search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCBvGT"

    • மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் பெங்களூரு அணி தோல்வியடைய வேண்டும் என்ற நிலை இருந்தது.
    • குஜராத் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. நேற்றைய கடைசி லீக் போட்டியில் 2 போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின.

    இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தது. ஆனால் ரன்ரேட் குறைவாக இருந்தது. இதனால் இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் பெங்களூரு அணி தோல்வியடைய வேண்டும் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் காத்திருந்தது.

    இதனையடுத்து இரவு நடைபெற்ற 2-வது போட்டியில் குஜராத் - பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி விராட் கோலியின் அசத்தல் சதத்தால் 197 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    இந்த போட்டியை டிவியில் பார்த்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    முன்னதாக, மும்பை அணிக்காக கிரீன் மற்றும் சுப்மன் கில் சிறப்பாக ஆடினர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூர் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விராட்கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
    • ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெளியே இருந்த அவரது முகம் ஏமாற்றத்துடன் காணப்பட்டது.

    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த கடைசி 'லீக்' ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் தோற்றது.

    வெற்றிபெற வேண்டிய இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி தோற்றதால் பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    இந்த ஆட்டத்தில் விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடினார். அவர் 61 பந்துகளில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 101 ரன் எடுத்தார். தொடர்ச்சியாக 2 சதத்தை பதிவு செய்தார். மேலும் ஐ.பி.எல்.லில் 7 சதம் அடித்து சாதனை புரிந்தார்.

    விராட்கோலியின் இந்த சதம் பலன் இல்லாமல் போனது. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத் வீரர் சுப்மன்கில் செஞ்சூரி அடித்து குஜராத் அணியை வெற்றி பெற வைத்து பெங்களூரை வெளியேற்றினார்.


    பெங்களூர் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விராட்கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெளியே இருந்த அவரது முகம் ஏமாற்றத்துடன் காணப்பட்டது. அவரால் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை.

    மற்ற போட்டிகள் முடிந்த பிறகு இளம் வீரர்களுடன் கலகலப்பாக பேசி சிரித்த விராட் கோலி, இந்த போட்டி முடிந்த பிறகு சோகமாகவே காணப்பட்டார். குஜராத் அணி வீரர்கள் கோலியிடம் ஜெர்சியில் ஆட்டோகிராப் கேட்டனர். ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த அவர் சோகத்துடனே காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தரும் விதமாக பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த சீசனில் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 14 ஆட்டத்தில் 639 ரன் குவித்துள்ளார். 2 போட்டியில் அவுட் ஆகாததால் சராசரி 53.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 139.82 ஆக உள்ளது. இரண்டு சதமும், 6 அரை சதமும் அடித்துள்ளார்.

    • குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.
    • சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத அணிகள் மோதின. இதில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கேமரூன் க்ரீன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

    இதனையடுத்து இரவு நடந்த மற்றோரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜாராத் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆடிய பெங்களூரு அணி தோல்வியடைந்தது.

    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் தொடரில் 4-வது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தகுதி பெற்றது.

    பெங்களூரு அணிக்கு எதிராக பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    இந்நிலையில், குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.

    அதில், கேமரூன் க்ரீன் மற்றும் சுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடினர். மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்ககளை எடுத்து குஜராத் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.
    • பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெறியேறியது.

    ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    குஜராத் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். தோற்கும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

    இந்த சூழலில் மழையின் காரணமாக பெங்களூரு- குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் தாமதமாக போடப்பட்டது.

    இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில், விராட் கோலி 61 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    தொடர்ந்து, பிளெஸிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், மேக்ஸ்வெல் 11 ரன்களும் லாம்ரார் ஒரு ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அனுஜ் ரவாட் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, யாஷ் தயால், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.

    இதைதொடர்ந்து, குஜராத் அணி 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

    இதில், அதிபட்சமாக 52 பந்துகளில் சுப்மன் கில் சதம் அடித்து 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து, விஜய் சங்கர் அரை சதம் அடித்து 53 ரன்களும், விரிதிமான் சாகா 12 ரன்களும், டேவிட் மில்லர் 6 ரன்களும் எடுத்தனர். ராகுல் திவாதியா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்ககளை எடுத்து குஜராத் அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    இதனால், பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெறியேறியது. குஜராத் அணியின் வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    • யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கெய்ல் 6 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
    • இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 5 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி- குஜராத் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஆர்.சி.பி களம் இறங்கியது.

    டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், டூ பிளெஸிஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

    ஆனால் மிடில் ஓவரில் ரஷித் கான், நூர் ஆகியோர் சிறப்பாக பந்து வீச டூ பிளெஸிஸ், மேக்ஸ்வெல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் ஆர்.சி.பி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    ஆனால் விராட் கோலி தன்னம்பிக்கையுடன் விளையாடினார். அரை சதம் அடித்த அவர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

    இதன் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அவர் தனது ஏழாவது சதத்தை பதிவு செய்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் ஏழு சதங்கள் அடித்தது கிடையாது.

    ஆகவே, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். யுனிவர்ஸ் பாஸ் என அழைக்கப்படும் கெய்ல் 6 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 5 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    • மழையின் காரணமாக பெங்களூரு- குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் தாமதமாக போடப்பட்டது.
    • நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, யாஷ் தயால், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியுள்ளன.

    பெங்களூருவில் போட்டி தொடங்கும் நேரத்தில் மழை வெளுத்து வாங்கியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    குஜராத் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வென்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    ஆனால், மழையால் போட்டி நடைபெறுமா இல்லை ரத்தாகுமா என்ற நிலை எழுந்தது. போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். பெங்களூரு அணிக்கு ஒரு புள்ளி வழங்கினால் 15 புள்ளிகள் பெறும். மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். தோற்கும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

    இந்த சூழலில் மழையின் காரணமாக பெங்களூரு- குஜாராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டாஸ் 8 மணியளவில் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.

    இதில், விராட் கோலி 61 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். தொடர்ந்து, பிளெஸிஸ் 28 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களும், மேக்ஸ்வெல் 11 ரன்களும் லாம்ரார் ஒரு ரன்னும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அனுஜ் ரவாட் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, யாஷ் தயால், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது. 

    இதைதொடர்ந்து, குஜராத் அணி 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

    • போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.
    • குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தற்போது பெங்களூருவில் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவது தாமதமாகும் என தெரிகிறது. மழை நிற்காவிட்டால் போட்டி ரத்தாகும் என தெரிகிறது.

    போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். குஜராத் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது. பெங்களூரு அணிக்கு ஒரு புள்ளி வழங்கினால் 15 புள்ளிகள் பெறும்.

    மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். தோற்கும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    ×