search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை-பொருட்கள் கொள்ளை
    X

    நகை-பொருட்கள் கொள்ளை

    • வீடு உள்பட 3 இடங்களில் நகை-பொருட்கள் கொள்ளைபோனது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை கனி (வயது 35). இவர் சம்ப வத்தன்று வீட்டின் கதவை சாத்தி விட்டு வெளியே சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து பிச்சைகனி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதில், அம்பேத்கர் தெருவை சேர்ந்த தர்மராஜ், பால்பாண்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் அம்பேத்கர் தெருைவ சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மாவூத்து பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளர்.

    சம்பவத்தன்று வெல்டிங் பட்டறையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (33). இவரது வீட்டில் இருந்த 1.4 பவுன் நகை திருடுபோனது.

    இதுகுறித்து எம்.கூமாபட்டி போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதில், நகை திருடு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, சிவா, குட்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×