள தங்கசெயின் மாயமாகியிருந்தது.
இதுகுறித்து அந்தோணி ராஜா நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பாலசுந்தர் தான் தங்க செயினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
- அன்னக்கிளியின் மகளின் கணவர் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்த துணிகள் எடுத்து வந்து மருத்துவமனையில் கொடுத்துள்ளார்.
- அதன்பிறகு நேற்று அவரது மருமகன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்து உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாள முத்து நகரில் உள்ள கலைஞர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல்.
மளிகை கடை
இவரது மனைவி அன்னக்கிளி (வயது 58). இவர் மாதாநகர் 5-வது தெருவில் வீட்டுடன் சேர்ந்து மளிகை கடை வைத்துள்ளார்.
இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக குடியிருந்து வருகின்றனர்.
அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அன்னக்கிளி யின் மகளின் கணவர் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்த துணிகள் எடுத்து வந்து மருத்துவ மனையில் கொடுத்துள்ளார். அதன்பிறகு நேற்று அவரது மருமகன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்து உள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப் பட்டு அதில் இருந்த சுமார் 3 பவுன் செயின், தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
இது குறித்து அவர் தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ் பெக்டர் முனிய சாமி வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து டி.எஸ்.பி. சத்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- இன்றும் நாளையும் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை
- ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
புதுச்சேரி:
அட்சய திருதியை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம்தான். அட்சய திருதியை என்பது மங்கள கரமான தொடக்கத்திற்கு உகந்த நாள். ஆனால் அதையும் தாண்டி தங்கம் வாங்குவதற்கு உகந்த நாள் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது.
ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு திருதியை திதியானது இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கியது. நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை திருதியை திதி உள்ளது. இன்று காலை 7.49 மணி முதல் பகல் 12.20 மணி வரை தங்கம் வாங்குவதற்கு முகூர்த்த நேரம் என்பதால் இன்று காலையிலேயே ஏராளமானோர் நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்கினார்கள்.
புதுவையில் நேரு வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, பாரதி வீதி, நெல்லுமண்டி சந்து, மிஷன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் நகைகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
- வீடு உள்பட 3 இடங்களில் நகை-பொருட்கள் கொள்ளைபோனது.
- போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை கனி (வயது 35). இவர் சம்ப வத்தன்று வீட்டின் கதவை சாத்தி விட்டு வெளியே சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து பிச்சைகனி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதில், அம்பேத்கர் தெருவை சேர்ந்த தர்மராஜ், பால்பாண்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் அம்பேத்கர் தெருைவ சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மாவூத்து பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளர்.
சம்பவத்தன்று வெல்டிங் பட்டறையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (33). இவரது வீட்டில் இருந்த 1.4 பவுன் நகை திருடுபோனது.
இதுகுறித்து எம்.கூமாபட்டி போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதில், நகை திருடு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, சிவா, குட்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- வீடு புகுந்து பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
- இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள வலங்காங்குளம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(40). அரசு பஸ் மெக்கானிக். இவரது மனைவி வனிதா(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டாமல் வனிதா கீழ் பகுதியிலும், கனகராஜ் மாடியிலும் தூங்கியுள்ளனர். அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வனிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.
அப்போது வனிதா கூச்சலிட்டதை கேட்டு கனகராஜூம், அக்கம் பக்கத்தினரும் வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மூதாட்டியின் முகத்தில் தலையணையால் அமுக்கி, தாக்கி அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
- கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
நெல்லை:
நெல்லை டவுன் பெரியதெருவை சேர்ந்தவர் கோமதி (வயது 85). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் வீட்டில் படுத்து தூங்கினார்.
நேற்று நள்ளிரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் முகத்தில் தலையணையால் அமுக்கி, தாக்கி அவர் அணிந்திருந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






