search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    திருக்காட்டுப்பள்ளி அருகே கோவில் கோபுர கலசங்கள் திருட்டு

    திருக்காட்டுப்பள்ளி அருகே கோவில் கோபுர கலசங்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் மதுரைவீரன், சப்தகன்னியர் தனி சன்னதியில் உள்ளனர். நேற்று கோவிலுக்கு பக்தர்கள் சென்றபோது கோவிலின் கோபுரத்தில் இருந்த பழமை வாய்ந்த கலசங்கள் திருட்டுப்போய் இருந்தது. செல்லியம்மன் கோவில் மற்றும் அத்துடன் இணைந்த சிறு சன்னதியில் இருந்து மொத்தம் 4 கலசங்கள் திருட்டுப்போயிருந்தது. கோவிலில் கலசங்கள் திருட்டுப்போனது குறித்து கோவில் நிர்வாகி திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் கோபுர கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×