search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mysterious men"

    • காசிராமன் சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
    • யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாக ராஜபுரத்தை சேர்ந்தவர் காசிராமன் (வயது 40). சென்னை யில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் தியாகராஜபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த காசிராமன் வீட்டை திறந்து பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன.

    அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 3 வெள்ளி குத்து விளக்கு உட்பட வெள்ளி பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து காசிராமன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

    • சுவரை உடைக்கும் போது சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
    • மர்ம நபர்கள் இரும்பு கம்பியை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேரிஸ் கார்னர் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. பாருடன் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன் உள்ளிட்ட நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் பாரிலும் சிலர் பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்று இரவு பணி முடிந்து டாஸ்மாக் கடை மற்றும் பார் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பின் பக்கமாக வந்தனர். பின்னர் அவர்கள் இரும்பு கம்பியால் சுவரை உடைத்தனர். வேகம் வேகமாக சுவரை உடைக்கும் போது சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இதனைப் பார்த்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டனர். அதில் சில அடி நீளத்துக்கு சுவரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

    முன்பக்கம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்–பட்டுள்ளதால் பின்புறமாக வந்து சுவரை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் மது பாட்டில்களை கொள்ளை அடிக்க முயன்றது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பொருத்தப்–பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழ்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சகுந்தலா (வயது 55). சம்பவத்தன்று இவர் சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து சகுந்தலா, சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×