search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL T20"

    • இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜிடி- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதல்.
    • விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 31 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 277 ரன்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் எடுத்த அணி என்ற மகத்தான சாதனையை படைத்து அனைவரையும் மலைக்க வைத்தது.

    குஜராத் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை சாய்த்தது. 2-வது ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் பணிந்தது.

    இதை தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும், 2-வது ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சையும் தோற்கடித்து வலுவான நிலையில் இருக்கிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும். அடுத்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.

    சென்னை அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் ஆவலுடன் தயாராகி உள்ளது.

    • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது
    • குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

    கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.

    கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • பிளே ஆப் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஓய்வு குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் டோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
    • "இங்கே மீண்டும் சேப்பாக்கத்தில் வந்து விளையாடுவீர்களா?" என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    ஐபிஎல் தொடரில் 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையையும் சிஎஸ்கே படைத்துள்ளது.

    சென்னை அணியுடனான நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 26ம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2ல் விளையாடும்.

    இந்நிலையில், பிளே ஆப் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஓய்வு குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் டோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    "இங்கே மீண்டும் சேப்பாக்கத்தில் வந்து விளையாடுவீர்களா?" என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தோனி நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றாலும், ஐபிஎல் முடிந்தவுடன் தனது விளையாட்டு குறித்து உடனடியாக முடிவு செய்யமாட்டேன் என்று தெளிவாக பதிலளித்துள்ளார்.

    இதுகுறித்து டோனி மேலும் கூறியதாவது:-

    ஓய்வு குறித்து எனக்கு தெரியாது. அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்திற்கு இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கிறது. எனவே இப்போது ஏன் அது பற்றி யோசிக்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி. விளையாட்டிலோ அல்லது வெளியே எங்கேயாவது உட்கார்ந்தோ நான் எப்போதும் சென்னை அணிக்காக இருப்பேன்.

    வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நான் இப்போது நான்கு மாதங்களாக ஃபார்மில் இல்லை. ஜனவரி 31ம் தேதி நான் எனது வேலையை முடித்துவிட்டு மார்ச் 2-3ம் தேதிகளில் பயிற்சி செய்யத் தொடங்கினேன். ஓய்வு குறித்து முடிவெடுக்க நிறைய நேரம் எடுக்கும். எனக்கு போதுமான நேரம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    • லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் பிளே-ஆப் போட்டிகள் நடைபெறுகிறது.

    10 அணிகள் பங்கேற்ற 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31-ந்தேதி தொடங்கியது. அன்றிலிருந்து நாள்தோறும் இடைவிடாது ஆட்டங்கள் நடந்து வந்தது. நேற்றிரவு 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் அரங்கேறியது.

    இந்த லீக் ஆட்டத்தின் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் பிளே-ஆப் போட்டிகள் நடைபெறுகிறது. இதனால், இன்று போட்டிகள் எதுவும் நடைபெறாமல் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. 24-ந்தேதி வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் சந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்ககளை எடுத்து குஜராத் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.
    • பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெறியேறியது.

    ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    குஜராத் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். தோற்கும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

    இந்த சூழலில் மழையின் காரணமாக பெங்களூரு- குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் தாமதமாக போடப்பட்டது.

    இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில், விராட் கோலி 61 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    தொடர்ந்து, பிளெஸிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், மேக்ஸ்வெல் 11 ரன்களும் லாம்ரார் ஒரு ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அனுஜ் ரவாட் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, யாஷ் தயால், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.

    இதைதொடர்ந்து, குஜராத் அணி 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

    இதில், அதிபட்சமாக 52 பந்துகளில் சுப்மன் கில் சதம் அடித்து 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து, விஜய் சங்கர் அரை சதம் அடித்து 53 ரன்களும், விரிதிமான் சாகா 12 ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்தனர். ராகுல் திவாதியா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்ககளை எடுத்து குஜராத் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    இதனால், பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெறியேறியது. குஜராத் அணியின் வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    • யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கெய்ல் 6 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
    • இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 5 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி- குஜராத் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஆர்.சி.பி களம் இறங்கியது.

    டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், டூ பிளெஸிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

    ஆனால் மிடில் ஓவரில் ரஷித் கான், நூர் ஆகியோர் சிறப்பாக பந்து வீச டூ பிளெஸிஸ், மேக்ஸ்வெல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் ஆர்.சி.பி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    ஆனால் விராட் கோலி தன்னம்பிக்கையுடன் விளையாடினார். அரை சதம் அடித்த அவர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

    இதன் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அவர் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் ஏழு சதங்கள் அடித்தது கிடையாது.

    ஆகவே, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கெய்ல் 6 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 5 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    • லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஐபிஎல் என்றாலே விறுவிறுப்பு தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் கடைசி நான்கு போட்டிகள் இருக்கும் வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் கடைசி மூன்று அணிகள் எவை என்பதில் விறுவிறுப்புகள் கூடிக் கொண்டே இருந்தது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு ரெண்டாவது அணியாக முன்னேறியது. கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதின.

    இந்த ஆட்டம் லக்னோவிற்கு மட்டுமல்ல மும்பை, ஆர் சி பி அணிகளுக்கும் முக்கிய போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் ஒருவேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ஆர் சி பி மும்பை ஆகிய இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எளிதாக மூன்றாவது நான்காவது இடங்களை பிடிக்கும் என்ற நிலை இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் ரிங் சிங் அதிரடியாக விளையாடி கொல்கத்தாவை வெற்றிபெறும் நிலைக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் கடைசி மூன்று பந்துகளில் 3 சிக்ஸ் தேவை என்ற நிலையில் இரண்டு சிக்ஸ் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்ததால் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இன்னும் ஒரு இடம் தான் இருக்கிறது. அந்த இடத்திற்கு ஆர் சி பி, மும்பை ராஜஸ்தான் 3 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ரன் ரேட் அடிப்படையில் இருந்தாலும் அந்த அணிக்கு 14 போட்டிகள் முடிந்து விட்டன.

    இன்று மதியம் நடக்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஹைதராபாத் அணிகள் வான்கடே மைதானத்தில் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றே தீர வேண்டும். ஒரு வேளை வெற்றி பெற்றாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏனென்றால் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் ஆர்சிபி குஜராத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஏற்கனவே மும்பையை விட அதிக ரன் ரேட்டில் இருக்கும் ஆர்சிபி நாலாவது இடத்திற்கு முன்னேறி விடும்.

    ஒருவேளை ஆர்சிபி தோல்வி அடைந்து மும்பை வெற்றி பெற்றால் மும்பை முன்னேறிவிடும். இதனால் மும்பை அணி வான்கடேயில் வெற்றி பெற்றாலும் ஆர்சிபி குஜராத் அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதனால் இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை சொந்த மண்ணில் ஆர்சிபி யும், மும்பையும் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணியும் இந்த இரண்டு அணிகளும் தலா ஏழு வெற்றிகளுடன் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும்.

    ஒருவேளை மும்பை தோற்று ஆர் சி பி-யும் தோல்வி அடையும் நிலையில் இருந்தால் கூட கடைசி போட்டி என்பதால் குஜராத்தை இத்தனை ரன்னுக்கு சுருட்ட வேண்டும் அல்லாத பட்சத்தில் இத்தனை ரன்கள் அடிக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே எந்த ஒரு நிலையில் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெறும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இன்றைய சண்டே ஸ்பெஷல் ஆக ரசிகர்களுக்கு அமையும் என்ற சந்தேகம் இல்லை. அதிரடி பரபரப்பு திரில் மோதலை இன்றைய போட்டியில் அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.

    • லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது.
    • அதிகபட்சமாக அரை சதம் அடித்த ரிங்கு சிங் 51 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார்.

    16-வது ஐபிஎல் தொடரில் 68-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் லக்னோ அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியினரின் அபார பந்துவீச்சில் லக்னோ அணி சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 73 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய ஆயுஷ் பதோனியுடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்த நிலையில் பதோனி 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 58 ரன்னில் வெளியேறினார். இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது. கொல்கத்தா சார்பில் ஷர்துல் தாக்குர், வைபவ் அரோரா, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக அரை சதம் அடித்த ரிங்கு சிங் 67 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார்.

    தொடர்ந்து, ஜாசன் ராய் 45 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 24 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 ரன்களும், நிதிஷ் ராணா 8 ரன்களும், ஆண்டிரே ரூசல் 7 ரன்களும், ஷார்துல் தகூர் 3 ரன்களும், சுனில் நரைன் ஒரு ரன்னும் எடுத்தனர். இறுதியாக களமிறங்கிய வைபவ் அரோரா ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

    ஆட்டத்தின் முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றிப் பெற்றது.

    • ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.
    • பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்னிலும், ராகுல் திரிபாதி 15 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் மார்கிராமுடன் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய கிளாசன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் 27 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. 

    இதில், அதிகபட்சமாக விராட் கோலி 63 பந்துகளில் சதம் அடித்து ஆட்டத்தை இழந்தார். தொடர்ந்து, பிளெஸ்ஸி 71 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 5 ரன்களும், பிரேஸ்வெல் 4 ரன்களும் எடுத்து ஆட்டத்தை இழக்காமல் விளையாடினர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஐதரபாத்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
    • பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ரன்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர்.

    அதன்பின்னர் ரூசோ அதிரடியாக ஆடி ரன் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

    கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார். பில் சால்ட் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 48 ரன்களில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    தொடர்ந்து, அதர்வா டைட் 55 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 22 ரன்களும், சாம் குரான் 11 ரன்களும், ஷாருக்கான் 6 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய ராகுல் சஹார் ரன்கள் எடுக்கவில்லை.

    இதன் முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

    • பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
    • 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.

    ஆனால் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. பிரப்சிம்ரன் சிங் 12 ரன், லியாம் லிவிங்ஸ்டோன் 15 ரன், ஜிதேஷ் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    நெருக்கடிக்கு மத்தியிலும், சிறப்பாக ஆடி அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்த ஷிகர் தவான் 57 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ரிஷி தவான் 19 ரன்களிலும், சாம் கரன் 4 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ஷாருக்கான் 21 ரன்களும், ஹர்பிரீத் பிரார் 17 ரன்களும் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தினார். ஹரிஷ் ராணா 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராணா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஆந்திரே ருசல் 42 ரன்களும், ராசன் ராய் 38 ரன்களும், ரிங்கு சிங் 21 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களும் எடுத்தனர். இறுதியாக விளையாட வந்த ஷர்துல் தகூர் பூஜ்ஜியம் ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.

    ×