என் மலர்
விளையாட்டு

புரோ கபடி லீக்: பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக நடந்த லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன.
இந்நிலையில், லீக் சுற்று முடிவில் புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
தமிழ் தலைவாஸ் உள்பட 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.
Next Story






