என் மலர்
நீங்கள் தேடியது "பண பரிவர்த்தனை"
- காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும்.
- 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.
புதுடெல்லி:
காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதற்கான சோதனை முயற்சிகளை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று மேற்கொள்கின்றன.
வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு 1 மணி நேரத்தில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும். டெபாசிட் செய்த காசோலைகளை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும். வங்கிகள் அதை செய்யும் தவறும் பட்சத்தில் காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.
1980-ம் ஆண்டுகளில் வங்கிகளில் காசோலையை செலுத்தினால் அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வாரகாலம் ஆகும். பின்பு அது 3 நாட்களாக குறைந்தது. 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.
தற்போது அது 1 நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் வரவுவைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்கிறது.
- தனிநபர் பண பரிவர்த்தனை ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது.
இன்று முதல் UPI மூலம் பொருட்கள், சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனைக்கான வரம்பு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை மாற்றி ஏற்கனவே இருந்து வரும் பணபரிவர்த்தனை தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்ததை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.
- கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்கிறது.
- நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
சென்னை:
யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை மாற்றி ஏற்கனவே இருந்து வரும் பணபரிவர்த்தனை தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்ததை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.
இந்த உயர்த்தப்பட்ட பரிவர்த்தனை வரம்பு வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்று துபாயில் நடைபெற்ற 28வது உலகளாவிய போஸ்டல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்த்தனைகளை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தும் UPI பணபரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இன்று துபாயில் நடைபெற்ற 28வது உலகளாவிய போஸ்டல் காங்கிரஸ் மாநாட்டில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா UPI–UPU ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதன்மூலம் 192 நாடுகளில் UPI பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ளமுடியும். விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் பாதுகாப்பை வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் மோசடிகளை தடுக்க முடியும் என்று NPCI தெரிவித்துள்ளது.
UPI பணப்பரிவர்த்தனையில் இருக்கும் 'Request Money' அம்சத்தை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நிரந்தரமாக நீக்க தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மோசடிகளை தடுக்கவும் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
- கடந்த 1-ந்தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ என்கிற (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
இதனை தொடர்ந்து, யுபிஐ பண பரிவர்த்தனைக்கு கடந்த 1-ந்தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும். உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும். ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 90 வினாடிகள் கட்டாய இடைவெளிக்குப் பிறகு தான் பயனர் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்க முடியும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பயனர்கள் பாதிப்படுவார்கள் என கூறப்பட்டது.

இந்த நிலையில், கட்டுப்பாடுகள் அமலான மறுநாளே யுபிஐ வரலாற்றில் புதிய உச்சமாக அதாவது ஆகஸ்ட் 2-ந்தேதி 70.7 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய பேமண்ட் கார்பரேஷன் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் சராசரியாக தினமும் 65 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக கூறும் NPCI அடுத்தாண்டு தினசரி 100 கோடி பரிமாற்றங்கள் என்ற நிலை உருவாகும் என கணித்துள்ளது.
- யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும்
- ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) நாளை (ஆகஸ்ட் 1) முதல் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது.
பேலன்ஸ் சரிபார்ப்பதற்கான கட்டுப்பாடு:
GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும்
வங்கி கணக்கு விவரங்களை பார்ப்பதற்கான கட்டுப்பாடு:
உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
ஆட்டோபே பரிவர்த்தனைகளுக்கு நேர கட்டுப்பாடு:
இனிமேல், ஆட்டோபே பரிவர்த்தனைகள் நாள் முழுவதும் எந்நேரத்திலும் நடைபெறுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயலாக்கப்படும்.
கட்டண நிலையை பார்ப்பதற்கான வரம்பு:
ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால், அதன் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 90 வினாடிகள் கட்டாய இடைவெளிக்குப் பிறகு தான் பயனர் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்க முடியும்.
- டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் தற்போது 80% க்கும் அதிகமானவை UPI மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
- PIN நம்பரை மறந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது.
PIN நம்பருக்கு பதிலாக பயோமெட்ரிக் மூலம் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியை தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) விரைவில் அமலுக்கு கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது UPI பணபரிவர்தனைக்கு PIN நம்பர் பயன்படுத்தப்படும் நிலையில், அதனை தவிர்த்து கைரேகை, முக அடையாள வசதிகளுடன் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் தற்போது 80% க்கும் அதிகமானவை UPI மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
PIN நம்பரை மறந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பணமோசடி ஏற்பட வாய்ப்புள்ளது. பயோமெட்ரிக் முறை இந்த சிக்கல்களை தீர்க்கலாம். ஆகவே PIN நம்பர் முறையை விட இது பாதுகாப்பானதாக இருக்கலாம் ன்று கூறப்படுகிறது.
இந்த மாற்றங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- கியூ.ஆர். கோடு மூலம் பண பரிவர்த்தனை நடந்தது.
- பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சங்கங்களில் உள்ள நியாய விலை கடைகளில் கியூ.ஆர். கோடு இயந்திரம் மூலம் பண வர்த்தனை மேற்கொள்ள உரிய கருவிகளை கூடுதல் பதிவாளர் வில்வசேகரன் வழங்கினார்.
அப்போது மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராஜலஷ்மி. அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் வீரபாண்டி, பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பனியன் நகரான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளி மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
- டாலர் சிட்டி திருப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 142 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. படித்தோர், படிக்காதோர் என யார்வேண்டுமானாலும், கையில் செல்போன் இருந்தால் போதும், மிக எளிதாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது. இதனால் நேரம் மிச்சப்படுத்தப்படுவதுடன், பண பாதுகாப்பு, சில்லரை தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மீதான மக்களின் ஆர்வம் அதிகரிக்க முக்கிய அம்சமாக உள்ளன.
அந்த வகையில், டாலர் சிட்டி திருப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் 6 மாதத்தில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 142 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி கூறியதாவது:-
பனியன் நகரான திருப்பூரில் வெளிமாவட்டம், வெளி மாநில மக்கள் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர். பொதுமக்கள், வர்த்தகர்கள் மத்தியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 2.59 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக பீம் மற்றும் யு.பி.ஐ., மூலமாக மட்டும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 812 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. பீம் மற்றும் ஆதார் வாயிலாக 4,971 கோடி ரூபாய், பாரத் க்யூ.ஆர்., கோடு வாயிலாக 94.84 கோடி, ஐ.எம்.பி.எஸ்., மூலம் 90,423 கோடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக 3,679 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இணையதளம் இல்லாத யு.எஸ்.எஸ்.டி., மூலம் 160 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. வரும் நாட்களில் பணமில்லா பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






