என் மலர்tooltip icon

    இந்தியா

    அலாஸ்காவில் டிரம்ப், புதின் பேச்சுவார்த்தை: இந்திய வெளியுறவுத்துறை வரவேற்பு
    X

    அலாஸ்காவில் டிரம்ப், புதின் பேச்சுவார்த்தை: இந்திய வெளியுறவுத்துறை வரவேற்பு

    • ரஷியா, உக்ரைன் இடையிலான போா் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது.
    • இப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    புதுடெல்லி:

    ரஷியா, உக்ரைன் இடையிலான போா் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ரஷியாவுடன் அமெரிக்காவுக்கு மோதல் போக்கு அதிகரித்தது. அமைதி ஒப்பந்தத்தை கொண்டு வர ரஷியாவுக்கு டிரம்ப் நேற்று வரை கெடு விதித்திருந்தார்.

    அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதற்கிடையே, அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் புதின் இடையிலான சந்திப்பு வரும் 15-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், எனக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு வரும் 15-ம் தேதி அலாஸ்காவில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான ஒரு இறுதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.

    டிரம்ப்-புதின் சந்திப்பை ரஷியாவும் உறுதிப்படுத்தியது.

    இந்நிலையில், அலாஸ்காவில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் புதின் சந்திப்பு நடைபெற உள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.

    இந்த சந்திப்பு உக்ரைனில் அமைதியை கொண்டுவர உதவி புரியும், இது போருக்கான காலம் அல்ல என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×