search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டில் பல்வேறு பொருட்கள் திருட்டு
    X

    பூட்டிய வீட்டில் பல்வேறு பொருட்கள் திருட்டு

    • முன்பக்கம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.
    • மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவஸ்தாசா வடியை சேர்ந்தவர்அசார் முகமது.

    இவர் வெளிநா ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நஷியாபேகம் (வயது 28).

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முன்பக்கம் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை.

    மேலும் வீட்டினுள் இருந்த ஹோம் தியேட்டர், தையல் எந்திரம், பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×