ட்ரம்ப் ரிசார்ட்டிற்குள் நுழையமுயன்ற இளைஞர் சுட்டுக்கொலை!

அதிபர் தேர்தலுக்கு முன்பும் ட்ரம்ப்மீது இரண்டுமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.இந்த சம்பவம் அதிகாலை 1:30 மணிக்கு நடந்தது.
ட்ரம்ப் ரிசார்ட்டிற்குள் நுழையமுயன்ற இளைஞர் சுட்டுக்கொலை!
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சொந்தமான புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ சொகுசு விடுதிக்குள் (ரிசார்ட்) அத்துமீறி நுழைய முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள இந்த ரிசார்ட்டில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேன் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரகசிய சேவை ஏஜெண்டுகள் மற்றும் பாம் பீச் கவுண்டி ஷெரிஃப் துணை அதிகாரி ஆகியோர் இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் வட கரோலினாவைச் சேர்ந்தவர் என்றும், சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. டிரம்ப் பெரும்பாலும் வார இறுதி நாட்களை தனது ரிசார்ட்டில் கழித்தாலும், இந்த சம்பவத்தின் போது அவர் வெள்ளை மாளிகையில் இருந்தார். மனைவி மெலனியா ட்ரம்பும் அவருடன்தான் இருந்தார் என கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தொடர்ந்து இதுதொடர்பாக ரகசிய சேவை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com