என் மலர்
நீங்கள் தேடியது "Islamabad"
- அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்.
- வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் உள்பட அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும், தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் விழிப்புடன் செயல்படவும், அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நகரம் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலம் முழுவதும் அங்கு அத்தியாவசியமற்ற மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பயணங்களை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தின் அமைதியை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நகர துணை கமிஷனர் இர்பான் நவாஸ் மேமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கள் நாடுகளுக்கு திரும்பாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பாகிஸ்தானை சேர்ந்த 53 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.
அவர்களை தனிவிமானம் மூலம் பாகிஸ்தான் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த 53 பேரில் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தவிர மற்ற 52 பேரும் பலத்த பாதுகாப்புடன் தனி விமானத்தில் பாகிஸ்தான் புறப்பட்டனர்.
அந்த விமானம் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தது. இதையடுத்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரும் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவு இல்லை. இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் இருந்து தனியார் விமானம் ஒன்று, கடந்த 25-ந் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வந்து தரை இறங்கியது; அங்கு 10 மணி நேரம் தங்கி இருந்து விட்டு மீண்டும் டெல் அவிவ் புறப்பட்டு சென்றது என்று இஸ்ரேல் பத்திரிகையாளர் அவி சார்ப், டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். இது பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு மீது பலரும் சமூக வலைத்தளங்களில் சாடினர். இஸ்ரேல் விமானம் ரகசியமாக வந்து சென்றதின் பின்னணி என்ன என எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி, அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தின.
ஆனால் இஸ்ரேல் விமானம், இஸ்லாமாபாத்தில் வந்து தரை இறங்கியது என்ற தகவல் அடிப்படை ஆதாரமற்றது என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூது குரேஷி கூறும்போது, “இஸ்ரேல் விமானம் இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியதாக கூறுவது பொய்யான தகவல்” என்றார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, “இஸ்ரேலுடன் பாகிஸ்தான் எந்தவிதமான உறவும் வைத்துக் கொண்டிருக்கவில்லை” என்று கூறி உள்ளார்.
பாகிஸ்தான் தகவல் துறை மந்திரி பவத் சவுத்ரி கருத்து தெரிவித்தபோது, “ இஸ்ரேலுடனோ, இந்தியாவுடனோ அரசானது ரகசிய பேச்சு வார்த்தை நடத்தாது” என குறிப்பிட்டார். #Pakistan #Israeli #AircraftLanding #Islamabad
பாகிஸ்தானில் வரும் ஜூலை மாதம் 25-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி நசிருல் முல்க் நியமிக்கப்பட்டார். இவர் 1-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் 6 உறுப்பினர்களை கொண்ட புதிய மந்திரிசபை பதவி ஏற்றது. புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மந்திரிசபையில் இடம் பிடித்தவர்கள், பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் முன்னாள் கவர்னர் சாம்ஷெத் அக்தர், ரோஷன் குர்ஷித், பாரிஸ்டர் அலி ஜப்பார், முன்னாள் ஐ.நா. தூதர் அப்துல்லா உசேன் ஆரூண், அசம்கான், முகமது யூசுப் ஷேக் ஆவார்கள்.
இவர்கள் அனைவரும் நாட்டு நிர்வாகத்தில் இடைக்கால பிரதமர் நசிருல் முல்குக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நசிருல் முல்க் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மந்திரிகளுக்கான இலாகா விவரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.