என் மலர்
நீங்கள் தேடியது "CSG"
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த 25-வது ‘லீக்’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணி 19.3 ஓவர்களில் 120 ரன்னில் சுருண்டது. ஆரிப் அதிகபட்சமாக 36 ரன்னும், கேப்டன் கோபிநாத் 25 ரன்னும் எடுத்தனர். சிலம்பரசன் 3 விக்கெட்டும், திரிலோக்நாத், வருண் தோத்ரி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 13.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 43 பந்தில் 63 ரன் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். இதன்மூலம் திண்டுக்கல் அணி 5-வது வெற்றியை பெற்று ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6-வது தோல்வியை தழுவியது. ஒரே ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்த அந்த அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கோபிநாத் கூறியதாவது:-
இந்தப்போட்டி தொடரில் பேட்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டோம். முதல் 6 ஓவர்களில் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. டூட்டி பேட்ரியாட்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய 2 அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சரியான தொடக்கம் அமைந்ததால் 170 முதல் 180 ரன்கள் வரை குவிக்க முடிந்தது.
தொடக்கம் சிறப்பாக அமையாததே எங்களது தவறு. இதேபோல பந்துவீச்சும் நிலையாக இல்லை. முதல் 4 போட்டிகளில் எங்களுக்கு கிடைத்த சில வாய்ப்புகளை வீணடித்தோம். இது எங்களுக்கு பெரிய பின்னடைவு தான்.
எங்களிடம் திறமைகள் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு வீரரும், தங்களை மறுபரிசீலனை செய்து மேம்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்படி சேப்பாக சூப்பர் கில்லீஸ் அணியின் எஸ் கார்த்திக், பாஸ்கரன் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். எஸ் கார்த்திக் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையிலும், பாஸ்கரன் ராகுல் 14 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

3-வது வீரராக களம் இறங்கிய கோபிநாத் 18 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் ரன்குவிக்க இயலவில்லை.
ஏ ஆரிஃப் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடி 34 பந்தில் 36 ரன்கள் அடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 19.3 ஓவரில் 120 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் எம் சிலம்பரசன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக் கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அபிநவ் முகுந்த் 35 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். ஷாருக் கான் 45 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அந்தோணி தாஸ் 21 பந்தில் 28 ரன்கள் சேர்க்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் பி அருண், ஹரிஸ் குமார் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சேஸிங் செய்து வருகிறது.
இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் பரத் ஷங்கர், பாபா இந்த்ரஜித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பரத் ஷங்கர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 14 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த எஸ் அரவிந்த் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
3-வது விக்கெட்டுக்கு பாபா இந்த்ரஜித் உடன் சுரேஷ் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய சுரேஷ் குமார் 17-வது ஓவரின் 3-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து 37 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 2 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.
மறுமுனையில் விளையாடிய இந்த்ரஜித் 49 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த இந்த்ரஜித் அடுத்த (53 ரன்கள்) பந்தில் ஆட்டமிழந்தார். ரூபி திருச்சி வாரியர்ஸ் 19-வது ஓவரில் 4 சிக்சருடன் 25 ரன்கள் குவித்தது. இந்த்ரஜித் - சுரேஷ் குமார் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் குவித்தது.

கடைசி ஓவரை ஆர் விஷால் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் சுரேஷ் குமார் ஆட்டமிழந்தார். இவர் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 74 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் சேர்க்க ரூபி திருச்சி வாரியர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்து வருகிறது.
இதில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.

7.15 மணிக்கும் தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 6.50 மணியளவில் சுண்டப்பட்டது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டொஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.