search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெடிகுண்டு வீசி தொழில் அதிபரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்
    X

    வெடிகுண்டு வீசி தொழில் அதிபரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்

    • வெடிகுண்டு வீசி தொழில் அதிபரை கொல்ல முயன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    • போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). இவர் அதே பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். இவர் தினமும் இரவில் அலுவலகத்திலேயே தூங்குவது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு விக்னேஷ் கார்மெண்ட்ஸ் வாசலில் கட்டிலில் தூங்கி னார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கார்மெண்ட்சுக்குள் நுழைய முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த விக்னேஷ் யார் என்று பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். மறுநாள் இரவும் விக்னேஷ் கார்மெண்ட்ஸ் வெளியே தூங்கினார்.

    நள்ளிரவு அங்கு வந்த முகமூடி நபர்கள் 2 பேர் தாங்கள் வைத்திருந்த மண்எண்ணை குண்டை எடுத்து வீசி விட்டு தப்பினர். இதில் கட்டிலில் பட்டு அவை வெடித்தன. இதில் அதிர்ஷ்வசமாக விக்னேஷ் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் கட்டில் எரிந்து நாசமானது.

    இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

    சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரண மாக விக்னேசை கொல்ல முயற்சி நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×