என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
    X

    கோப்புபடம்.

    முத்தூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

    • சூதாட பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ .52 ஆயிரத்து100 ஐ கைப்பற்றினர்.
    • வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடை டாஸ்மாக் அருகே காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது காசு வைத்து சூதாடி கொண்டிருந்த ஆறுமுகம் (வயது 56), ராமசாமி (59), பாலகிருஷ்ணன் (61), சதீஷ்குமார்(34), மணிகண்டன் (44), சரவணன் (45),சிவக்குமார் (46), காங்குசாமி (67), வேலுசாமி ,மற்றொரு மணிகண்டன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ .52 ஆயிரத்து100 ஐ கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×