search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    வங்கி ஊழியர் வீட்டில் 36 பவுன் நகை திருட்டு

    கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டில் 36 பவுன் நகை திருட்டு போனது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே உள்ள அரசனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவர் அங்குள்ள தொடக்க கூட்டு றவு வங்கியில் தலைமை எழுத்தராக உள்ளார். 

    கடந்த மாதம் 5-ந் தேதி குடுமபத்தினர் நகைகளை அணிந்துகொண்டு ஒரு விசேஷத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து அனைத்து நகைகளையும் ஒரு பேக்கில் வைத்து பூட்டியுள்ளார்.  

    14-ந் தேதி பேக்கை திறந்து பார்க்கும்போது அதிலிருந்த 35½ பவுன் நகைகளை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிவசாமி நகைகளை வீடு முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் பலனில்லை. 

    இதுகுறித்து சிவசாமி பூவந்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.  

    புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்கு பதிந்து நகையை யாரேனும் மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×