search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple lock break"

    காரிமங்கலம் அருகே நேற்று இரவு கோவில் உண்டியலை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அடிலம் ஊராட்சி உட்பட்ட ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தில் மஹா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலை நேற்று இரவு பூசாரி வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை பூசாரி மீண்டும் கோவிலை திறக்க வந்தார்.

    அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து ரூ.6 லட்சம் பணத்தையும், 3 பவுன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள முருகன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபோன்று அள்ளிகுட்டை பகுதியில் உள்ள மாரியம்மன்கோவிலிலும் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தபட்ட போலீசார் அந்தந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மர்ம நபர்களை கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    செஞ்சி அருகே பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஒரு அறையில் பல கோடி மதிப்புள்ள 35 ஐம்பொன் சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி சந்திரன் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் சிலர் இந்த கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றனர். அந்த அறையில் போடப்பட்டுள்ள பூட்டுகளை கடப்பாரையால் உடைத்தனர்.

    பூட்டை உடைத்ததும் அவர்கள் உள்ளே சென்றனர். அங்கிருந்த 6 ஐம்பொன் சிலைகளை எடுத்து சாக்கு மூட்டைகளில் கட்டினர். பின்பு அவற்றை தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை 530 மணிக்கு பூசாரி சந்திரன் கோவில் நடை திறப்பதற்காக வந்தார். அப்போது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து அந்த கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையறிந்ததும் கிராம மக்கள் திரண்டு கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்றனர். அந்த அறையில் இருந்த மல்லிநாதர்-கீர்த்தகரர், தர்மேந்தர், பத்மாவதி, ஜோலாம்பாள், பாசுவநாதர் உள்பட 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போய் இருந்தன.

    கொள்ளை போன சாமி சிலைகளின் மதிப்பு ரூ.1½ கோடியாகும். மேலும் இந்த கோவிலில் இருந்த 29 சிலைகள் பத்திரமாக உள்ளன. இதனால் பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் தப்பின.

    இந்த கொள்ளை குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பி ரண்டு ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    கோவிலில் சாமி சிலைகள் திருட்டுப்போன அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது.


    மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர். கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×