

UPI பணப்பரிவர்த்தனையில் இருக்கும் 'Request Money' அம்சத்தை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நிரந்தரமாக நீக்க தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மோசடிகளை தடுக்கவும் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.