என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deportees"

    • விசா விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
    • சவுதி அரேபியாவிலிருந்து கடந்த ஓராண்டில் 11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்தியர்கள் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து மொத்தம் 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

    சவுதி அரேபியா அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து மட்டும் கடந்த ஓராண்டில் 11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

    இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவிலிருந்து 3,800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்; இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

    மியான்மரில் இருந்து 1,591 பேரும், மலேசியாவில் இருந்து 1,485 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 1,469 பேரும், பக்ரைன் நாட்டிலிருந்து 764 பேரும், தாய்லாந்தில் இருந்து 481 பேரும், கம்போடியாவில் இருந்து 305 பேரும் இந்த ஆண்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 300 பேர் பனமாவில் உள்ளனர்.
    • அவர்கள் 40 சதவீதம் பேர் சொந்த நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக (ஆவணங்கள் இன்றி) குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை நாடு கடத்தியது. அவர்கள் இந்தியா வந்தடைந்துள்ளனர்.

    ஒவ்வொரு நாட்டின் குடிமகன்களையும் வெளியேற்ற கடினம் என்பதால் மொத்தமாக அனைவரையும் பனமா மற்றும் கோஸ்டா ரிகா நாட்டிற்கு நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டது. அதற்கு ஏற்றபடி இரண்டு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் நபர்கள், பனமாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள். அங்கிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அந்த வகையில் 300 பேரை பனமாவிற்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. இந்த 300 பேரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    இந்த 300 பேரில் சுமார் 40 சதவீதம் பேர் சொந்த நாடுகளுக்கு திரும்ப விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளது மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது பனமா அரசு ஒரு ஹோட்டலில் அவர்களை தங்க வைத்துள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உணவுகள் வழங்கும் பணியை பனமா அரசு செய்து வருகிறது.

    இதற்கிடையே பனமா ஹோட்டலில் உள்ளவர்கள், உதவி... உதவி... என கதறி வருகிறார்கள். மேலும், எங்கள் நாட்டில் பாதுகாப்பு இல்லை என எழுதி வெளியே தெரியும்படி ஒட்டி வைத்துள்ளனர்.

    இது தொடர்பகா பனமா அதிபர் கூறுகையில் "அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட இருக்கும் 299 பேர் பனமா அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் 171 பேர் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு செல்ல சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    171 பேரும் ஊடுருவல்காரர்களுக்கான அமைப்பு மற்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பு உதவியுடன் சொந்த நாடு செல்ல ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும் 128 பேர் சொந்த நாடு செல்வதற்கான நடைமுறை இன்னும் நடந்து வருகிறது.

    3-வது ஒரு நாட்டிற்கு அவர்கள் அனுப்பப்படுவதற்கான வழிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அயர்லாந்தை நாட்டைச் சேர்ந்த பெண் அவருடைய நாட்டிற்கு திரும்பியுள்ளார். சொந்த நாடு திரும்ப மறுக்கும் நபர்கள் தற்காலிகமாக டேரியன் மாகாணத்தில் தங்க வைக்கப்படுவார்கள்" என்றார்.

    அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கள் நாடுகளுக்கு திரும்பாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த வகையில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பாகிஸ்தானை சேர்ந்த 53 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.

    அவர்களை தனிவிமானம் மூலம் பாகிஸ்தான் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த 53 பேரில் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தவிர மற்ற 52 பேரும் பலத்த பாதுகாப்புடன் தனி விமானத்தில் பாகிஸ்தான் புறப்பட்டனர்.

    அந்த விமானம் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தது. இதையடுத்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரும் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
    ×