search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாப்பாரப்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து நகை- உண்டியல் பணம் கொள்ளை
    X

    பாப்பாரப்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து நகை- உண்டியல் பணம் கொள்ளை

    பாப்பாரப்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பென்னாகரம் செல்லும் மெயின் ரோட்டில் தொட்லாம்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக ராமன் உள்ளார். 

    இந்த நிலையில், நேற்று காலை 5 மணிக்கு வழக்கம்போல் கோவிலில் திறப்பதற்காக ராமன் வந்தார். அப்போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த, கால் பவுன் தங்க தாலியையும் கொள்ளை அடிக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து பூசாரி ராமன், பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×