search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே முதாட்டி - வாலிபரை தாக்கி  நகை பறிப்பு
    X

    சங்கராபுரம் அருகே முதாட்டி - வாலிபரை தாக்கி நகை பறிப்பு

    • இருசக்கர வாகனத்த்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர்.
    • ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரோடுபரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஷம்சுதீன்(வயது30). இவர் வடசேமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செல்போனில் அழைப்பு வந்ததால், மேலேரி தனியார் கல்லூரி அருகில் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு ஷம்சுதீன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது சங்கரா புரத்தில் இருந்து கள்ளக்கு றிச்சி நோக்கி இருசக்கர வாகனத்த்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர். ஆனால் அவரோ தர மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஷம்சுதீனின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் கிழித்து விட்டு அவரிடம் இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    படுகாயம் அடைந்த சம்சுதீனை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து செல்போன்களை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சங்கராபுரம் சீர்பாத நல்லூர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்(62). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் முனியம்மாளிடம் பேச்சு கொடுத்து அவரது கழுத்தில் கிடந்த ரூ.60 ஆயிரம் மதிப்புடைய 3 பவுன் சங்கிலியை பறித்து க்கொண்டு, தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்து றைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவுசெய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×