என் மலர்
நீங்கள் தேடியது "INDvsNED"
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது.
- ஷிவம் துபே அதிரடியாக ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார்.
அகமதாபாத்:
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஷிவம் துபெ அதிரடியாக
ஆடி 31 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன்னும், திலக் வர்மா 31 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும் எடுத்தனர்.
நெதர்லாந்து சார்பில் வான் பீக் 3 விக்கெட்டும், ஆர்யன் தத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. பாஸ் டி லீட் 33 ரன்னும், ஜாக் லயன் 26 ரன்னும், மைக்கேல் லெவிட் 24 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 4வது வெற்றியைப் பதிவு செய்தது
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், ஷிவம் துபெ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
- பெங்களூருவில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உலக கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
- கேப்டன் ரோகித் சர்மா 61 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார்.
- ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அபாரமான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 61 மற்றும் 51 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 51 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவருடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. போட்டி முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்களை குவித்தது. ஷ்ரேயஸ் அய்யர் 128 ரன்களுடனும், சூர்ய குமார் யாதவ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதிரடியாக ஆடிய கே.எல். ராகுல் 102 ரன்களை குவித்தார். நெதர்லாந்து சார்பில் லீட் 2 விக்கெட்டுகளையும், மெக்கெரீன், மெர்வே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.






