search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maida"

    • வெள்ளம் சூழ்ந்ததால், பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.
    • மைதா மாவு தூவப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சென்னை முழுக்க வெள்ளம் சூழ்ந்ததால், பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.

    புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து நான்கு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் தூய்மை பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மற்ற பகுதிகளை போன்றே இங்கும் தூய்மை பணிகளுக்கு பிறகு, இறுதியாக ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

     


    செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் மைதா மாவு மூட்டையின் கவர்கள் இடம்பெற்று இருப்பதை பார்த்து அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்படி தூய்மை பணிகளின் அங்கமாக ப்ளீச்சிங் பவுடர் தூவுவதற்கு மாற்றாக சாலையோரம் மைதா மாவு தூவப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில், செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகளுக்கு மைதா மாவு பயன்படுத்தப்படவில்லை என அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர், மைதா மாவு பையில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கலந்த பவுடரையே சாலையோரம் தூவியதாக தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா- ஒரு கப்

    முட்டை- 1

    உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை

    ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

    பால்- அரை கப்

    தேங்காய் பால்- ஒரு கப்

    தேங்காய் துருவல் ஒரு கப்

    நெய்- தேவையான அளவு

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மாவுக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மாவுக்கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்து தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். கேரளா ஸ்டைலில் சுவையான சுருளப்பம் தயார். இதனுடன் சூடான லெமன் டீ, அல்லது புதினா டீ நல்ல காமினேஷனாக இருக்கும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது. எளிய முறையில் தயார் செய்துகொள்ளலாம். அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம். நேரமும் மிச்சமாகும்.

    ×