என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H-1B visa holders"

    • அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை
    • எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

    அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு H-1B விசா வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்ச மாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

    இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இது எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது.

    இதற்கிடையே ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.

    இந்த நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க பரீசிலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு பல்வேறு துறை நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து உள்ளனர்.

    அமெரிக்காவின் மருத்துவத்துறை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று கருத்துக்கள் எழுந்தன. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மிகப்பெரிய மருத்துவ அமைப்புகள் கவலைகளை தெரிவித்தன.

    இதையடுத்து விசா கட்டண உயர்வில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறும் போது, "அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளன. அதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவார்கள் என்று தெரிவித்தார்.

    • இனிமேல் H-1B விசா பெற ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது
    • அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.

    இந்த புதிய உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அமெரிக்காவில் தற்போதைய விசாவில் படித்து வரும் மாணவர்கள் தங்களது படிப்பை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்து கொள்ளலாம். ஆனால் படிப்பை முடித்த பிறகும் அவர்கள் சிக்கல்களை சந்திக்கலாம்.

    படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணிபுரிய 1 லட்சம் டாலர்கள் (ரூ.88 லட்சம்) கட்டண உயர்வை செலுத்த வேண்டும். இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதை குறைக்கும் என்று கூறப்படுகிறது. 

    • அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
    • அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.

    இந்த புதிய உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் வருடாந்திர கட்டணம் அல்ல, ஒரு முறை விண்ணப்ப கட்டணம் மட்டுமே என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.

    ஏற்கனவே H-1B விசாக்களை வைத்திருப்பவர்கள் மற்றும் தற்போது அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் அமெரிக்கா வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் புதிதாக H-1B விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் 1,00,000 டாலர் (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும்
    • அதே சமயம், மதகிய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவுக்கு கவலை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் 1,00,000 டாலர் (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்ற டிரம்ப்பின் உத்தரவு இந்தியர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து இந்தியப் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவரான மகேந்திர தேவ் நேர்மறையான கருத்தை தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "இந்த கட்டண உயர்வு, திறமையான இந்திய நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து, அவர்கள் தங்கள் நாட்டிலேயே பணிபுரியவும், தொழில் தொடங்கவும் ஊக்குவிக்கும்.

    இதன் விளைவாக, பெங்களூரு, ஐதராபாத், மற்றும் குரேகான் போன்ற இந்திய நகரங்களில் புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் பெருகும். இது இந்தியாவின் 'விக்சித் பாரத்' கனவுக்கு உத்வேகம் அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    அதே சமயம், மதகிய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவுக்கு கவலை தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு குடும்பங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மனிதநேய விளைவுகளை உருவாக்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
    • இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பிரதமர் மோடிக்கு பிறந்தநாளுக்கு டிரம்ப் அழைத்து வாழ்த்து கூறிய பிறகு 'ஆப்கி பார், டிரம்ப் சர்க்கார்' அரசாங்கத்திடமிருந்து நீங்கள் பெற்ற பரிசுகளைப் பார்த்து இந்தியர்கள் வேதனைப்படுகிறார்கள்

    * H-1B விசாக்களுக்கு ஆண்டு கட்டணம் $100,000 (ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தப்பட்டது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை கடுமையாக பாதிக்கும். H-1B விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள்.

    * ஏற்கனவே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இதனால் 10 துறைகளில் மட்டும் இந்தியாவிற்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    * இந்திய அவுட்சோர்சிங்கை இலக்காகக் கொண்ட HIRE சட்டம்.

    * சபாஹர் துறைமுக விலக்கு நீக்கப்பட்டது, நமது மூலோபாய நலன்களுக்கு இழப்பு.

    * இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

    * டிரம்ப் சமீபத்தில் மீண்டும் (பதினொரு முறை!) தனது தலையீட்டால் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறுகிறார்.

    இந்தியாவின் தேசிய நலன்கள் மிக உயர்ந்தவை. கட்டி அணைப்பது, வெற்று முழக்கங்கள் இடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் மக்களை "மோடி, மோடி" என்று கோஷமிட வைப்பது என்பது வெளியுறவுக் கொள்கை அல்ல!

    வெளியுறவுக் கொள்கை என்பது நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது; இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பது மற்றும் ஞானத்துடனும் சமநிலையுடனும் நட்பு நாடுகளை வழிநடத்துவது பற்றியது" என்று தெரிவித்துள்ளார். 

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
    • இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி 2017 இல் பதிவிட்ட டுவீட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார். இப்பதிவில், "மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், இந்தியாவில் பலவீனமான ஒருவர் பிரதமராக உள்ளார்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
    • 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

    அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், H1B விசா என்பது அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை விசா. இதைப் பற்றி சுருக்கமாக இக்கட்டுரையில் பார்ப்போம்.

    H1B விசா யாருக்கு எல்லாம் கிடைக்கும்?

    * உயர் கல்வித் தகுதி (பொதுவாக Bachelor's அல்லது Master's degree) மற்றும் குறிப்பிட்ட துறையில் திறமை கொண்டவர்கள்.

    * பொதுவாக IT, Engineering, Finance, Medicine, Research போன்ற துறைகளில் வேலை பெறுபவர்கள்.

    யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

    * தனிநபர் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.

    * அமெரிக்காவில் உள்ள நிறுவனம் (Employer) தான் விண்ணப்பிக்க வேண்டும்.

    செல்லுபடியாகும் காலம்:

    * ஆரம்பத்தில் 3 வருடம்.

    * அதிகபட்சம் 6 வருடம் வரை நீட்டிக்கலாம்.

    விசா தேர்வு முறை:

    * ஒவ்வொரு ஆண்டும் H1B lottery system மூலம் தேர்வு செய்கிறார்கள்.

    • வருடத்திற்கு சுமார் 65,000 விசா + Master's degree பெற்றவர்களுக்கு 20,000 விசா ஒதுக்கப்பட்டுள்ளன.

    சிறப்பம்சம்:

    * விசா பெற்றவர் அதே நிறுவனத்துக்கு (Employer) மட்டுமே வேலை செய்ய முடியும்.

    * நிறுவனத்தை (Employer) மாற்ற வேண்டுமென்றால் புதிய H1B transfer செய்ய வேண்டும்.

    நன்மைகள்:

    * அமெரிக்காவில் சட்டப்படி வேலை செய்யலாம்.

    * குடும்பத்தினரை (spouse, children) H4 visa மூலம் அழைத்துச் செல்லலாம்.

    * நிரந்தர குடியுரிமைக்கு (Green Card) வழிவகுக்கும்.

    • அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
    • அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் வரை அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவிற்குள் நுழைபவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கே தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

    ‘எச்-1பி’ விசாதாரர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘ஒர்க் பெர்மிட்’ என்னும் பணி அனுமதி வழங்குவது தொடர வேண்டும் என்று அமெரிக்க அரசிடம், அந்த நாட்டின் 130 எம்.பி.க்கள் முறையீடு செய்து உள்ளனர். #H1BVisa #WorkPermit
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் 2015-ம் ஆண்டு ஒபாமா ஜனாதிபதியாக இருந்தார். அப்போது அவர், அங்கு குடியுரிமை பெறாமல் ‘எச்-1’ பி விசாவில் தங்கி வேலை செய்கிறவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினார். இதனால் ‘எச்-1’ பி விசாவில் அங்கு வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாரும், பெண்களின் கணவர்மாரும் வேலை வாய்ப்பினை பெற்று பலன் அடைந்தனர். அவர்கள் குடும்பமாக அங்கு வாழவும் அது வழி வகுத்துத்தந்தது.



    இந்த அனுமதியால் அங்கு 1 லட்சத்துக்கும் அதிகமான ‘எச்-4’ விசாதாரர்கள் பலன் அடைந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள்.

    ஆனால் இப்போது அங்கு ஜனாதிபதியாக உள்ள டொனால்டு டிரம்ப், ‘அமெரிக்கர்கள் அமெரிக்க பொருட் களையே வாங்க வேண்டும், அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களையே பணியில் அமர்த்த வேண்டும்’ என்ற கொள்கையை அறிமுகம் செய்து, அதை தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில் இப்போது அங்கு ‘எச்-1’ பி விசாவில் தங்கி வேலை செய்கிறவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா அளித்து, ‘ஒர்க் பெர்மிட்’ என்னும் பணி அனுமதி வழங்கும் திட்டத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்து உள்ளது.

    இது அங்கு வேலை பார்க்கிற இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கு சாபம் போல அமைந்தது. பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலையை உருவாக்கி உள்ளது.

    இது அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    முந்தைய ஒபாமா காலத்தில் ‘எச்-1’ பி விசாவில் தங்கி வேலை செய்கிறவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா அளித்து பணி அனுமதி வழங்கி கொண்டு வந்த திட்டம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய வம்சாவளி எம்.பி., பிரமிளா ஜெயபால் தலைமையில் 130 எம்.பி.க்கள் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி கிறிஸ்ட்ஜென் நீல்சனிடம் முறையீடு செய்து உள்ளனர்.

    அவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு வழங்கியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘எச்-4’ விசாதாரர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு ஒர்க் பெர்மிட் வழங்கும் முறை, நமது நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்கி இருக்கிறது. அதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி உள்ளது. இவர்கள் அனைவரும் பல்லாண்டு காலமாக இங்கு வசித்து வருகிறார்கள். இவர்களில் பலரும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான நடைமுறையை மேற்கொண்டு வருகின்றனர்.

    எனவே ‘எச்-4’ விசாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிற பணி அனுமதியை ரத்து செய்தால், அமெரிக்க நிறுவன அதிபர்களின் போட்டித்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க பொருளாதாரத்திலும் பாதிப்பு உண்டாகும். ‘எச்-4’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களும், குடும்பங்களும் பாதிப்புக்கு ஆளாகும்.

    எனவே ஏற்கனவே ‘எச்-4’ விசாதாரர்களுக்கு வழங்கி வருகிற பணி அனுமதி திட்டத்தை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #H1BVisa #WorkPermit
    ×